நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, August 28, 2008

அனுராதா எனும் ஓர் மழைத் துளி.......

பதிவர் "அனுராதா" துன்பங்களிலிருந்து விடுதலை! "லக்கிலுக்" அவர்களின் இந்தப் பதிவின் தொடர் பதிவு




அந்த மழைத் துளிக்கு
என்னைத் தெரியாது
எனக்கும் அந்த
மழைத் துளியைத்
தெரியாது.

ஆயினும் அந்த
மழைத் துளியின்
மரணம்
என் விழிகளில்
அடை மழையை
வரவழைத்தது.

எல்லா மழைத் துளியும்
மண்ணைத்தானே
முத்தமிடும்.....??????

மண்ணை முத்தமிடும்
முன்
மழைத் துளிக்கும்
மண்ணுக்கும்
இடையில் ஏன் வந்தது
இந்தக் கேன்சர்?

ஒவ்வொரு
யுத்தங்களின் முடிவில்
ஜெயித்தவனும்
ரணங்களுடன்
தோற்றவனும்
ரணங்களுடன்
யாரை யார்
தேற்றுவது?

இங்கே
ஜெயித்தது, யார்?
தோற்றது யார்?

Friday, August 22, 2008

எங்கேயிருந்து வந்தது அந்தத் திமிர்?


சுடும் சூரியனாய்த்தான் இரேன்....
மாலையானால் மறையத்தான் வேண்டும்

பின் எங்கேயிருந்து வந்தது
நான் ஒருவனே என்ற திமிர்?

பச்சையாய் மரத்துடன் ஒட்டிக்
கொண்டிருக்கும் இலைக்குத் தெரியாது...

காய்ந்தவுடன் சருகாகி உதிர
வேண்டியதுதான் என்று...

பின் எங்கேயிருந்து வந்தது
அந்தத் திமிர்?

மின்னிச் சிணுங்கும் நட்சத்திரங்களுக்கு
என்ன தெரியும்? விடிந்தால்
காணாமல் போய்விடுவோமென்று?

வெறும் இரவு வாழ்க்கைக்கே இந்தச்
சிமிட்டலா?
எங்கேயிருந்து வந்தது
அந்தத் திமிர்?


எல்லோருக்கும் பிடித்த மழையாய்
இருந்தென்ன பலன்...
வீழ்ந்தால்தான் நீ மழை....

பின் எங்கேயிருந்து வந்தது
அந்தத் திமிர்?

எல்லா பறவைகளின்
சிறகுகளுக்குள்ளும் கூரிய நகங்கள்
ஒளிந்து கொண்டு இருப்பது போல்....
எல்லா மனங்களுக்குள்ளும்
இந்தத் திமிர் சிக்கிக்
கொண்டுதான் இருக்கிறது....

மனதைத் திறந்து வைப்போம்...
திமிரைத் திணறடிக்கும்
அன்பினால் விரட்டுவோம்...

அதிரடி வேக வாழ்க்கையில்
திமிரையும் அன்பையும் ஒன்று சேர
பத்திரப் படுத்துவது..........
சில நேரங்களில் மௌனங்களைச்
சுமக்கும் கண்ணீராய் கஷ்டப் படுத்துகிறது......

மண்தரையும் மலர்களும்
சேரக் கூடாதா என்ன?
அதுபோல் திமிரும் அன்பும்
இணைந்திருந்தால்தான் என்ன?

Monday, August 11, 2008

ஒரு புது மாதிரியான இன்ப அதிர்ச்சி




ஒரு புது மாதிரியான இன்ப அதிர்ச்சி சரவணகுமார் கொடுத்துருக்கார்......."Blogging Friends Forever Award".... என்ற அவார்ட் கொடுத்திருக்கிறார்........அவார்ட் வாங்குவது நமக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி ஆச்சே...ஆனால் அது கூடவே ஒரு சிக்கலும் வச்சுருக்காங்க....அது என்னான்னா?????

1)நான் இந்த அவார்டை 5 பேருக்கு கொடுக்கணும்..
(அஞ்சே பேருக்கு எப்பிடி? எல்லோரும் கோபித்துக் கொள்ளமாட்டார்களா?..)

2)இந்த 5 பேருல 4 பேரு நம்ம ப்ளாகை தொடர்ந்து படிக்கிறவங்களா இருக்கணும்.. ஒருத்தர் நம்ம ப்ளாகை புதுசா படிக்க தொடங்கினவங்களா இருக்கணும்..
(இங்கே ஆரம்பிக்குது சிக்கல்........நாலு பேராவது படிக்கிறாங்களா??)

3)இந்த அவார்ட் உங்களுக்கு யாரு கொடுத்தாங்களோ அவங்களுக்கு மறுபடியும் ஒரு link தரணும்..
(அப்பாடா இந்த ஒரு வேலையாவது கொஞ்சம் சிக்கலில்லாமல் முடிக்கலாம்..)

இவங்க தான் அந்த ஐந்து நண்பர்கள்......

முதல்ல இப்போ எழுதுவதை நிறுத்திவிட்ட dreamzzக்கு அவருடைய சுறு சுறுப்புக்கு எல்லோர் blogலெயும் முதல் கமென்ட் போடுறதுனாலெ கொடுக்கலாம்னுதான் நினைச்சேன் ....ஆனால் அவர் இப்போ ஆட்டத்துலேயே இல்லையேன்னு ஒரு சிக்கல்.அதனாலே...

நேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி.........புன்னகையுடன் வாழ்வை....எதிர் நோக்கும் .......அந்தோணிமுத்து

ஒரு நிமிடக் கதைகளில் அடித்து ஆடும்.......வினையூக்கி

மொக்கைக்கு மேல மொக்கை போட்டு கொலை வெறியோட பதிவும், ரசித்து ரசித்துக் கமென்டும் போடும்..........ரசிகன்

அக்கா...... அக்கா...என்று சுற்றி வரும் தம்பி..........ஸ்ரீ

புதுசா என் blog படிக்கிறவங்களில் அனுஜன்யாவிற்கு இந்த அவார்டைக் கொடுக்கப் போறேன்.

அப்புறம் என்னை இப்படிப் பிரபலமாக்கிய சரவணகுமாருக்கு ஒரு நன்றி card போட்டுடலாமா???..........