நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, December 31, 2009

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே!


தினம் பூக்கும்
பூக்கள் அதிசயமல்ல......
தினம் உதிக்கும்
சூரியன் அதிசயமல்ல......
அவ்வப்போது பொழியும்
மழையும் அதிசயமல்ல......
புது வருடம் மட்டும்
ஏனிந்த அதிசயம்? ஆனந்தம்.....
காலங்கள் கடந்ததைத் திரும்பிப் பார்க்கும் ஆனந்தமா?
பழைய போட்டோ ஆல்பம் புரட்டும் ஆனந்தமா?
சாதித்ததைப் பகிரும் ஆனந்தமா?
இன்னும் சாதிக்க எல்லை விரிக்கும் ஆனந்தமா?
பதித்த சுவடுகளில் மீண்டும் கால் வைத்துப் பார்க்கும் ஆனந்தமா?
வாழ்வைக் கொண்டாட ஒரு நாள் கிடைத்த ஆனந்தமா?
எதுவாயிருந்தாலும் இன்று போல் என்றும் ஆனந்தமாயிருக்க
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Tuesday, December 29, 2009

படிக்கும் இயந்திரங்கள்

அது ஒரு மூன்று பேர் அமரும் இருக்கை.அவர்கள் அங்கே வந்து உட்கார்ந்த நேரத்திலிருந்து அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தேன்..........அம்மா,அப்பா,ஒரு சின்ன தேவதை.கடந்து போன ஒரு பழ வியாபாரியிலிருந்து, பேருந்தில் எழுதியிருக்கும் திருக்குறள் வரைக்கும் அவ்வ்ளோ அழகாக குழந்தைக்கு எடுத்துச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே வந்தார்கள்....கவனித்துக் கொண்டே வருவது சுகமாக இருந்தது.

பஸ் ஆற்றைக் கடந்த போது ஆற்றின் வரலாறு.............பாலத்தைக் கடக்கும் போது...........பாலம் கட்டும் வித்தை, மரம்,மலை,குகை பற்றி ........இப்படி பஸ் பயணம் ஒரு வகுப்பறையாக மாறிப் போயிருந்தது.அந்தக் குட்டி தேவதையும் அலுக்காமல் சலிக்காமல் கற்றுக் கொண்டே வந்தது. நானும் என் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களும் இப்படி இருந்தால் எவ்வ்ளோ நல்லாருக்கும் என்று கனவுலகத்தில் மிதந்து கொண்டே அந்தக் குடும்பத்தை ரசித்துக் கொண்டிருந்தேன்.......எனக்கும் அந்த பஸ் வகுப்பறையில் படிப்பது பிடித்தேயிருந்தது.....

தடைப் பட்டது பாடம்....ஒரு நிறுத்தத்தில் பஸ் நின்றது............நிறைய பேர் ஏறினார்கள். அம்மாவும் அப்பாவும் அவசரமாகச் சொன்னார்கள்..........
"செல்லம் நல்லா நகர்ந்து உட்கார்ந்துக்கோ ... வேற யாராவது வந்து உட்கார்ந்துரப் போறாங்க........"

படிக்கும் பாடங்கள் குழந்தைகளை மனிதனாக்கவேண்டுமேயன்றி
படிக்கும் இயந்திரங்களாக்கி விடக்கூடாதென்பதில் பிடிவாதமாயிருக்கும் எனக்கு ஒரு பயம் கலந்த கவலை வந்தது

கால்கள் இருக்கும் பிரக்ஞையில்லாமல் இன்னும் தவழச் சொல்லிக் கொடுப்பதுதானே நாம் கற்றுக் கொண்டது என்னும் பெருமூச்சுடன் கண்களை மூடிக் கொண்டேன் ........மனது வலித்தது.......

Saturday, December 26, 2009

பிரத்தியேகமாய் மழையும் பெய்யட்டும்!

வருடம் முழுவதும் போட்ட சண்டைகளுக்காய்
சமரசம் பேசுவதாய்க் கூறிக்கொண்டு
மீண்டும் மீண்டும் வலிகளைப்
பிரதியெடுக்காமல் மௌனித்திருந்தேன்....

வருட இறுதியில்
என்னால் பறக்க முடிந்த
உயரம் இவ்வளவு தான் என்பதை ஏற்காமல்...........
அடுத்தகட்ட நடவடிக்கையாய்
சிறகுகளை நீவி விட்டுக் கொண்டு
இன்னும் பறக்க உயரம் தீர்மானித்தேன்......

வருட இறுதியின் உழைப்பிலிருந்து சற்றே
இளைப்பாற ஈரமாய் மென்காற்று வீசட்டும்
மழை பிடிப்பவர்களுக்காய் தனியே
பிரத்தியேகமாய் மழையும் பெய்யட்டும்!

சம்பிரதாய வார்த்தைகளை விட்டொழித்து...........
இப்படியும் புது வருட வாழ்த்துச் சொல்லலாம்தானே!!

Monday, December 21, 2009

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்-2

அந்த மழைக்கால இரவில்
திடீர் உறவின் வருகைக்கு
வீடு புரண்டு படுத்துக் கொண்டது..........

யாருக்கும் நிற்காத மனிதர்கள்

எதற்கும் கவலையில்லாமல் அள்ளித் தெளிக்கும்
வார்த்தை அலங்காரங்களைச் சீரணித்தும்
மாய உலகில் வாழ்ந்து கொண்டும்
இரண்டு நாள் வீடு ரெண்டு பட்டது.... ........

இல்லாமற் போய்விடும் கவலையில்

கடந்து போன நொடிகளையெல்லாம்
நொடிநொடியாய் பிரதியெடுக்க
முயற்சிக்கும் கவன ஈர்ப்புச் செய்கையாக

புகைப்படமெடுத்துக் கொண்டது வீடு!

கண் கலங்கியபடி விடை பெற்றுச்

சென்ற சில நிமிடங்களில்
உச்சக்கட்ட சுதந்திரம் இதுதான்
என்று மௌனமாகப் பயணிக்கின்றது வீடு.............

சமயங்களில் பிரிவு கூட

விடுதலையாக அர்த்தம்
செய்து கொள்ளப் படுகின்றன!

Monday, December 14, 2009

ரெண்டாவதாக.....

இரண்டாவது என்பது எவ்வ்ளொ வலி தரக் கூடியதுன்னு அனுபவிச்சாதான் புரியும்.
இந்தா....... அக்காவின் சட்டை பாவாடையில் ஆரம்பித்து ஸ்லேட்,பேனா, ஷூ,தொப்பி,சைக்கிள்,புத்தகம்....இப்பிடி இரண்டாவதாக அவளிடம் தஞ்சம் கொண்டிருந்த பொருட்கள் அதிகம்.அவை மேல் அவளுக்கு எப்போதும் இது தன்னுடையது என்னும் உணர்வு வந்ததேயில்லை.அந்தப் பொருட்களில் அக்காவின் நிழல் விழுந்து விடுகிறது.அக்காவின் வாசம் அந்தப் பொருட்களில் நிறைந்திருக்கும்.

முதல் என்பதற்கு மட்டும் ஏன் அப்படி ஒரு வசீகரம்?
முதல் டீச்சர்,முதல் பேனா,முதல் கடிகாரம்,முதல் புடவை, முதல் கடிதம்,முதல் பரிசு,முதல் மழை,முதல் காதல்,...இப்படி நிறைய முதல்கள் நினைவுப் பெட்டகங்களூடே தங்கிவிட.......இரண்டாவது டீச்சர், இரண்டாவது பேனா,இரண்டாவது கடிகாரம்,இரண்டாவது புடவை,இரண்டாவது கடிதம்,இரண்டாவது பரிசு,இரண்டாவது மழை,இரண்டாவது காதல்.....இப்படி ரெண்டாவதை நினைவடுக்குகளில் தேடித்தான் பாருங்களேன் ஒன்றும் அகப்படாது....

"ம்ம்ம்....ரெண்டாவதும் பெண்ணா?"
அப்படிப் பிறந்தவள்தான் அவள்.....முதல் எல்லாமே அவளுக்கு ஞாபகம் இருப்பதில்லை...........ஞாபகத்தில் வைத்துக் கொள்வதுமில்லை வைத்துக் கொள்ளப் பிடிப்பதுவுமில்லை...வலுக்கட்டாயமாக மறக்க நினைப்பவைகள்தான் மனதில் பிடிவாதமாக நினைவில் தங்கிவிடும் போல.......

அவள் மட்டும் தன்னுடைய முதல்களை மறந்து ,ரெண்டாவதுகளைப் பத்திரப் படுத்தத் தொடங்கினாள்.


"அப்பாடா......முதல் மனைவியாகத்தான் போகிறேன்......இருந்தாலும் அந்த வீட்டின் ரெண்டாவது மருமகளாகத்தான்.........ஹ்ம்ம்"........என நினைத்துக் கொண்டே அம்மாவிடம் அவள் தன் உறுத்தலைச் சொன்னாள்...............

அம்மா..........அவள் தலையை வருடிக் கொண்டே ..........."நான் அஞ்சாவது பொண்ணு.....உங்கப்பாவுக்கு மூணாவது தாரம்........."....
அவள் கண்ணில் குபுக்கெனக் கண்ணீர்..............

Wednesday, December 9, 2009

நான் ஙே வாகியதும்.....ஙே வாக்கியதும்.1

வண்டி வாங்கிய புதிது.எப்போதும் அவங்கதான் பெட்ரோல் டாங்க் நிரப்பி விட்டு வருவார்கள்.அன்று அவங்க வீட்டிலில்லாத நேரம்...வேற வழியில்லாமல் நானே பெட்ரோல் போடப் போனேன்.

வேர்த்து வழிந்தது..எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது.
"என்னடா இது ஏன் பெட்ரோல் போடுபவன் என் வண்டிப் பக்கம் வரவேயில்லை?"என யோசனையாயிருந்தது...

நான் நின்ற இடத்தில் வண்டிகளும் வந்து நிக்கவில்லை காலியாகத்தானிருந்தது.
எனக்குப் பின்னால் வந்தவர்களெல்லாம் பெட்ரோல் நிரப்பிவிட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள்.
கோபத்துடன்.."இங்கே வாப்பா"என்று கத்தினேன்.
"என்னம்மா ஸ்கூட்டிக்கு டீசல் போடப் போறீங்களான்னான்?"
நான் ஙே!
டீசல் போடுமிடத்தில் நின்றுகொண்டிருந்திருக்கிறேன்!

Monday, December 7, 2009

என்றேனும் பசுமையாய் இருந்திருப்பேன்...


என் கிளைகளில்
என்றேனும் பூக்க்கள் ஊஞ்சலாடியிருக்கும்...
என் வேர்களில் ஈரம் இணைந்திருந்திருக்கும்
என் மடியில் கவிழ்பூக்கள் நூறு முத்தமிட்டிருக்கலாம்.....
என் நிழலில் ஒரு குடும்பம் சிரித்துப் பேசியிருக்கலாம்.....

இலைகளையும் பூக்களையும் உதிரவிடாமல்
காவல் காக்கவுமில்லை
நான் பசுமையாய் இருந்த
நிமிடங்களைச் சேகரிக்கவும் இல்லை.....

இப்போதிந்த இளைப்பாறும்
பறவைகளில்லாக் கிளைகளும்
பூவாசமில்லாத் தனிமையும்
பூக்களின் போதையில்லாத
இலையசையா நிசப்தமும்....
பயமாயிருக்கிறது.............

என் செய்ய? கூடியிருக்க.........
எங்களுக்கில்லை முதியோர் இல்லங்கள்.......

Wednesday, December 2, 2009

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள் -1


படித்துத் தூக்கியெறியும் பத்திரிக்கையும்..........
ஜோடி பிரிந்திருக்கும் செருப்பும்....
கொடிச் சேலையும்,திரைச்சீலையும்,
ஆங்காங்கே கிடக்கும் தலையணையுமாய்,
திறந்திருக்கும் ஜன்னல் கொண்டு வந்தசருகும் ........
கூடு கட்டப் பறக்கும் குருவி உதிர்த்த
சிறகுமாய் ....
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்.................

