அந்த மழைக்கால இரவில்
திடீர் உறவின் வருகைக்கு
வீடு புரண்டு படுத்துக் கொண்டது..........
யாருக்கும் நிற்காத மனிதர்கள்
எதற்கும் கவலையில்லாமல் அள்ளித் தெளிக்கும்
வார்த்தை அலங்காரங்களைச் சீரணித்தும்
மாய உலகில் வாழ்ந்து கொண்டும்
இரண்டு நாள் வீடு ரெண்டு பட்டது.... ........
இல்லாமற் போய்விடும் கவலையில்
கடந்து போன நொடிகளையெல்லாம்
நொடிநொடியாய் பிரதியெடுக்க
முயற்சிக்கும் கவன ஈர்ப்புச் செய்கையாக
புகைப்படமெடுத்துக் கொண்டது வீடு!
கண் கலங்கியபடி விடை பெற்றுச்
சென்ற சில நிமிடங்களில்
உச்சக்கட்ட சுதந்திரம் இதுதான்
என்று மௌனமாகப் பயணிக்கின்றது வீடு.............
சமயங்களில் பிரிவு கூட
விடுதலையாக அர்த்தம்
செய்து கொள்ளப் படுகின்றன!
நின்னைச் சில வரங்கள் கேட்பேன்...
அவை நேரே இன்றெனக்குத் தருவாய்...
என்றன் முன்னைத் தீவினைப் பயன்கள் யாவும்...
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி...
எனக்கேதும் கவலையறச் செய்து...
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...!
அவை நேரே இன்றெனக்குத் தருவாய்...
என்றன் முன்னைத் தீவினைப் பயன்கள் யாவும்...
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி...
எனக்கேதும் கவலையறச் செய்து...
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...!
Monday, December 21, 2009
Monday, December 14, 2009
ரெண்டாவதாக.....
இரண்டாவது என்பது எவ்வ்ளொ வலி தரக் கூடியதுன்னு அனுபவிச்சாதான் புரியும்.
இந்தா....... அக்காவின் சட்டை பாவாடையில் ஆரம்பித்து ஸ்லேட்,பேனா, ஷூ,தொப்பி,சைக்கிள்,புத்தகம்....இப்பிடி இரண்டாவதாக அவளிடம் தஞ்சம் கொண்டிருந்த பொருட்கள் அதிகம்.அவை மேல் அவளுக்கு எப்போதும் இது தன்னுடையது என்னும் உணர்வு வந்ததேயில்லை.அந்தப் பொருட்களில் அக்காவின் நிழல் விழுந்து விடுகிறது.அக்காவின் வாசம் அந்தப் பொருட்களில் நிறைந்திருக்கும்.
முதல் என்பதற்கு மட்டும் ஏன் அப்படி ஒரு வசீகரம்?
முதல் டீச்சர்,முதல் பேனா,முதல் கடிகாரம்,முதல் புடவை, முதல் கடிதம்,முதல் பரிசு,முதல் மழை,முதல் காதல்,...இப்படி நிறைய முதல்கள் நினைவுப் பெட்டகங்களூடே தங்கிவிட.......இரண்டாவது டீச்சர், இரண்டாவது பேனா,இரண்டாவது கடிகாரம்,இரண்டாவது புடவை,இரண்டாவது கடிதம்,இரண்டாவது பரிசு,இரண்டாவது மழை,இரண்டாவது காதல்.....இப்படி ரெண்டாவதை நினைவடுக்குகளில் தேடித்தான் பாருங்களேன் ஒன்றும் அகப்படாது....
"ம்ம்ம்....ரெண்டாவதும் பெண்ணா?"
அப்படிப் பிறந்தவள்தான் அவள்.....முதல் எல்லாமே அவளுக்கு ஞாபகம் இருப்பதில்லை...........ஞாபகத்தில் வைத்துக் கொள்வதுமில்லை வைத்துக் கொள்ளப் பிடிப்பதுவுமில்லை...வலுக்கட்டாயமாக மறக்க நினைப்பவைகள்தான் மனதில் பிடிவாதமாக நினைவில் தங்கிவிடும் போல.......