ஓடி ஓடிப் போட்டுக் கொள்ளும் பவுடரும் லிப்ஸ்டிக்குமாய்...........
இடம் மாறிக் கொள்ளும் இருக்கைகளும்,திரைச்சீலைகளும்.............
இடுக்குகளுக்குள் ஒளிந்து கொள்ளும் பத்திரிக்கைகளும்.....
கொடிகளுக்கு விடுதலையளிக்கும் சேலைகளும்....
அலமாரிகளுக்குள் முடக்கப்படும்
எண்ணெய் சீசாக்களும்,சீப்புக்களும்......
உடைமாற்றிக் கொள்ளும் கட்டில்களும்
தலயணை உறைகளும்....................
உதறி விரிக்கப்படும் மிதியடிகளும்,
ஜோடி சேர்க்கப் படும் செருப்புகளும்
நேர்ப்படுத்திக் கொண்டேயிருக்கும் வீடுகள்.............

கலைவதும் நேர்ப்படுத்துவதுமான தினசரி
இயக்கங்களைச் சுமந்தபடி
அசையாமல் நின்றது வீடு.................
ம்ம்ம்.........வீட்டிலிருப்பது போரடிக்கிறது!

Thursday, November 26, 2009

பசங்க எப்பவுமே இப்பிடித்தானா?

"ஜன்னலைக் கொஞ்சமாய்த் திறந்து கொஞ்சமாய் மேகம் பிய்த்துக் கொண்டு வந்து ஷோ கேசில் வைத்திருக்கிறேன்......ஜன்னல் திறக்கும் போது ஐஸ் மழைக்கட்டி உள்ளே வந்து விழுந்ததாக்கும்"அம்மா திட்டினாங்க இல்லாட்டி உனக்கும் கொஞ்சம் மேகம் கொண்டு வந்திருப்பேன்"

சின்ன வயதில் ஏரோப்ளேனில் முதல்முறையாய் பயணம் செய்த மூர்த்தி சொன்ன அண்டப் புளுகு கேட்டு வாய் பிளந்து நின்றிருக்கிறேன்........

"எங்க மாமா செத்துப் போனாங்க .......இன்னிக்குக் காலைலேதான் வயித்து வலியாலெ......... வயிறு வெடிச்சு....இன்னிக்குக் காலையில் சாப்ட தோசை கூடத் தெரிஞ்சுது தெரியுமா"

அப்பிடீன்னு கூடப் படித்த சிவா அரை நாள் லீவ் ஏண்டா எடுத்தேன்னு கேட்டப்பொ சொன்ன ஆகாசப் புளுகுக்குக் கூட வாய் பிளந்துதான் போனேன்....

அப்புறம்...........

நான் எது சொன்னாலும்.........
"ஜஸ்ட் நானும் அதேதான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க மேடம்"
அப்படீன்னு ரீல் விடும் கோ-ஆர்டினேடர் ஷர்மாவின் புளுகு மூட்டைகளைப் பார்த்து அப்பப்போ வாய் பிளந்து கொண்டிருந்தாலும்.........

இது டாப்பு!

"117 டிக்ரீ காய்ச்சல் மேடம் "
நேற்று ஏண்டா வரல்லைன்னு +2 படிக்கும் அபிஷேக்கைக் கேட்டதுக்கு சொன்ன அணுகுண்டுப் புளுகுக்கு நான் "ஙே" வாகாமல் என்னா பண்ண?
????

Sunday, November 22, 2009

சுய விலாசமிட்ட தபால் கார்டு...........


எப்போதுமே எப்பவுமே தபால்காரர்களிடம் ஒரு தனி ஈர்ப்பு உண்டு எனக்கு.......புது தகவல் கொண்டு வருவதனாலா...அல்லது எதுவென்று தெரியாது....தினமும் எனக்கு ஏதாவது கடிதம் வரவேண்டும் என எதிர்பார்ப்பவள் நான்...

ஆனால் அந்த வயதில் அத்தனை கடிதம் போடும் நட்புகள் அறிமுகம் இல்லாததால்.............புத்தகங்கள் பத்திரிக்கையில் ஏதாவதில் சுய விலாசமிட்ட தபால் கார்டு அனுப்புங்கள் என்றால் போதும் அனுப்புவதுதான் முதல் வேலை.....அது தோட்டக் கலை கற்றுத் தருவதாயிருந்தாலும் சரி....ட்ரான்சிஸ்டர் ரிப்பேர் செய்யக் கற்றுக் கொள்ளச் சொல்லித் தருவதாயிருந்தாலும் சரி சுய விலாசமிட்ட தபால் கார்டு அனுப்பி விட்டுத்தான் மறுவேலை......

இப்பிடி அனுப்புவதோடு மட்டுமல்லாமல்....தினமும் பதில் வந்துவிட்டதா....என்று காத்துக் கிடப்பதும் உண்டு.........12:35க்கு தபால்காரர் வருவார் .....வந்துட்டாரா...வந்துட்டாரா...ன்னு தெருமுனையை எட்டி எட்டிப் பார்த்தே காலும் தரையும் தேய்ஞ்சுருக்கும்....இதுக்காக அம்மாகிட்டே வாங்காத திட்டு இல்லை....அப்படி இப்ப்படீன்னு வந்தவைகளை அது என்ன குப்பையாக இருந்தாலும் ஒண்ணு விடாமல் படித்து முடிப்பதுமில்லாமல்.....அதைப் பற்றி அடுத்தவங்களுக்கு சொல்லி அறுப்பதிலும் மன்னி நான்......

திருமணமாகி ஆஹமதாபாத் வந்த பின் அம்மாவிடமிருந்து ஒரு கடிதம் வந்து சேர எட்டு நாட்கள் ஆகும்.....எட்டாவது நாள் கடிதம் வரல்லைன்னா அவ்வ்ளோதான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கொண்டாடீருவேன்.......
இப்போ தபால்காரரை தீபாவளி ஹோலிக்குப் பார்க்கிறதோட சரி..............

அதே தான்....அந்த எதிர்பார்ப்புதான்....இந்த வலைப்பூவை நான் விரும்புவதற்கு முக்கிய காரணமாகக் கூட இருக்கலாம்.........இப்பவும் அதே ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது......

இப்பவும் அதைத்தானங்க பண்றேன்....சுய விலாசமிட்ட தபால் கார்டு........பதிவு..... போட்டுட்டு உங்க கமென்ட் .....தபால்காரர் எப்போ வரும்னு காத்துக்கிட்டே இருக்கிறதுதானே வேலை!.......அப்படியும் இப்படியுமா 200 சுய விலாசமிட்ட தபால் கார்டு போட்டாச்சு ...போட்டாச்சு!!!!!!

Monday, November 16, 2009

காணும் காட்சியில் தெய்வம் கண்டேன்!

மழை ஊரை உருட்டித் தள்ளியது. பனி உடம்பை உருக்கியது. போயே ஆகவேண்டுமா? காலையிலிருந்து வேலை கையைக் காலை
அசத்தியது...அடாது மழை பெய்தாலும் போயே ஆகவேண்டும் மனம் அடம்
பிடித்தது. அப்படித்தான் போனேன்.
அது ஒரு கல்வியாளர்களுக்கான தனிப்பட்ட அழைப்பிதழ்.
Ability unlimited......differently abled. அப்படித்தான் சொல்லிக் கொண்டார்கள்..










ஷோ பார்த்து முடிந்ததும் ...........
நான் தூசியானேன்
இதயம் காலியானது.
சக்கர நாற்காலியில்
ராமாயணம்
மஹாபாரதம்
பரதநாட்டியம்
கதகளி,மார்ஷல் ஆர்ட்
யோகா சூஃபி ....என்று.........

அவர்கள் ஆடினார்கள்
அவர்கள் ஓடினார்கள்
அவர்கள் பாடினார்கள்
அவர்கள் சண்டையிட்டார்கள்
அவர்கள் நடித்தார்கள்
அந்த அரங்கம் அமைதியில்
அலறியது..................
அத்தனை விழிகளும்
குளித்திருந்தன..............
யாருக்கும் யாரிடமும்
பேச எதுவுமில்லை.........
தெரிந்தவர்களுடன் புன்னகை
கூட பாரமாகிப் போனது...

MAGICAL MOMENT!!

உணர்வுகளை எழுத்துக்கள்
விவரிக்க முடியாது என்பதை
முதன்முறையாக ஒத்துக் கொள்கிறேன் .........

இந்தக் கடவுளின் குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்த
குரு சையது சலாலுதீன் பாஷாவுக்கு என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள்........
இந்த நிகழ்ச்சியின் வீடியோக்களைப் பார்க்க..............இங்கே

Thursday, November 12, 2009

சூரியன் குடிக்கலாம் வாங்க!

கொஞ்சம் சூரியன் குடிக்க
கைகளை நீட்டிக்
கையில் எடுக்கக்
கையிடுக்கில் நிற்காமல்
நழுவி ஓடியது சூரியன்.........

வெயில் மினு மினுக்கும்
ஆற்று நீரைச் சொன்னேன்!

Tuesday, November 10, 2009

மழை பொழிந்தது இங்கே!



நவீன விருட்சம் அது
தலைகீழாய் முளைத்திருந்தது....
பூவும் இலைகளும் வானம் நோக்கி
உதிர்ந்து வீழ்ந்தது..........
பூக்களைப் பிடிக்கமாட்டேன்
என்று கைவிரித்தது வானம் ............
மழை பொழிந்தது இங்கே!

Friday, November 6, 2009

அமித்தம்மாவுக்கும் புதுகைத் தென்றலுக்கும் என்னா பிரச்னை?

அமித்தம்மாவுக்கும் புதுகைத் தென்றலுக்கும் என்னா பிரச்னை?அட நீங்க வேற.....ஒண்ணூம் பிரச்னையில்லே..... ஒரே நேரத்தில் என்னைத் தொட‌ர்ப‌திவுக்கு அழைத்த‌தைத் தவிர.......
அமித்தம்மாவுக்கும் புதுகைத் தென்றலுக்கும் ந‌ன்றி.
அரசியல் தலைவர்

பிடித்தவர்:???????
நடிகர்
பிடித்தவர்:எல்லோரிடமும் ஏதோ ஒன்று பிடித்துத்தான் இருக்கிறது....
சிரிப்பு நடிகர்:
பிடித்தவர்: விவேக்
இயக்குநர்
பிடித்தவர்: பாலசந்தர்
ந‌டிகை
பிடித்தவர்: நதியா
இசையமைப்பாளர்
பிடித்தவர்: அப்பப்போ ஏ.ஆர் .ரஹ்மான்,அடிக்கடி இளையராஜா,எப்பவும் எம்.எஸ்.விஸ்வநாதன்.
நடன இயக்குநர்

பிடித்தவர்: பிரபுதேவா
பாடலாசிரியர்
பிடித்தவர்: கண்ணதாசன்
கவிஞர்

பிடித்த‌வ‌ர்: வைரமுத்து
எழுத்தாள‌ர்
பிடித்தவர்: பாலகுமாரன்,சுஜாதா
விளையாட்டு வீரர்
பிடித்தவர்:ஸ்ரீகாந்த்

இந்தத் தொடரை, தொடர அழைப்பவர்கள் :
அடர் கருப்பு காமராஜ்,வானவில் வீதி கார்த்திக்,முத்துச்சரம் ராமலக்ஷ்மி,கலகலப்பிரியா,ஞானசேகரன்.......இவங்கதான் இன்னும் எழுதலைன்னு நினைக்கிறேன்.

டிஸ்கி1: என்னா பிடிச்சவங்க பற்றி மட்டும் எழுதிருக்கேன்னு பார்க்கிறீங்களா? படித்தது,பார்த்தது ,கேட்டது,ரசித்தது...இப்பிடி எல்லாவற்றிலும் அட...இது நல்லாருக்கேன்னு வாய் பிளந்ததுலே பிடிக்காதது பற்றி ஒரு தெளிவு இல்லை........யோசிச்சுட்டு இருக்கேன் பிடிக்காதது பற்றி.............

Friday, October 30, 2009

தலையெழுத்தும் சரியில்லைதான்..



சூறாவளிச் சுற்றுப் பயணம் செய்தார்கள்....
பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்....
போராட்டங்களைத் தொடங்கி வைத்தார்கள்......
உண்ணாவிரதங்களை முடித்து வைத்தார்கள்......
மைக் பிடித்து நிறைய முழங்கினார்கள்...........
காகிதங்கள் பல கையெழுத்திட்டார்கள்....

இதில் கேசம் சரியில்லை
இதில் முகம் தெரியவில்லை
இதில் ஒளி சரியில்லையென
புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு
வலைப் பூக்களில் வலையேற்றப்பட்டன...............

ஈழத்தமிழர்களின் தலையெழுத்தும்
சரியில்லைதான்............

Wednesday, October 28, 2009

நானூறு ரூபாய் செருப்புககு ஐநூறு ரூபாய் தண்டம்........

"குட்டிம்மா...பார்த்து ஏறு"
"அம்மா....இதைப் பிடிங்க"
"ஏங்க இதைக் கொஞ்சம் பிடிங்க நான் குட்டிம்மாவை ஏற்றி விடுகிறேன்.."
மூவருமாய் ரயிலில் தங்கள் இடம் தேடி அமர்ந்து கொண்டனர்.
குட்டிம்மாவுக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கலாம்.. துரு துருவென்றிருந்தது.
கண்கள் நிலவு போல பளபளத்தது.அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே மனதுக்குள் மழையடிப்பது போலிருந்தது.
குட்டிம்மா "தண்ணீ" தண்ணீ " என்று கத்தியது.
"என்னங்க தண்ணீர் பாட்டில் வாங்கிட்டு வர்றீங்களா?"
"இல்லம்மா சிக்னல் போட்டாச்சு.....கொஞ்ச நேரத்திலே ட்ரெயினிலேயே கொண்டு வருவான் வாங்கிடலாம்."
"தண்ணீ தண்ணீ ...".குட்டிம்மா கத்த ஆரம்பித்தது........

"இரும்மா....அப்பா....."ஏன ஏதேதோ சொல்லி அதைச் சமாதானப் படுத்திக்கொண்டிருந்தாள் அம்மா.. ரயில் நகர ஆரம்பித்தது....
குட்டிம்மா அழுது கொண்டே திடீரென தன் கால் ஷூ வைக் கழற்றி வெளியே ப்ளாட்ஃபார்மில் வீசியெறிந்தது..இதை எதிர்பார்க்காத அம்மா சுளீரென்று முதுகில் வைத்தாள்...

"நானூறு ரூபாய்..........போச்சு...இப்போ என்ன பண்றது?"
"ஏங்க இறங்கிப் போய் எடுத்துட்டு வர்றீங்களா.."
"ட்ரெயின் மூவ் ஆயிடுச்சேமமா....நேற்றுதான் வாங்கினது...."
"ட்ரெயின் மெதுவாதான் போகுதுங்க....எடுத்துட்டு அடுத்த கோச்லே ஏறிடுங்க..."
"செயினைப் பிடித்து இழுக்கலாமா?"
"அட நீங்க வேற நானூறு ரூபாய் செருப்புககு ஐநூறு ரூபாய் தண்டம் அழப் போறீங்க...."
இப்பிடி ஆளாளுக்கு செருப்பைத் திரும்ப எடுக்க ஐடியா இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்
"யாருக்காவது கிடைக்கட்டும்மா" என்றவாறு தன் இன்னொரு ஷூவையும் கழற்றி அநத ஷூவுக்குப் பக்கததில் தூககி எறிந்தாள் குட்டிம்மா.

Wednesday, October 21, 2009

இந்தியா எப்படி உருப்படும்???? [சர்வேசன்500 - 'நச்'னு ஒரு கதை 2009 - போட்டிக்கு]

"ஏங்க உங்க பிங்க் டீ ஷர்ட் எடுத்து வைங்க.அது நீங்க போடறதே இல்லை"

"குட்டிம்மாவோட பட்டுப் பாவாடையை எடுத்து வைங்க...சின்னதாப் போச்சு"

"கிழிஞ்சுருக்கும்மா...இது வேண்டாம்"
"அட...பட்டுப் பாவாடைங்க..தைத்துப் போட்டுக் கொள்வார்கள்....சும்மா வைங்க"

"இந்தாங்க இந்த பொம்மையெல்லாம் எடுத்து வைங்க.........."
"இதெல்லாம் வேண்டாம்மா........இங்கே பாரு உடைஞ்சுருக்கு"

"அட...நீங்க வேற...இதுமாதிரி பொம்மையெல்லாம் அந்தக் குழந்தைங்க பார்த்திருக்கக் கூட மாட்டாங்க...........லேசாதானே உடைஞ்சுருக்கு... கொடுக்கலாம்"

"ஹலோ சுதா...இன்னிக்கு எங்க கல்யாண நாள்..ஊஹும்...கொண்டாட்டம் எல்லாம் ஒண்ணும் இல்லை......எப்பவும் போல அனாதை இல்லம் போய் ட்ரெஸ் கொடுத்துட்டு சாப்பாடு போட்டுட்டு வரப் போறோம்...அதுதான் ப்ரோக்ராம்."

"மீனாம்மா...அனாதை இல்லம் போய் ட்ரெஸ் கொடுத்துட்டு சாப்பாடு போட்டுட்டு வரப் போறோம்......வீட்டைப் பார்த்துக்கோங்க......"

"ரெஜிம்மா....நீங்க எங்களுக்கும் சேர்த்து பால் வாங்கி வைச்சுருங்க....அனாதை இல்லம் போய் ட்ரெஸ் கொடுத்துட்டு சாப்பாடு போட்டுட்டு வரப் போறோம்"

அப்பாடா...ஏந்தான் இப்படி தம்பட்டம் அடிக்கிறளோ???....ஒருவழியா காரில் ஏறியாகி விட்டாயிற்று.......
சிக்னலில் கார் நின்றது ..........."அம்மா...பசிக்குது.......சாப்பிட்டு ரெண்டு நாள் ஆவுதும்மா.........ஒரு ரூபாய் கொடும்மா" ஒரு சிறுவன் கிழிந்த ஆடைகளுடன்...............பார்க்கவே பரிதாபமாய்.......கையில் ஒரு குழந்தையுடன்................

"ம்ம்ம்...இந்தப் ப்ரச்னை எப்போதான் தீருமோ??? இப்படிச் சோம்பேறியாய் உழைக்காமல் திரிந்தால் இந்தியா எப்படி உருப்படும்............போடா அந்தப் பக்கம்" எனறபடி கார் கண்ணாடியை ஏற்றி விட்டாள்.....
துணிப் பைகளைப் போலவே மனமும் கனத்தது..........

Friday, October 16, 2009

பத்தே நிமிடத்தில் தீபாவளி ஷாப்பிங்!

இன்னுமா முடியலை? சீக்கிரம்மா........" கொஞ்சம் அன்பைக் குழைத்துச் சொன்னாலாவது கேட்பாள் என்று...........ம்ம்மா என்று சொன்னேன்..
ஊஹும்....அவள் அசையக் காணோம்.

காலையில் 11 மணிக்கு ஆரம்பித்த ஷாப்பிங்........மணி 5 இன்னும் முடியலை.அலைஞ்சு பார்த்தாதாங்க புரியும்.
இது பத்தாவது கடை.

"ஏங்க மூணாவது கடையில் பார்த்தோமே அந்தக் கலர் நல்லாருக்கா? இல்லே ஏழாவது கடையிலே பார்த்தோமே அந்த பச்சையா...இல்லே இது எடுத்துக்கவா??"

ஐயோ இன்னொரு தடவை மூணாவது கடைக்கும் ஏழாவது கடைக்குமா?
தாங்காதுப்பா.......அனிச்சையாய் "இது ரொம்ம்ப நல்லாருக்குமா" என்றேன்.

சந்தேகத்துடன் என்னைப் பார்த்தாள்.
"ஏதுக்கும் மூணாவது கடைலே இன்னொரு தடவை பார்த்துடலாம்"என் பதிலை எதிர்பார்க்காமல் நடந்தாள்...

மூணாவது கடையிலும் என்னைச் சந்தேகமாவே பார்த்துவிட்டு ஏழாவது கடையில் ஒரு வழியாக அந்தப் பச்சைச் சேலையை எடுத்தாள்.........இன்னும் அந்தப் பச்சைக்கு மேச்சிங்காக இன்னும் பல ஐட்டம்களைத் தேர்ந்தெடுத்து முடிக்க மணி 9.

அப்பாடா ஒரு வழியாக முடிததாள்...
சாப்பிட்டுட்டே போயிடலாங்க ................ ரொம்ப டையர்டா இருக்கு........ " வேண்டாமென்றால் விடவா போகிறாள்.

"சரி வா....சாப்பிடப் போகலாம்"
"உங்களுக்கு இன்னும் ட்ரெஸ் எடுக்கலியே........."
ம்ம்ம்ம்....அந்த நினவாவது இருக்கேன்னு சந்தோஷப் படறதுக்குள்ளே

"அதை 10 நிமிஷத்துலே எடுத்துடுங்க...........அப்புறம் சாப்பிடப் போகலாம்...பசி உயிர் போகிறது." என்று முடித்து என்னை "ஙே" வாக்கினாள்!!

அனைருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!!

Thursday, October 15, 2009

கடவுளைக் கூட சேர்த்துக்க மாட்டோம்...



வாணி அந்தப் பிள்ளையாரையே பார்த்துக் கொண்டிருந்தாள்......மெல்ல எழுந்து அந்தச் சிலைக்குப் பக்கத்தில் போய் அதைத் தடவினாள்.....ஆயுதம் பிடித்துக் கொண்டிருந்தக் கைகளில் சிறியதாய் ஒரு கீறல்.கிட்டே போய் பார்த்தால் மட்டுமே தெரியக் கூடிய சின்னக் கீறல்..மனது கொஞ்சமாய் வலித்தது.....

எவ்வளவு பிடித்து வாங்கிய சிலை..இப்படிக் கீறல் விழுந்துடுச்சேன்னு வருத்தமாய் இருந்தது.அம்மா சொல்வாங்களே.....உடைந்த சிலையை வீட்டில் வைக்கக் கூடாதுன்னு.....பரவாயில்லை ...இருந்துவிட்டுப் போகட்டும் என வீட்டின் பின்கட்டில் தட்டுமுட்டுச் சாமான்களுடன் அந்த அழகுப் பிள்ளையாரைக் கொண்டு வைத்தாள்.

சாயங்காலமாய் வந்த தோழியிடம் இதைப் பற்றி சொல்லி வருத்தப் பட்டாள்...."ஆமாமா...எங்க அம்மா கூட சொல்வாங்க ...வீட்டில் வைக்கக் கூடாதுன்னு.."

"இப்போ இதை எங்கே வைப்பது..?அதான் பின்கட்டில் தூக்கிப் போட்டு விட்டேன்.."என்றாள் வாணி.

"வீட்டிலேயே இருக்கக் கூடாது வாணி..இதிலே பின்கட்டிலே என்ன? முன்கட்டிலே என்ன? "

"சாமி சிலையாச்சே? வெளியில் போட முடியுமா?...ஆனாலும் மனசு உறுத்திகிட்டே இருக்கு...இதை வீட்டில் வைத்தால் என்னாகுமோ ஏதாகுமோன்னு"

ஒண்ணு செய்யலாமா?.....பேசாமல் இதை நம்ம தெருமுனையிலே இருக்குற பார்க்குக்குப் பக்கதில் இருக்கும் மண்மேட்டில் வைத்துவிட்டு வந்துரலாம்"

"அப்படி வைக்கலாமா " என்றாள் பரிதாபமாய்.

"இதிலென்ன இருக்கு சிலைதானே? வாணி."

இருவருமாய் ஒருமாதிரி விழித்துக் கொண்டே சிலையைக் கொண்டு போய்...ஏதோ திருடப் போவது போல அரையிருட்டாய் ஆனவுடன் அந்த மணல் மேட்டில் வைத்துவிட்டு ஏதோ சாதனை செய்தது போல வீட்டிற்கு வந்தார்கள்...........

வாசலிலேயே வருண் "என்னையும் எங்கேயாவது கொண்டு வைச்சுடுவீங்களாம்மா?" என்றான் போலியோவினால் ஊனமான கைகளைக் காட்டி........

Tuesday, October 13, 2009

புன்னகையென்னும் கடவுச் சொல்....

புன்னகையென்னும் கடவுச் சொல்தான் உறவுக் கணக்கை நேர்ப் படுத்தும் எனத் தெரிந்திருந்தும் வேலைப்பளுவின் காரணமாக புன்னகைக்க மறந்தே போயிருந்தேன்...........