அவள் மட்டும் தன்னுடைய முதல்களை மறந்து ,ரெண்டாவதுகளைப் பத்திரப் படுத்தத் தொடங்கினாள்.
"அப்பாடா......முதல் மனைவியாகத்தான் போகிறேன்......இருந்தாலும் அந்த வீட்டின் ரெண்டாவது மருமகளாகத்தான்.........ஹ்ம்ம்"........என நினைத்துக் கொண்டே அம்மாவிடம் அவள் தன் உறுத்தலைச் சொன்னாள்...............
அம்மா..........அவள் தலையை வருடிக் கொண்டே ..........."நான் அஞ்சாவது பொண்ணு.....உங்கப்பாவுக்கு மூணாவது தாரம்........."....
அவள் கண்ணில் குபுக்கெனக் கண்ணீர்..............
இந்தா....... அக்காவின் சட்டை பாவாடையில் ஆரம்பித்து ஸ்லேட்,பேனா, ஷூ,தொப்பி,சைக்கிள்,புத்தகம்....இப்பிடி இரண்டாவதாக அவளிடம் தஞ்சம் கொண்டிருந்த பொருட்கள் அதிகம்.அவை மேல் அவளுக்கு எப்போதும் இது தன்னுடையது என்னும் உணர்வு வந்ததேயில்லை.அந்தப் பொருட்களில் அக்காவின் நிழல் விழுந்து விடுகிறது.அக்காவின் வாசம் அந்தப் பொருட்களில் நிறைந்திருக்கும்.
முதல் என்பதற்கு மட்டும் ஏன் அப்படி ஒரு வசீகரம்?
முதல் டீச்சர்,முதல் பேனா,முதல் கடிகாரம்,முதல் புடவை, முதல் கடிதம்,முதல் பரிசு,முதல் மழை,முதல் காதல்,...இப்படி நிறைய முதல்கள் நினைவுப் பெட்டகங்களூடே தங்கிவிட.......இரண்டாவது டீச்சர், இரண்டாவது பேனா,இரண்டாவது கடிகாரம்,இரண்டாவது புடவை,இரண்டாவது கடிதம்,இரண்டாவது பரிசு,இரண்டாவது மழை,இரண்டாவது காதல்.....இப்படி ரெண்டாவதை நினைவடுக்குகளில் தேடித்தான் பாருங்களேன் ஒன்றும் அகப்படாது....
"ம்ம்ம்....ரெண்டாவதும் பெண்ணா?"
அப்படிப் பிறந்தவள்தான் அவள்.....முதல் எல்லாமே அவளுக்கு ஞாபகம் இருப்பதில்லை...........ஞாபகத்தில் வைத்துக் கொள்வதுமில்லை வைத்துக் கொள்ளப் பிடிப்பதுவுமில்லை...வலுக்கட்டாயமாக மறக்க நினைப்பவைகள்தான் மனதில் பிடிவாதமாக நினைவில் தங்கிவிடும் போல.......
அவள் மட்டும் தன்னுடைய முதல்களை மறந்து ,ரெண்டாவதுகளைப் பத்திரப் படுத்தத் தொடங்கினாள்.
"அப்பாடா......முதல் மனைவியாகத்தான் போகிறேன்......இருந்தாலும் அந்த வீட்டின் ரெண்டாவது மருமகளாகத்தான்.........ஹ்ம்ம்"........என நினைத்துக் கொண்டே அம்மாவிடம் அவள் தன் உறுத்தலைச் சொன்னாள்...............
அம்மா..........அவள் தலையை வருடிக் கொண்டே ..........."நான் அஞ்சாவது பொண்ணு.....உங்கப்பாவுக்கு மூணாவது தாரம்........."....
அவள் கண்ணில் குபுக்கெனக் கண்ணீர்..............
Wednesday, December 9, 2009
நான் ஙே வாகியதும்.....ஙே வாக்கியதும்.1
வண்டி வாங்கிய புதிது.எப்போதும் அவங்கதான் பெட்ரோல் டாங்க் நிரப்பி விட்டு வருவார்கள்.அன்று அவங்க வீட்டிலில்லாத நேரம்...வேற வழியில்லாமல் நானே பெட்ரோல் போடப் போனேன்.