அதுவேதான் சண்டையின் ஆரம்ப காரணமாயிருந்திருக்கலாம்...அது வலுப்பெற்று பெரும் சண்டையாக மாறியிருந்தது.....
அவளிடம் அதிபயங்கரமாக சண்டை போட்ட அந்த அதிகாலை திடீரென்று ஒரு அதிசயமான உணர்வு..அத்தனை கடவுச் சொற்களும் மறந்து போயின....மறந்தே போயின.... ஜிமெயில்,யாஹூ...வலைப்பூ...ஃபேஸ் புக், டவிட்டர்.....இப்பிடி எல்லாமே மறந்து போயிருந்தது......அதுவா...இதுவா.என்று குத்துமதிப்பாக நிறைய வார்த்தைகளைப் போட்டுப் பார்த்தாயிற்று....ஒன்றும் வேலைக்காகவில்லை......கடவுச் சொற்கள் இல்லாமல் இன்னிக்கு வேலைக்குப் போய் என்னத்தைக் கிழிக்கப் போறேன்?....வீட்டிலிருந்தும்தான் என்னத்தைக் கிழிக்கப் போறேன்ன்?...எங்கேயாவது பத்திரப் படுத்தியிருக்கேனா என்று கணினியத் தலைகுப்புறப்போட்டுத் தேடியாயிற்று...ஊஹூம்....மனம் முழுவதும்....கடவுச் சொல்....கடவுச் சொல்....கடவுச் சொல்....

"கணக்கு ஆரம்பிப்பதென்பதுஒரு நிமிடத்துக்குள் முடிந்து விடுகிறது.....
இந்தக் கடவுச் சொல்தான்
அவ்வப்போது காலை வாரி விடுகிறது.....
எத்தனை கடவுச் சொல்தான் நினைவில் வைத்துக் கொள்வது...???"

இப்படித்தான் இவள் கூடச் சண்டைபோட்டாலே ஏதாவது ஏடாகூடமாகிப் போய் விடுகிறது....அது சரியாகினால்தான் எல்லாம் சரியாகும்........எபபடிச் சமாளிப்பது?எப்படிச் சமாதானப் படுத்துவது?????

என் மகள் தன் சினேகிதியுடன் பேசிக் கொண்டிருந்தாள்....
அவளின் சினேகிதி கேட்டாள்.....
" அந்த சிடுமூஞ்சிய எப்படிடீ சமாளிச்சே????"

என் பெண் சொன்னாள்....."I Just used my password!...........Everything was alright!"

கொஞ்சமும் நாகரீகமில்லாமல் நான் குறுககிட்டேன்....." அதென்னம்மா ஸ்பெஷல் பாஸ்வோர்ட்????"
"Just Smile Dad"
"ஆமா அங்கிள் ....எங்க பாஷையிலே பாஸ்வோர்ட்னா புன்னகைன்னு அர்த்தம்"

நான் புரிந்தது போல புன்னகைத்தேன்..............
என் கடவுச் சொற்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது போலிருந்தது....!!!

Friday, October 9, 2009

அதுவா??????இதுவா??????


"என்னாங்க தோசை ஊத்தவா? இட்லியா?"
"தோசை"
மாவு நல்லா பொஙகி வந்துருக்குங்க...இட்லி ஊத்தவா?"
"ம்"
"தேங்காய்ச் சட்னியா? தக்காளிச் சட்னியா???"
"தேங்காய்ச் சட்னி"
தேங்காய் முத்திப் போயிருககு.....தக்காளிச் சட்னி வச்சுடவா?
"ம்"
காபியா ,டீயா???
"காபி"
"டீ காலைலேயே போட்டது இருக்கு தரவா?"
"ம்"
பையனை நீங்க ஸகூல்ல விட்டுர்றீங்களா? நான் விடட்டுமா???
"நீ விட்டுரும்மா...."
"ஏற்கெனவே லேட்டு............அந்த டேமேஜர் கத்துவார்....நீஙகளே விட்டுருங்க!"
"ம்"
"இன்னிக்கு தீபாவளி ஷாப்பிங் முடிச்சுரலாமா????????நாளைக்கா????
"இன்னிக்கு வேலை நிறைய.............நாளைக்கு பார்க்கலாம்"
அட வேலையோட வேலையா இன்னிக்கே முடிச்சுடலாம்...."
"ம்"
"அப்புறம் மதியம் என்ன வைக்க?"
"ஏதாவது வைம்மா.........."
"உங்களைப் போய்க் கேட்டேன் பாருங்க?
ஏங்க இப்பிடி இருக்கீங்க?
எதுலேயாவது முடிவெடுக்கிற தன்மை இருக்கா???
எல்லாம் என் நேரம்!!! எல்லாம் நானே முடிவு பண்ண வேண்டியிருக்கு!"

எப்பவும் போல நான் ஙே!!!!!

அட! இது விகடன் குட் ப்லாக்லெ!!! அவ்வ்ளோ நல்லாருக்கா??

Monday, October 5, 2009

வானம் காணாமல் போயிருந்தது......................




முளைத்திருந்த சிறகுகளை விரித்துப்
பறக்கப் பார்த்தேன்..........
வானம் காணாமல் போயிருந்தது......................

தண்ணீரைக் கொண்டிருந்தது
ஆறு.................
பாதை முடிந்து போயிருந்தது......................

சூரியன் தகதகத்தது..........
என் நிழல் களவு போயிருந்தது...........

கனவு கண்ட இடம்
கை கூடியது...........
ஓட்டத்தின் முடிவில்
பரிசுக்கான நூலையும் அறுத்தாயிற்று........

இனி எனன?
தினமும் நகரும் வாழ்வு..........

மழை பெய்து கொண்டிருந்தது........
அது மட்டுமே மனதை நிறைப்பதாய்
வெற்றி தோல்விகள் பற்றிய நினைவினறி
விசிலடிக்கச் செய்வதாய்
இருந்தது.........

Sunday, September 27, 2009

எப்பவோ மாட்டிக்கினேன்!!!!

எப்பவோ மாட்டிக்கினேன்.. இபபோதான் முடிஞ்சுது! மாட்டிவிட்டவர் இயற்கை.....

1. A – Avatar (Blogger) Name / Original Name : Anbudan Aruna/Aruna Devi
2. B – Best friend? : Susan Anto
3. C – Cake or Pie? pastries
4. D – Drink of choice? Rose milk
5. E – Essential item you use every day? Tooth Brush
6. F – Favorite color? Blue
7. G – Gummy Bears Or Worm? : Dairy Milk
8. H – Hometown? Tuticorin
9. I – Indulgence? ‍ Education
10. J – January or February? - September
11. K – Kids & their names? Janani...Vaishnavi
12. L – Life is incomplete without? friends
13. M – Marriage date? - 19-th August
14. N – Number of siblings? Solve this Equation....2s+2b+2s=X
15. O – Oranges or Apples? grapes
16. P – Phobias/Fears? Heights
17. Q – Quote for today? My alltime quote!
No one plans to fail :but fails to plan!
18. R – Reason to smile? So many!!!!!
19. S – Season? Drizzling rainy season
20. T – Tag 4 People?- Any four who are interested to carry on!!!
21. U – Unknown fact about me? Yet to find out! அதைக் கண்டுபிடிப்பதுதானே சுவாரசியம்..
22. V – Vegetable you don't like? Beetroot
23. W – Worst habit? Screaming when annoyed
24. X – X-rays you've had? Any insurance plans?????
25. Y – Your favorite food? Anything not cooked by me!
26. Z – Zodiac sign? Virgo

1. அன்புக்குரியவர்கள் : என் ஆசைக்குரியவர்கள்
2. ஆசைக்குரியவர் : என் அன்புக்குரியவர்கள்
3. இலவசமாய் கிடைப்பது : அன்பு
4. ஈதலில் சிறந்தது : கல்வி
5. உலகத்தில் பயப்படுவது : நம்பிக்கைத் துரோகம்
6. ஊமை கண்ட கனவு : டாக்டராக......பாடகியாக வேண்டுமென
7. எப்போதும் உடனிருப்பது : பேனா
8. ஏன் இந்த பதிவு ? இயற்கை கோபித்துக் கொள்ளக்கூடாதுன்னுதான்
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : கல்வி
10.ஒரு ரகசியம் : .................
11.ஓசையில் பிடித்தது : குருவியின் கீச்கீச்
12.ஔவை மொழி ஒன்று : தமிழ்!!!???(ஔவைக்கு எத்தனை மொழி தெரியும்??)ஹி..ஹி.....
13.(அ)ஃறிணையில் பிடித்தது: கம்ப்யூட்டர்.
கொஞ்சம் லேட்டானதால இநத வீட்டுப் பாடம் இன்னும் செய்யாத
யாராவது நாலு பேர் தொடரலாமே!!!!

Friday, September 25, 2009

நானென்ன அறிவுரை சொல்வது???


கண்ணாடித்தொட்டி மீனுக்கு
கடல் கனவாகவே வருகிறது

காலைக் கட்டிப் போட்டு மாலையாயிருக்கும்
மலருக்குச் செடிக் கனவுகள்

கழற்றி விடப் பட்ட மழைத் துளிகளுககு
வானத்தைப் பற்றிய கனவுகள்

உதிர்ந்த சிறகிற்குக் கூட
பறவைக் கனவுகள்தான்

என் தோட்டத்தைத் தாண்டிப் போகப்
பிடிவாதம் பிடிக்கும் ஒற்றைக்
கிளைப்பூவுக்கு நானென்ன
அறிவுரை சொல்வது???

இருக்குமிடம் எதுவும்
நிரந்தரமில்லை தானே???????

Sunday, September 20, 2009

பாம்புகளும்....ஏணிகளும்....


பரமபதம் விளையாடும் போது பாம்புக் கடிக்குப் பயந்து நடுங்குவதும் ஏணி ஏற்றத்துக்கு குஷியாகுவதும் அந்த விளையாட்டு ஒருவிதமான போதை தருவதும் உண்டு.

அது விளையாட்டு என்பதைக் கூட மறந்து கண்ணீர் மல்க அழுது புரண்டு...ஒரு தாயம் போட்டால் பாம்பு...இரண்டு போட்டால் சொர்க்கம்......என்ற நிலையில் கடவுளே ரெண்டு ரெண்டு....ரெண்டு ரெண்டு........கடவுளே...தாயம் வேண்டாம்.....தாயம் வேண்டாம்.....என்று இப்பிடிச் சில்லறை விஷயங்களுக்கெல்லாம் கடவுளை அவர் வேலையை விட்டுவிட்டு விளையாட்டை வேடிக்கை பார்க்க அழைத்துத் துன்புறுத்தியதுண்டு....தாயம் விழுந்து பாம்பு கடித்துவிட்டால் அதிர்ஷ்டக் கட்டை எனறும் ரெண்டுவிழுந்து சொர்ககம் அடைந்தால் அதிர்ஷ்டக்காரி என்றும் மயங்கியதுண்டு...............

இப்போ ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் அது வாழ்க்கை விளையாட்டுன்னு புரிய ஆரம்பிச்சிருக்கு...பாம்பு எத்தனை தடவை கடிச்சாலும் விடாமல் கலங்காமல் சிரித்துக் கொண்டே மேலேற வேண்டும் என்பதுதான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்....எத்தனை ஏணி ஏற்றிவிட்டாலும் உழைப்பு ஒன்றுதான் நிலையான நிஜமான சந்தோஷத்தைத் தரும் என்பதுதான்
கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.......

பாம்புகளும் ஏணிகளும் இல்லாத பரமபதம் .............வெறும் கோட்டுக் கட்டங்கள்....
வாழ்க்கை வெறும் கோட்டுக் கட்டங்களினால் நிரம்பியிருந்தால் வாழ்க்கை ருசிக்காது.....

Sunday, September 13, 2009

க.....கா....ப.....அ......பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

இந்தத் தொடரை என்னை எழுத அழைத்தது ஞானசேகரன்.....

காதல் மனிதனுக்கு அவசியமா?
காதல் ....................புத்தக இடுக்கில் மயிலிறகு.
புரட்டும் போதெல்லாம் இனிமை.................
வாழ்வு இனிமையாக இருக்கவேண்டாமா?
அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?
அழகு................மயில் தோகையில் மயிலிறகு.
பார்க்கும் போதெல்லாம் அருமை.......................

உதிர்ந்துவிட்டால்?????
பணம் அவசியமா?
பணம்..........காதுக் குடைச்சலில் காதுக்குள் மயிலிறகு.
தேவைப் படும் போது ஆஹா!!!!
ஆஹா!!!!
கடவுள் உண்டா?
கடவுள்............மனதை வருடும் மயிலிறகு.
மனிதர்கள் கைவிடும் போது ........................
காயப்படுததும் போது ......................................
தன் சக்திக்கு அப்பாற்பட்ட நிகழ்வின் போது..........

பிரியமானவர்களின் பிரிவின் போது........................
கண்மூடி இறுகப் பற்றிக் கொள்ளும்
அந்த மயிலிறகை
இந்தப் பிஞ்சு விரல்கள்..................

அழகு,காதல்,பணம், கடவுள்?

இவைகளைப் பற்றிய உங்களின் நிலையென்ன? என்பதுதான் தொடரின் நோக்கம். இந்த தொடரின் விதிப்படி என்னை தொடர்ந்து ஐவரை இந்த தொடருக்கு அழைப்பது. இதோ அந்த ஐவரை அழைத்துவிடுகிறேன்!!!!
எல்லோரும் ஒழுங்கா வீடடுப் பாடம் எழுதி முடிங்கப்பா!

Tuesday, September 8, 2009

நாம்தான் எவ்வளவு சுயநலவாதிகள்????


அந்தப் பறவையின் பெயர் தெரியவில்லை.....ரொம்பச் சின்னூண்டாய் இறக்கைகளை நிமிடம் விடாமல் பட படவென்று அடித்துக் கொள்வதாய் இருந்தது...இரண்டு மூன்று நாட்களாய்த்தான் எனக்குப் பழக்கம்..என் பயணத்தில் என் கூடவே நெடுந்தூரம் வந்து என்னை வழியனுப்புவது போல வந்து திரும்பும்....இலக்கில்லாமல் தானே பறவைகள் பறக்கும்?...இது ஏன் என் கூடவே வருகிறது...........????????

ஒரே பறவைதானா? நேற்றும் அதற்கு முன்தினமும் கூட இந்தப் பறவையேதான் வந்ததா?நான் உன்னைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன் ...குட்டிப் பறவையே...நீயும் என்னைப் பற்றி யோசிக்கிறாயா???

நாம்தான் எவ்வளவு சுயநல வாதிகள்?ஒரு பறவையிடம் கூட எந்தவித எதிர்பார்ப்புமின்றி இருக்க் முடிவதில்லை.இந்தக் கொடுக்கல் வாங்கல் இல்லையென்றால் உலகமே நின்று விடுமோ?

அந்தப் பறவையும் கூட என்னிடம் எதையோ எதிர்பார்த்துத்தான் வருகிறதோ?....ம்ம்ம் சே! இந்த மனித புத்தி...! அந்தப் பறவை மெல்ல என்னருகில் வந்து திடுக்கென சிறகுகளை ஒரு உதறு உதறிச் சென்றதில் சில இறகுகளை என்னருகில் உதிர்த்துவிட்டு எதுவும் எதிர்பார்க்காமல் பறந்து சென்றது.....

சுருக்கிவைத்த உலகத்தை நானும் ஒரு உதறலில் உதறி விரித்து விட்டு காரணங்கள் ஏதுமில்லாத உற்சாகத்தில் அகன்ற வான்வெளியில் பறக்க ஆரம்பித்தேன்...........

Friday, September 4, 2009

சில பள்ளிகளும்.. சில ஆசிரியர்களும்.. சில பெற்றோர்களும்....சில குழந்தைகளும்...

இதில் சொல்லியிருக்கும் அனைத்தும் ஒரு சில பள்ளிகளையும்,ஒரு சில ஆசிரியர்களையும் சில பெற்றோர்களையும் சில குழந்தைளைப் பற்றி மட்டுமே....

ஆசிரியப் பணி முன்பு போல வெறும் சொல்லிக் கொடுப்பதுடன் நின்றுவிடுவதில்லை...அவர்களின் ஒரு நாளைய வேலைப்பளுவின் அளவைப் பார்த்தால் மலைத்து விடுவீர்கள்...எட்டு வகுப்புகளில் ஏழு வகுப்புகள் பாடம் நடத்த வேண்டும்..ஏழு வகுப்புகளும் நின்று கொணடேதான் பாடம் நடத்தவேண்டும்.....ஏழு வகுப்பின் நோட்டுப் புத்தகங்களைத் திருத்த வேண்டும். பரீட்சைக்க்குக் கேள்வித்தாள்கள் தயார் செய்யவேண்டும்...திருத்தவேண்டும்...தினமும் வித விதமாக காலை அசெம்பிளிக்குப் பிள்ளைகளைத் தயார் படுத்தவேண்டும்.....ஆண்டுவிழாவிற்குத் தயார்ப் படுத்தவேண்டும்..இடையிடையே விதவிதமாக அவ்வப்போது நடத்தப்படும் பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளுக்குத் தயார்ப் படுத்தவேண்டும்....இதற்கிடையில் குற்றம் சொல்வதற்கென்றே உள்ள பெற்றோரையும் சமாளிக்க வேண்டும்.....இன்னும் எததனையோ வேண்டும்கள்....

பள்ளிகளில்.........

மேற்கூறிய அனைத்தையும் செய்தாலும் மிகக் குறைந்த சம்பளம் கொடுப்பதும், 10,12 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களை இரவு பகல் பாராமல் பள்ளிக்கு ஸ்பெஷல் க்ளாஸ் நடத்தச் சொலவது,ஆசிரியர்களின் வார்த்தைகளை விடப் பெற்றோர்களின் வார்த்தைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பது,குழந்தைகளின் முன்னிலையிலேயே ஆசிரியர்களைக் கண்டிப்பதும்,பெற்றோரைத் திருப்திப்படுத்த பெற்றோரின் முன்னிலையிலேயே ஆசிரியர்களைக் கண்டிப்பதும்......சிலபஸ் என்ற வட்டத்துககுள்ளேயே சுற்றச் சொல்வதும், இன்னும்
மெமோ ,ரெமைண்டர்,வார்னிங்க் இப்படி எத்தனையோ காகிதக் கட்டுப்பாடுகளில் ஆசிரியர்களைச் சிக்க வைத்திருப்பதும்.............

பெற்றோர்களில்.........

பணம் கட்டுவதாலேயே அந்தப் பள்ளியின் ஆசிரியர்களை அடிமை போல் நடத்துவது...ஒரு நோட்புக்கில் ஒரு இடத்தில் ஒரு எழுத்துப் பிழைக்குக் கூட காரை எடுத்துக் கொண்டு புகார் சொல்ல பள்ளிக்கு வருவது...குழந்தைகளை கண்டிப்பதற்குத் தடை.குழந்தைகளை அடிக்கக் கூடாது.குழந்தைகளிடம் கோபப் படக்கூடாது.தவறைச் சுட்டிக் காட்டக் கூடாது...............இப்படி நெறிமுறைப் படுத்தும் அத்தனை வழிகளையும் அடைத்து விட்டு இப்போ குழந்தைகளிடம் ஒழுங்குமுறைகள் பறிபோய் விட்டதாக அலறுவதில் என்ன லாபம்? இதையெலலாம் செய்யாதீர்கள் என்று இப்படியெல்லாம் கோபப் படும் பெற்றோர்கள்தான் எப்போதும் 90 மார்க் வாங்கும் குழந்தை ஒருமுறை 70 மார்க் வாங்கினால் தூக்கிப் போட்டு உதைக்கிறார்கள். நம் குழந்தையிடம் கூட 24 மணி நேரமும் அன்புடனேயே இருப்பதில்லை...அக்கறையிருப்பதனால்தான் அவ்வப்போது கண்டிப்பதோடு அடித்தும் திருத்துகிறோம்....அதே அக்கறையில்தான் ஆசிரியர்களும் கோபிப்பதோ கண்டிப்பதோ அடிப்பதோ....நான் இரக்கமில்லாமல் அடித்து விளாசும் ஆசிரியர்களைப் பற்றிப் பேசவில்லை

ஆசிரியர்களில்...........

ஒரு சில ஆசிரியர்கள் பாடங்களைக் குழப்புதிலேயே குறியாயிருக்கிறார்கள்...காரணம் அப்போதுதானே டியூஷனுக்கு வருவார்கள் என்ற நல்லெண்ணாத்தோடதான்......வகுப்றையில் எப்போதும் டியூனுக்கு ஆள் சேர்ப்பதிலேயே குறியாக இருப்பது.....அது போக டியூஷனுக்கு வராத குழந்தைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது....சந்தேகம் கேட்டால் சொல்லித் தராமல் இருப்பது இவையெல்லாம் கூட நடந்து கொண்டுதான் இருக்கிறது...கோபத்தில் கண்மண் தெரியாமல் அடித்துத் துவைப்பது....குழந்தைகளை அவர்களின் பலவீனத்தை வகுப்பறையில் கிண்டல் கேலி செய்வது....

குழந்தைகளில்.....

வகுப்பறைக்குள் ஆசிரியர்களிடம் மரியாதையில்லாமல் நடந்து கொள்வது......எடுத்தெறிந்து பேசுவது....கொஞ்சம் கடிந்து கொண்டால் கூட ப்ரெஸ்ஸைக் கூப்பிட்டுட வேண்டியதுதான்னு சொல்கிற ஜம்பமும், நாளைககு நீ பள்ளியிலேயே இருக்கமாட்டே அப்படீன்னு மிரட்டலும், யாராவது ஆசிரியர் வராவிட்டால் எங்கப்பா போட்ட போடுலே "தூக்கிட்டாங்க அவரை"ன்னு காலரை உயர்த்திக் கொள்வதும்......


இதற்கெல்லாம் தீர்வு சொல்வதல்ல இந்தப் பதிவு....எங்கே தவறுன்னு அலசுவதற்கு ஒரு வாய்ப்பாக வரும் ஆசிரியர் தினத்தை உபயோகித்துக் கொண்டேன் என்பதுதான் உண்மை....

Tuesday, September 1, 2009

அதுக்குப் பதிலா....இது....(எங்க ஊரு பசங்க-2)

அரசாங்கம் என்னென்ன இன்னும் பண்ணலாம்னு நம்ம பசங்களைக் கேடட போது...............நம்ம பசங்க கொட்டிய முததுக்கள்!!!!!

சிகரெட் பிடிக்காதேன்னு சொல்றதை விட்டு.......சிகரெட்டைத் தயாரிப்பதைத் தடை பண்ணலாம்.......

பாலித்தீன் பைகள் உபயோகிக்காதீங்கன்னு சொல்றதை விட்டுட்டு பாலித்தீன் பைகள் தயாரிப்பதைத் தடை பண்ணலாம்.........

குடி குடியைக் கெடுக்கும்னு சொல்றதை விட்டுவிட்டுக் குடியை ஒழிக்கலாம்......

"ஒன்வே"லெ போகாதேன்னு சொல்றதுக்குப் பதிலா எல்லா இடததையும் "டூ வே" ஆக்கிடலாம்............

பான்பராக் சாப்பிடாதேன்னு சொல்றதை விட்டுவிட்டு பான்பராக் தயாரிப்பதைத் தடை பண்ணலாம்.........

நோ பார்க்கிங்னு போர்ட் வைக்கிறதுக்குப் பதிலா பார்க் பண்ண இடம் தரலாம்......

முத்துக்கள் இன்னும் கொட்டலாம்............

Monday, August 31, 2009

இதெல்லாம் ஒரு டெக்னிக்குங்க!!!


"எப்போ வருவீங்க?"

"லேட்டாகும்..."

"லேட்டாகுமா????"

"அதான் சொல்றேன்லே லேட்டாகும்னு.."


"ஏன் லேட்?"

"லேட்டாயிருச்சு...."

"அதான் ஏன் லேட்?"

"கொஞ்சம் லேட்டாயிருச்சு.."

"5 மணிக்கு ஏன் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சீங்க?மீட்டிங்க்லெ இருந்தேம்மா..."

"அதென்ன உங்க ஆஃபீஸ்லெ காலையிலெல்லாம் மீட்டிங்க் வைக்காம சாயங்காலம் வைக்கிறாங்க????"

இந்த டையலாக் எல்லாத் தங்கமணியும் ரங்கமணியும் பரிமாறிக் கொண்டவையாகத்தான் இருக்கும்....

இதுக்கு அர்த்தம் ஒருவரையொருவர் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதாகவோ...அல்லது சந்தேகப் படுவதோ அல்ல...