வேர்த்து வழிந்தது..எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது.
"என்னடா இது ஏன் பெட்ரோல் போடுபவன் என் வண்டிப் பக்கம் வரவேயில்லை?"என யோசனையாயிருந்தது...
நான் நின்ற இடத்தில் வண்டிகளும் வந்து நிக்கவில்லை காலியாகத்தானிருந்தது.
எனக்குப் பின்னால் வந்தவர்களெல்லாம் பெட்ரோல் நிரப்பிவிட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள்.
கோபத்துடன்.."இங்கே வாப்பா"என்று கத்தினேன்.
"என்னம்மா ஸ்கூட்டிக்கு டீசல் போடப் போறீங்களான்னான்?"
நான் ஙே!
டீசல் போடுமிடத்தில் நின்றுகொண்டிருந்திருக்கிறேன்!
வேர்த்து வழிந்தது..எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது.
"என்னடா இது ஏன் பெட்ரோல் போடுபவன் என் வண்டிப் பக்கம் வரவேயில்லை?"என யோசனையாயிருந்தது...
நான் நின்ற இடத்தில் வண்டிகளும் வந்து நிக்கவில்லை காலியாகத்தானிருந்தது.
எனக்குப் பின்னால் வந்தவர்களெல்லாம் பெட்ரோல் நிரப்பிவிட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள்.
கோபத்துடன்.."இங்கே வாப்பா"என்று கத்தினேன்.
"என்னம்மா ஸ்கூட்டிக்கு டீசல் போடப் போறீங்களான்னான்?"
நான் ஙே!
டீசல் போடுமிடத்தில் நின்றுகொண்டிருந்திருக்கிறேன்!
Monday, December 7, 2009
என்றேனும் பசுமையாய் இருந்திருப்பேன்...
என் கிளைகளில்
என்றேனும் பூக்க்கள் ஊஞ்சலாடியிருக்கும்...
என் வேர்களில் ஈரம் இணைந்திருந்திருக்கும்
என் மடியில் கவிழ்பூக்கள் நூறு முத்தமிட்டிருக்கலாம்.....
என் நிழலில் ஒரு குடும்பம் சிரித்துப் பேசியிருக்கலாம்.....
இலைகளையும் பூக்களையும் உதிரவிடாமல்
காவல் காக்கவுமில்லை
நான் பசுமையாய் இருந்த
நிமிடங்களைச் சேகரிக்கவும் இல்லை.....
இப்போதிந்த இளைப்பாறும்
பறவைகளில்லாக் கிளைகளும்
பூவாசமில்லாத் தனிமையும்
பூக்களின் போதையில்லாத
இலையசையா நிசப்தமும்....
பயமாயிருக்கிறது.............
என் செய்ய? கூடியிருக்க.........
எங்களுக்கில்லை முதியோர் இல்லங்கள்.......
என்றேனும் பூக்க்கள் ஊஞ்சலாடியிருக்கும்...
என் வேர்களில் ஈரம் இணைந்திருந்திருக்கும்
என் மடியில் கவிழ்பூக்கள் நூறு முத்தமிட்டிருக்கலாம்.....
என் நிழலில் ஒரு குடும்பம் சிரித்துப் பேசியிருக்கலாம்.....
இலைகளையும் பூக்களையும் உதிரவிடாமல்
காவல் காக்கவுமில்லை
நான் பசுமையாய் இருந்த
நிமிடங்களைச் சேகரிக்கவும் இல்லை.....
இப்போதிந்த இளைப்பாறும்
பறவைகளில்லாக் கிளைகளும்
பூவாசமில்லாத் தனிமையும்
பூக்களின் போதையில்லாத
இலையசையா நிசப்தமும்....
பயமாயிருக்கிறது.............
என் செய்ய? கூடியிருக்க.........
எங்களுக்கில்லை முதியோர் இல்லங்கள்.......
Subscribe to:
Posts (Atom)