ரெண்டு பேருக்குமே தெரியும் இறுக்கிப் பிடிக்கும் அந்தக் கயிற்றின் ஒரு நுனி ரங்கமணிகிட்டேயும் இன்னொரு நுனி தங்கமணிகிட்டேயும் இருக்குன்னு....

அப்பப்போ இரண்டு பேரும் அதை இழுத்துப் பார்த்து நல்லா இறுக்கமாதான் பிடிச்சுருக்காங்களான்னு பார்த்துக்கத்தான் அந்த இழுவை?

ரெண்டு பேருக்குமே தெரியும்......அந்தக் கயிறு ஒரு நேசத்தின் இழை என்பது.......அதில் ஒரு நுனி பிடியில் இருந்து நழுவினாலும் மறு நுனியில் பல்ப் எரியும்.........கொஞ்ச நாள் இழுக்காமே இருந்து பாருங்க வாழ்க்கை செம போர் அடிக்கும்...இதெல்லாம் ஒரு டெக்னிக்குங்க!.

Sunday, August 30, 2009

இலவசமாய் ஒரு அழகியுடன் ஒரு பயணம்...................

                                                         வெறும் ஆங்கில வலைப்பூவுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்த நேரம்....தமிழ் எழுதத் தெரியாமல் எதையெதையோ தரவிறக்கம் பண்ணி அரைகுறையாக எழுதி.....அங்கிருந்து வெட்டி...இங்கே ஒட்டி...என்று என்னென்னமோ செய்து.......பத்து நாட்களில் ஒரு பதிவுக்கு மூக்கால் அழுது எழுதிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த அழகியின் அறிமுகம் கிடைத்தது....
இன்று ஒரு நாளைக்கு ஒரு பதிவு சிரித்துக் கொண்டே போட  முடிகிறது....
அன்று முதல் இன்று வரை அழகியுடனான பயணம் மிகவும் இனிமையாகவே இருக்கிறது.....
 அதற்காக அழகிக்கு  நன்றிகள் பல!
அந்த அழகிதான் முற்றிலும் இலவசம்....
அழகியைப் பற்றி அறிந்து கொள்ள.....இங்கே.....
மேலும் தெரிந்து கொள்ள.........இங்கே...

Saturday, August 29, 2009

கடவுள்...........108


இது என் நண்பரின் மெயில் மூலம் அறிந்து கொண்டது...
பாண்டிச்சேரியிலிருந்து கோயம்பத்தூருக்குப் பஸ்ஸில் போகும்போது..திடீரென்று விபத்து அடிபட்டதில் ஒரு பொண்ணும் அதன் குழந்தையும் (15 மாதம்)பயங்கரமாக அடிபட்டிருந்தார்கள் ....குழந்தை பேச்சு மூச்சில்லாமலிருந்தது....முதல் உதவிப் பெட்டி பஸ்ஸில் இல்லை...

நேரம் நடு இரவு 12:57...உடனடியாக அந்த நண்பர் 108-க்கு த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் சொல்லி முடிக்கும் போது 1:02 நிமிடம்....ஒரு நிமிடத்துக்குள் 108-லிருந்து ஃபோன் வந்தது.....மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்து விபரம் சொல்லி முடிக்க மூன்று நிமிடம் ஆனது....மணி 1:08-க்கு ஆம்புலன்ஸ் வந்து கொண்டு இருப்பதாக தகவல் மீண்டும் 108-லிருந்து..

1:17-க்கு ஆம்புலன்ஸ் வந்து உடனடியாக மருத்துவ உதவி கொடுத்துக் குழந்தைக்கு நினைவு திரும்பியது.....பெண்ணுக்கும் உடனடி மருத்துவ உதவி கிடைததது....இதில் அதிசயம்.....அந்த நண்பரைத் தவிர யாருக்குமே EMRI-108 (EMRIEmergency Management and Research Institute) சேவையைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை...அவசர காலத்தில் மின்னல்வேக உதவி அளிக்கிறது இந்த EMRI-108 ......

இது ஒரு எடுத்துக்காட்டுதான்....எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் எந்தவிதமான உதவியென்றாலும் மின்னல்வேக நடவடிக்கைதான்.................18நிமிடங்களுக்குள் உதவி கிடைததுவிடும்..........................இந்த எண் சேவை தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா,குஜராத்,ராஜஸ்தான்,அஸ்ஸாம்,மேகாலயா,மத்தியப் பிரதேசம்,கோவா,உத்தராகான்ட் ஆகிய இடங்களில் உள்ளது.திடீர் விபதது,குற்றங்களைப் பதிவு செய்ய,மற்றும் தீ விபத்து போன்ற சமயங்களில் கடவுளாகக் கை கொடுக்கிறது....108!!!

எப்போதும் எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய எண்...."108"

Friday, August 28, 2009

உறவுகளைச் சேமிப்போம்!!!


என்னாது "கல்யாணமா?..நோ சான்ஸ்..நீ மட்டும் போயிட்டுவாம்மா."
"என்னங்க என்தங்கை கல்யாணத்துக்குக் கூட வர முடியாம அப்பிடி என்ன வேலை?"
"உனக்கென்னம்மா தெரியும்?....தலைக்கு மேல வேலை இருக்கு."
"ஆமாமா எனக்கென்ன தெரியும்?போனவாரம் உங்க தம்பி பொண்ணுக்குக் மொட்டை போட்டு காது குத்துறதுக்கும் போகலை....."
என்னம்மா "மொட்டை போட்டு காது குத்துறதுல்லாம் ஒரு விஷயமா? இதுக்கெல்லாம் போய் லீவ் போடமுடியுமா?"
"இப்பிடி எதுக்குமே போகாம எனக்குத்தான் கெட்டபேர்..ஏதோ நாந்தான் உங்களைப் போகவிடாமல் புடிச்சு வச்சுருக்க மாதிரி என்னைப் பேசுறாங்க"
இங்கே பாரும்மா மற்றவங்களை மாதிரி ...மாசம் பத்தாயிரம் ரூபாய் வாங்கலை....மாசம் பொறந்தா முப்பதாயிரம் ரூபாய் வாங்குறேனாக்கும்...என்னாலே இப்பிடி நினைச்ச நேரமெல்லாம் லீவ் போடமுடியாது....
இதை எல்லோருக்கும் சொல்லிப் புரிய வை.... "

"சரிங்க...இதெல்லாம் பரவாயில்லங்க....உங்க நெருங்கிய நண்பன் குமார் விபத்துலெ இறந்ததுக்குக் கூட ஒரு நடை ஊருக்குப் போயிட்டு வர முடியலை இல்லை?"
"அய்யோ என்னடி புரியாதவளா இருக்கே?...எனக்கு அந்த குமாரைத்தான் தெரியும்...அவனே இல்லைங்கறப்போ அங்கே போய் யார்கிட்டே என்னத்தைக் கேக்க?இதுக்கு லீவ் வேற போடச் சொல்லறே?"
ஆறு மாசத்துக்கு அப்புறம்...
"மிஸ்டர் கண்ணன்...இது தவிர்க்க முடியாதது..."
சார் இந்த ஆஃபீஸ்க்காக நான் உயிரையே கொடுத்திருக்கேன் சார்......... என்னைப் போய்...."
I'm helpless Mr. Kannan.."
எல்லாத்தையும் இந்த ஆஃபீஸ்க்காக நான் இழந்திருக்கேன் சார்"
"You were paid for that Mr.Kannan"
உலகமே இருண்டது....என்னையா வேலையிலிருந்து தூக்கிவிட்டார்கள்....எப்படியெல்லாம் ஓடி ஓடி உழைத்தேன்..என்னையா?"


சவிதா...ரொம்ப மனசுக்குக் கஷ்டமாயிருக்கு...வா...ஊருக்குப் போய் எல்லோரையும் பார்த்துட்டு வரலாம்"
சவிதா புருவம் உயர்த்திப் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் கிளம்பினாள்...
அட?? கண்ணனா?எப்பிடிப்பா இருக்கே...பார்த்து எவ்வ்ளோ நாளாச்சு..எவ்வ்ளோ இளைச்சுப் போயிருக்கே...வேலை வேலைன்னு ...உடம்பைக் கவனிச்சாதானே???..கண்ணா...

ண்ணான்னு....வீடு அமர்க்களப்பட்டது... பாசமலர்கள் சூழ்ந்து கொண்டன....சொர்க்கம் இதுதானோ???

அதற்காகவா இதை இழந்தேன்....இழப்பின் வலி இதயத்தைத்தாக்கி கண்ணில் கண்ணீர் கரை கட்டியது... கண்ணன் இத்தனை நாள் இழந்த சொர்க்கத் தருணங்களுக்காகக் கதறி அழுதான்.

வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும்தான்...உழைப்பின் மோகத்தில் உறவுகளையும் உணர்ச்சிகளையும் இழந்துவிடவேண்டாம்............
வாருங்கள்.......இன்று முதல் உணர்வுகளைப் பகிர்வோம்......உறவுகளைச் சேமிப்போம்!!!

Thursday, August 27, 2009

பகிரப்படாத அன்பென்பது...........

நகம் கடித்துத் துப்பும்
மணித்துளிகளில்
எதுவும் சொல்லாமல் நீ
எழுந்து போன நிமிடங்களில்
தேநீர் அருந்த ஆளில்லாமல்
ஆறிப் போயிருந்தது..........


பகிரப்படாத அன்பென்பதும்
சொல்லாத காதலென்பதும்
சேர்ந்தருந்தாத தேநீரும்
நேரம் கடந்த பின் உபயோகமில்லை.....


இழப்புக்களையெண்ணி மூடிககுள்
சிறை வைத்த பேனாக்களைப்போல
வெளியே முகம் காட்டும்
நேரமெல்லாம் கண்ணீர் விட்டு
அழுது கொண்டேயிருக்கிறது...... மனம்.......


அந்தப் பகிராத அன்பும்
அந்தச் சொல்லாத காதலும்
அந்த அருந்தாத தேநீரும்
உபயோகமில்லையெனத் தெரிந்திருந்தும்
ஜன்னலருகில் எதையோ எதிர்பார்த்துக்
காத்துக் கொண்டேயிருக்கிறது.........

Wednesday, August 26, 2009

மறக்க முடியாத தருணங்கள்.................

மறக்க முடியாத தருணங்கள்.........மறக்கபபடவேண்டிய தருணங்கள்....எல்லோர் வாழ்விலும் அவ்வப்போது இப்படிப்ப்பட்ட தருணங்கள்...நிகழ்ந்திருக்கும்..சில சம்பவங்கள் அப்படியே மனதோடு ஒட்டிக் கொண்டுவிடும் விரும்பியும் விரும்பாமலும்....... 

மனதின் விசேஷ வீச்சுகளில் இதுவும் ஒன்று..எதை விட்டு விலகவேண்டும் என நினைக்கிறோமோ அது விட்டுவிலக முடியாத அளவு கவ்விப் பிடித்துக் கொள்ளும்.அது போல மனம் கவ்விக் கொண்ட தருணங்கள்...நான் மறக்க நினைக்கும் தருணங்கள் இவை..சிலநேரங்களில் என்னை நினைத்து நானே வெட்கித் தலைகுனியும் தருணங்கள் இவை. 

ஒரு இரவு நேரம்....அப்பாவுக்கு நேரம் கிடைக்காததால் அப்பா ராத்திரி இரண்டாவது ஷோ படத்துக்குத்தான் கூட்டிட்டுப் போவாங்க..அப்படி ஒரு தடவை படம் முடிந்து வரும்போது....ஒரு பெண்ணை ரெண்டு பேர் கதறக் கதற ஒரு தெருவுக்குள் இழுத்துக் கொண்டு போனார்கள்...அவளின் அலறல் சத்தம் இன்னும் என் காதில் கேட்டுக் கொண்டிருக்கிறது....எந்த கதாநாயகனும் காப்பாற்ற வரவில்லை...எங்களில் யாரும் கதாநாயகர்களாகவும் ஆகவில்லை...அவள் என்ன ஆனாள் என்றும் தெரியவில்லை..... 

மற்றொன்று நாங்கள் திருமணமாகி தனியாக ஜெய்ப்பூரில் ஒரு பார்ட்டிக்குப் போய்விட்டுத் திரும்பும்போது ஒருவர் ஸ்கூட்டரிலிருந்து கீழே விழுந்து கிடந்தார்.....இன்னும் ஓரிரு வண்டிகளும் பார்த்தும் பார்க்காதது போலக் கடந்து போயின.....ஒரு முடிவெடுக்கமுடியாமல்...சிறிது நேரம் தயங்கிவிட்டு குடிச்சுட்டு விழுந்திருப்பாரோ...என்று எங்களுக்கே கேட்காத குரலில் முணு முணுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிப் போயே விட்டோம்...இன்னும் அந்த சாலையைக் கடக்கும் போது....அந்த ஒருவரின் நினைப்பு வந்து மனதை அரிக்கிறது.... 

சினிமாவில் வருவது போல் ஒருதிடீர் வீரம் தேவையான பொழுது ஏன் நம்மிடம் வருவதில்லையென்று அடிக்கடி நினைப்பதுண்டு........இப்பவும் கூட.......அடிக்கடி நினைப்பதுண்டு....

Tuesday, August 25, 2009

இந்த மன்றம் சந்தித்த வினோத வழக்குகள் சில........

அந்த அம்மாவும் அப்பாவும் இப்படித்தான் ஆரம்பித்தார்கள்.....

"நீங்க இன்னும் கொஞ்சம் ஸ்டிக்கா (strict) இருக்கணுங்க...கொஞ்சம் கூட மேனஸ் (manners)இல்லைங்க பையன்கிட்டே..."

"சொல்லுங்க...அப்படி என்ன பண்றான் உங்க பையன்?"
"பள்ளிக் கூடம் விட்டு வீட்டுக்கு வந்தவுடன் ரிமோட்டை எடுத்து வச்சுக்கிட்டு எங்களை ஒரு சீரியல் பார்க்க விடமாட்டேங்குறான்.....அவனே டி.வி பார்த்துக்கிட்டிருக்கிறான்"

இதுக்கு நாங்க எப்பிடி ஸ்டிக்கா இருக்கறதுன்னு நான் ஙே!!!!

அடுத்த அம்மா அப்பாவின் கவலை....

"என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்குறான்...எதைச் செய்யக் கூடாதோ அதைத்தான் செய்யறான்....கொஞ்சம் கண்டிக்கக் கூடாதாங்க...,...""அப்படி என்ன செய்யறான்?"எப்பவும் செல் போனில் எதையாவது பண்ணிக்கிட்டிருக்கான்....செல் ஃபோனின் செட்டிங்கை மாத்திக்கிட்டேயிருக்கான்..சமயத்துலே நானே ஃபோன் பேச முடியாத படி எதையெதையோ பண்ணி வச்சுடறான்...கொஞ்சம் சொல்லிக் கண்டிச்சு வைங்க..."

இதுக்கு நாங்க எப்பிடி கண்டிப்பா இருக்கறதுன்னு நான் ஙே!!!!

மற்றொரு வழக்கு...
"மேடம்...இவங்க அப்பா ஊருக்குப் போகும்போதெல்லாம் ஒரு நாளைக்கு 50 ரூபா கேட்டு அடம் பிடிக்கிறான்...ரெண்டு நாள் அவங்க அப்பா வீட்டிலே இருந்தாலும் ஏம்பா நீங்க டூர் போகலையான்னு கேட்கறான் மேடம்....கொஞ்சம் சொல்லி வைங்க..."

எத்தனை தடவைதான் நான் "ஙே"வாகிறது???நீங்களே சொல்லுங்க...??????

Sunday, August 23, 2009

மின்னுவதெல்லாம் நட்சத்திரமல்ல!!!!

பெரிய பெரிய பத்திரிக்கையிலெல்லாம் நம்ம எழுத்தை எங்கே போடுவாங்க? நாமே நம்ம வலைப்பூவிலெ எழுதிக்கவேண்டியதுதான்...இப்பிடியாக எழுத ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே சீனா அய்யா அவர்கள் வலைச்சரத்தின் ஆசிரியராக்கினார்...வலைச்சர ஆசிரியரா இருந்தப்போ எழுதியதைப் படிககணுமா??????......இங்கே போங்க....

அது போக ஒரு நாள் கதாநாயகி, முட்டாள்,வில்லி,எழுத்தாளர் ஆகிட்டோமில்லே அப்பிடீன்னு எழுதிய இந்த சீரீஸ் எனக்கு ரொம்பப் பிடித்தது...இதை மறுபடியும் படிக்கணுமா???? இங்கே போங்க.....இங்கே போங்க.. இங்கேயும் போங்க...

எனக்குத்தெரியாது நான் நட்சத்திரமா இல்லை வெறும் கண்ணாடிக்கல்லான்னு தெரியாது ........... இருந்தாலும் இந்த ஒருவாரம் கண்சிமிட்டுவதற்கும் மினுமினுக்கவும் மறுபடி ஒரு மலரும் நினைவுகளுக்கும் வாய்ப்பளித்த

திரட்டி.காம் நிர்வாகத்திற்கு நன்றி!!!

Thursday, August 13, 2009

புரியவில்லயே எங்கிருந்து ஆரம்பிப்பதென்று...????

வறுமைக்கும் பசிக்கும்,
என்ன சம்பந்தம் என
யோசிக்கக் கூட நேரமின்றி
ஈட்டலுக்கு ஓடிக் கொண்டிருக்கும்
மனித இயந்திரங்களாய்
நாங்கள்.....
சுதந்திரக் காடுகளில்
உலவ மட்டும் அனுமதிக்கப் பட்ட
சிங்கங்கள் நாங்கள்......

இந்தியா எதையெல்லாம் என்னிடம்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதென்று?
எனக்கே தெரியவில்லை....
உதிரம் சிந்தி வாங்கிய
சுதந்திரமெனப் புரிகிறது

என்ன வேண்டும் இந்தியா?
என் உதிரமா?
எடுத்துக் கொள்.......
உயிர் கொடுத்து வாங்கிய
சுதந்திரமெனப் புரிகிறது

என்ன வேண்டும் இந்தியா?
என் உயிரா?
எடுத்துக் கொள் ...........

யார் யாரின் உயர்வுக்கோ உதிரம் சிந்தி
உழைத்து மடியப் போகும்
உயிர்தானே?
உனக்காவது உதவட்டும்
எடுத்துக் கொள்
 உயிரையும்.....

காதலர்தினம்,
நண்பர்கள் தினம்
அப்பாக்கள் தினம்,
அம்மாக்கள் தினம் போல
"சுதந்திரதினம்"
கொண்டாடுவதற்கு ஒருசாக்கு....
இனிப்பு வாங்க,வழங்க ஒரு சாக்கு
சிலருக்கு...........
எனக்கல்ல........

பொறுப்புகளும்
கடமையும்
கண்ணருகில் காவலிருக்கிறது....
இருந்தும் புரியவில்லையே  இந்தியா...
உன் உதயத்திற்கு
எங்கிருந்து ஆரம்பிப்பதென்று...????

Wednesday, August 5, 2009

விருதுகள் வாஆஆஆஆஆஆஆஆஆரம்!!!!


இந்த விருதை எனக்குக் கொடுத்தது இயற்கை, ஞானசேகரன்
ஆறு பேருக்கு கொடுக்கணுமாமே!!!... வெறும் ஆறு பேருக்கு மட்டுமா? அதுக்கப்புறம் நடக்குற சண்டையை எப்படி சமாளிக்க???


இந்த விருதை எனக்குக் கொடுத்தது முரளி குமார் பத்மநாபன்.... ஆறு பேருக்குக் கொடுக்கணுமாமே!..............நிறைய சுவாரஸ்யமான பதிவர்கள் இருக்காங்களேப்பா!!! இப்போ என்னா பண்றது?



இந்த விருதை எனக்குக் கொடுத்தது ஸ்ரீவட்ஸ் இதையும் குறைந்தது ஏழு பேருக்குக் கொடுக்கணுமாமே!!!
விருது கொடுத்தவங்களுக்கு நன்றி!!! நன்றி!! நன்றி!!
நான் கொஞ்சம் லேட் போல! நான் கொடுக்கணும்னு நினைச்சவங்க எல்லோரும் ஏற்கெனவே போர்ட் மாட்டி வச்சிருக்காங்க!........இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்..................என்னைக் கவர்ந்த பதிவர்களை கீழே கொடுத்திடறேன்.....நீங்களே தொகுதியைச் சண்டையில்லாமல் பிரிச்சு எடுத்துக்கோங்க!!! சரிதானே!!!


அந்தோணி முத்து -----சஹாராதென்றல்

காமராஜ் ------------ அமித்து அம்மா

சந்தனமுல்லை ----------- தமிழ்நெஞ்சம்

கார்த்தின் ------------ ராகவேந்திரன்.டி

நிலாரசிகன் ------------ஜெஸ்வந்தி


புதுகைத் தென்றல் -------பிரியமுடன் வசந்த்


கௌரிப் பிரியா -------------சஞ்செய் காந்தி


ராமலக்ஷ்மி --------------பாசமலர்


ராஜேஸ்வரி --------------பாசகி



Monday, August 3, 2009

ஒற்றைச் செருப்புடன் ஒரு பயணம்.......



அதிகாலையில்
நெடுஞ்சாலையில்
ஒரு குட்டி ஒற்றைச் செருப்பும்
சில துளி ரத்தமும்..................

தனியே ஓடிச் சிக்கியிருக்குமோ?
அம்மாவுடன் வரும் போதா???
சைக்கிளில் சிக்கியதா?
பைக்கில் சிக்கியதா??

நடந்தது இதுதான்
என மூளை சொன்னாலும்
நடந்தது அதுவாக
இருக்கக்கூடாதென
மனம் கெஞ்சியது

பயணம் முழுவதும்
தினம் கூடவரும்
ஜன்னலோரச் சிலிர்க்
காற்றையும்
மழைச் சாரலையும்
தவிர்த்து........

அன்று
அந்தக் குட்டி
 ஒற்றைச் செருப்பு
கூடவே பயணித்தது.....

Tuesday, July 28, 2009

களவு போகத்தான் செய்கிறது மனம்!!!

இந்தக் கவிதை யூத்ஃபுல் விகடனில்......நன்றி விகடன்!!!!

கையருகே நட்சத்திரம் என்றும்
குடத்தில் கடல் என்றும்
குவளையில் நதியென்றும்
கைப்பிடிக்குள் வானம் என்றும்
வளையலில் வானவில் என்றும்
தூக்கக் கலக்கக் கனவுகள் விடாமல்
நிஜங்களைத் துரத்தத்தான் செய்கின்றன.....

நினைவுகளும் கனவுகளும்
இல்லையென்றால்
வாழ்வில் இழப்பதற்கு
எதுவுமே இல்லைதான்............

இருந்தாலும்

குளத்தில் விழும் முன்
கண்ணாடியில்
அவசரமாக முகம்
பார்த்துக் கொண்டது
மழை !!!!
என்னும் கனவு
வார்த்தைகளுக்கு களவு
போகத்தான் செய்கிறது மனம்!

Friday, July 17, 2009

எங்க ஊரு பசங்க!!

              ஒரு நாள் பசங்க பரீட்சை எழுதும்போது மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த போது கன்னத்தில் ஒற்றை விரலை வைத்துக் கொண்டிருந்தேன்.
                  
                 ஒரு பையன் எழுந்து நின்றான்..ஏதோ சந்தேகம்தான் கேட்கப் போகிறான் என நினைத்து விரைந்து அவனருகில் சென்றேன்..


"மேடம்...நீங்க விடை சொல்லி உதவுறீங்கன்னு தெரியுது....ஆனால் எந்தக் கேள்விக்கு விடைக் குறிப்பு தர்றீங்கன்னுதான் தெரியல""ன்னான்


நான் புரியாமல் "What do you say?"அப்படீன்னேன்.....


"இல்லே மேடம்......விடைகளைத் தேர்ந்தெடு,பொருத்துக...இதுக்கெல்லாம் கன்னத்தில் ஒரு விரல் வைத்தால் பதில் A, இரு விரல் வைத்தால் பதில் B.....அப்படீன்னு விடைக் குறிப்பு வச்சிருக்கோம் மேடம்...........நீங்க  கன்னத்தில் ஒரு விரல் வைத்திருந்ததால் கேட்டேன் என்றான் ரொம்ப சின்சியராக!!!!...............
நான் ஙே!!!!!!!!!!

Monday, July 13, 2009

இன்னும் எதையெல்லாம் பத்திரப் படுத்த?

அந்தக் கிணறு......
என்றேனும் நிரம்பி வழிந்திருக்கலாம்...
அந்த வற்றிய நதி
என்றேனும் சல சலத்து ஓடியிருக்கும்

அந்த ஆற்றுப் படுகையில்
என்றேனும் ஊத்துத் தோண்டித்
தண்ணீர் ஊறியிருக்கலாம்

ப்ளாஸ்டிக்  பாட்டில்
தண்ணீருக்குக் காசு கொடுத்துவிட்டு
பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்து
பெய்ய ஆரம்பித்த மழையின்

முதல் துளியுடன் கடைசித் துளியையும்
பத்திரப் படுத்தினேன்
என்றேனும் மழை கூட இப்படி
என்றேனுமாய் ஆகிவிடக் கூடுமென்று!

Tuesday, July 7, 2009

போட்டிலே ஜெயிச்சுட்டோமில்லே!!!

 
வணக்கம் அருணா,
      தமிழ்வெளி விளம்பரத்தை கணியுங்கள் பரிசை வெல்லுங்கள் விரைகணை போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துகள்,  இது குறித்த விவரங்கள் இங்கே http://www.tamilveli.com/v2.0/virai-kanai.php

ரூ 250 மதிப்புள்ள புத்தகங்கள் தேர்ந்தெடுப்பது மற்றும் அவைகளை தங்களுக்கு அனுப்புவது குறித்து அடுத்த சில நாட்களில் மின் மடலிடுகிறோம்.
தமிழ்வெளி விரைகணை போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றதற்கு நன்றி...
இப்படிக்க
நிர்வாகி
தமிழ்வெளி.காம்
www.tamilveli.com

  போட்டிலே ஜெயிச்சுட்டோமில்லே!!!  தமிழ்வெளிக்கு நன்றி!!!! நன்றி!!!! நன்றி!!!!

Thursday, July 2, 2009

சாரு நீயா இப்படி?????

வாசிக்க ஆரம்பித்த நாளில் இருந்து நானும் எழுத வேண்டும் என்று ஏதோ ஒரு உணர்வு என்னைப் போட்டு உலுக்கவெல்லாம் இல்லை....எழுத்து ஒரு போதை அப்படீன்னுல்லாம் சொல்லப் போவதில்லை...சும்மா கிடைத்த நேரத்தில் சீரியல் பார்த்து நேரத்தை வீணாகுவதில்லை, அந்த நேரத்தில் வலைப்பூ எழுதுகிறேன் என்பதில் எனக்குப் பெருமையே!

வலைப்பூ இல்லாத காலத்திலும் மக்கள் எழுதிக் கொண்டுதான் இருந்தார்கள்..கவிதை எழுதாத இளைஞர்கள் உண்டா என்ன?....முன்பு காகிதத்தில் எழுதினார்கள்...இப்போ கணினியில் எழுதுகிறார்கள்...முன்பு எழுதினவங்க மட்டுமே படித்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்..இப்போ பிடித்தவர்கள் எல்லாரும் படிக்கிறார்கள்.நாம எழுதினது பத்திரிகைகளில் வெளிவராதா என ஏங்கிக் கொண்டிருந்தோம் ஒரு காலத்தில்...இப்போ நாமே வெளியிட்டுக் கொள்ளாலாம்...
சும்மா இருக்கும் நேரத்தில் ....எழுதுவதில் ஒன்றும் தவறில்லை.......வேலைநேரத்தைக் கெடுத்துக் கொண்டு எழுதுவது சரியில்லைதான்...வலைப்பூ தவிர எதைப் பற்றியும் சிந்திக்க முடியாமல் நேரத்தைத் தொலைப்பதுவும் தவறுதான்!
எதுவுமே எழுதாமலிருப்பது,இப்போதெல்லாம் என்னை நானே தொலைத்து விடுவதைப் போலத் தோன்றுகிறது.......... சும்மா காமெடியா எழுதிகிட்டிருக்கும் போது திடீர்னு இப்படி எழுதத் தோன்றியது.............
சாரிங்க....அருணா நீயா இப்பிடி? அப்பிடி எழுதுவதற்குப் பதிலாக சாரு நீயா இப்படி? அப்படின்னு எழுதிட்டேன் மன்னிச்சுக்கோங்க.......

Monday, June 29, 2009

அவ்வ்ளோதான் ஆட்டம் க்ளோஸ்!!


ஒரு அழகான "பளிச்பின்னால்"... பின்னே என்னாங்க .ஃப்ளாஷ் பேக்" னு சொன்னா ஒரு மாதிரி பேக்கு மாதிரி இருப்பதால் இந்த தமிழாக்கம்...
                                                 நல்லா வெளிச்சம் வரும் வரை தூக்கம்.....அப்புறம் செய்தித் தாளை நிதாஆஆஆஆஆஆஆஆஆஆனமாக மேய்தல்.....ரொம்ப மெல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல காலை உணவு தயாரித்தல், அதை விட ரொம்ப மெல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல அதைச் சாப்பிடுதல்...அப்புறம் வலை,இணையம்,இன்ன பிற.........என்று அருமையாகப் போய்க் கொண்டிருந்த அந்த சில நாட்கள் ஒரு முடிவுக்கு வந்தே விட்டது....................

                                                          ம்ம்ம்......ஆமாங்க......அவ்வ்ளோதான் ஆட்டம் க்ளோஸ்....இன்னிக்கிலிருந்து ஸ்கூலுக்குப் போகணும்.....ஒருநாள் விட்டு ஒரு நாள் பதிவெல்லாம் போட முடியாது...இனி வாரம் ஒரு பதிவுதான்…..ஓடி ஓடி பின்னூட்டமெல்லாம் போட முடியாது..........பாவம் நீங்கதான்.........என் பதிவை எப்படியெல்லாம் மிஸ் பண்ணப் போறீங்களோன்னு எனக்குக் கவலையாயிருக்குது!!!! வர்ட்டா???

Wednesday, June 24, 2009

யாரைத்தான் நம்புவதோ?????


அவங்க சீமா.எட்டு வருடமாக எங்கள் வீட்டில்தான் வேலை பார்க்கிறாங்க.அப்படியொரு நேரம் தவறாமை,வேலையில் சுத்தம்,அக்கறை...எந்தக் குறையும் சொல்லவே முடியாது.....அவங்களை அவ்வ்ளோ நம்பினோம்....

அவங்கதான் இன்று இதைச் செய்தாங்க.அவங்க பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கும்போது நான் திடீரென்று உள்ளே நுழைந்து விட்டேன் அவங்க பதட்டமாக குப்பையை ஒரு பையில் திணித்துக் கொண்டிருந்தாங்க.....எனக்கு சந்தேகமாக இருக்கவே அங்கேயே நின்று கொண்டேன்.அடிக்கடி குப்பையை அவங்களே கொண்டு வெளியில் போடுவாங்க....அன்று எனக்குச் சந்தேகமாக இருக்கவே குப்பை வண்டிக்காரன் வருவான்...நானே போட்டுக்கறேன்னு சொல்லிட்டேன்.....

அவங்க போனதும் பையைத் திறந்து ஆராய்ந்து பார்க்கையில் ஒரு பை நிறைய அரிசி............
இதற்குக் காரணம் ????
என்னுடைய கவனக் குறைவா?
அவங்களை அளவுக்கதிகமா நம்பியதாலா?
இப்போ என்ன செய்வது?
எட்டு வருட உழைப்பைப் பற்றிக் கவலைப் படாமல் அவங்களை வேலையை விட்டுத் தூக்குவதா?
இல்லை அவங்களைக் கூப்பிட்டு நீங்க செய்தது எனக்குத் தெரிந்து விட்டது...இனி அப்பிடிச் செய்யாதீங்க எனச் சொல்வதா?
இல்லை எதுவுமே சொல்லாமல் அவங்களை வேலையைத் தொடரச் சொல்லி விட்டு இனி அவங்களைக் கண்காணிப்பதா?
ஒரே குழப்பமும் வருத்தமும்..........

Monday, June 22, 2009

இயல்புக்கு மாறாக ........

அதிகாலை பெய்த
அந்தப் பெருமழையில்
உதிர்ந்து கிடந்த
இலையும் பூக்களும் திடீரென்று
நீந்தக் கற்றுக் கொண்டன

அடை மழையின் பெருந்துளிகளால்
உறங்கிக் கிடந்த
நீர்க் குமிழிகள் சட்டென்று
விழித்துக் கொண்டன

துரத்திப் பிடித்து நெடுநாளாய்
அடைத்து வைத்த வண்ணத்துப் பூச்சி
விடுவித்த அன்று
பறக்க மறந்து போயிருந்தது.....

இயல்புக்கு மாறாக ..............
அடித்துப் பெய்யும் மழையில்
குடை வைத்துக் கொண்டு
நனைந்து போகும் என்னைப்
பரிதாபமாகப் பார்த்தார்கள்
அவர்கள்!!

Friday, June 19, 2009

ரயில் பயணங்களில்.....3.....(T.T.E கடவுளுக்கே அல்வாவா??)

நீண்ட தூர ரயில் பயணங்களில் இப்போல்லாம் சைட்லெ இருக்கும் ரெண்டு பெர்த்தை மூன்றாக மாற்றியிருக்கிறார்கள்.......அதனால் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை.........ஏறும் போதே டிக்கெட்லே உள்ள நம்பரும் சார்ட்லெ உள்ள நம்பரும் வேற வேற..ட்ரெயின் நம்பர் ப்ளேட்லெ ஒரு வரிசை...பக்கத்துலேயே வேற ஒரு வரிசை கருப்பு மார்க்கரினால் எழுதியிருந்தது...சரி ஏதுக்கும் சார்ட்லெ உள்ள நம்பர் படியே உட்கார்ந்து கொள்ளலாம்னு உட்கார்ந்தோம் ....பத்தே நிமிஷத்திலே ஒரு குடும்பம்......
"இது எங்க சீட்"
"இல்லைங்க சார்ட் படி எங்க சீட்"
"அட டிக்கெட்லெ இந்த நம்பர் எங்க சீட்ங்க"
"இல்லீங்க மூன்று பெர்த் மாற்றினதுனதுனாலே வந்த குழப்பம்ங்க...T.T.E வந்த பின்னாலெ மாற்றிக் கொள்ளலாம்ங்க"
இல்லைங்க பின்னாடி பிரச்னை வரும் நாங்க டிக்கெட் நம்பர் படியே உட்கார்ந்துக்கிறோம்...நீங்க உங்க சீட்டுக்குப் போங்க!...
மறுபடி மூட்டை முடிச்சுக்களைத் தூக்கிக்கிட்டு....ம்ம்ம்
T.T.E வந்தார்...
என்னங்க சார்ட்லெதான் நம்பர் தெளிவா இருக்கே...அதுபடி உட்காரலாமே??
உங்க சீட் ஐந்து சீட் தள்ளி...அங்கே ...அங்கே போங்க....
"நாங்க சரியாதான் உட்கார்ந்தோம் சார்...ஆனால் ......"
எங்க காதிலே வாங்கறார்???
" பார்த்தா படிச்சவங்களா இருக்கீங்க!! இப்படி..." ஏதோ முணுமுணுத்துக் கொண்டே போனார்....
மறுபடி மூட்டை முடிச்சுக்களைத் தூக்கிக்கிட்டு....ம்ம்ம்
ஒருவழியா T.T.E யின் வாக்கை வேத வாக்கா நினைச்சு அந்தக் குடும்பமும் மாறி உட்கார்ந்தது....
கோட்டா வந்தது சுமார் 12:30 மணிக்கு....அசந்து தூங்கிட்டு இருந்தோம்
ஒருவர் வந்து "சார் இது எங்க சீட்...எழுந்திருங்க......."
சார்ட் படியா.....டிக்கெட் படியா???
டி.டி அலாட் பண்ணியிருக்கார்ங்க"
"எந்த T.T.E ??"
"இது எங்க சீட்டுப்பா"
அவர் ஓடிப் போய் டி.டி கடவுளைக் கூட்டி வந்தார்.பதறிய படி வந்த T.T.E கடவுள் அடடா பழைய நம்பர் படி அலாட் பண்ணிட்டேன்....சாரி சாரி...... கொஞ்சம் குழம்பிட்டேன் "என்றபடி ஈஈஈஈஈஈஈஈஈஈஈன்னு இளித்தார்............................T.T.E கடவுளுக்கே குழப்பம்னா சாதரண பக்தர்கள் குழம்ப மாட்டாங்களா??????