"எப்போ வருவீங்க?"
"லேட்டாகும்..."
"லேட்டாகுமா????"
"அதான் சொல்றேன்லே லேட்டாகும்னு.."
"ஏன் லேட்?"
"லேட்டாயிருச்சு...."
"அதான் ஏன் லேட்?"
"கொஞ்சம் லேட்டாயிருச்சு.."
"5 மணிக்கு ஏன் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சீங்க?மீட்டிங்க்லெ இருந்தேம்மா..."
"அதென்ன உங்க ஆஃபீஸ்லெ காலையிலெல்லாம் மீட்டிங்க் வைக்காம சாயங்காலம் வைக்கிறாங்க????"
இந்த டையலாக் எல்லாத் தங்கமணியும் ரங்கமணியும் பரிமாறிக் கொண்டவையாகத்தான் இருக்கும்....
இதுக்கு அர்த்தம் ஒருவரையொருவர் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதாகவோ...அல்லது சந்தேகப் படுவதோ அல்ல...
ரெண்டு பேருக்குமே தெரியும் இறுக்கிப் பிடிக்கும் அந்தக் கயிற்றின் ஒரு நுனி ரங்கமணிகிட்டேயும் இன்னொரு நுனி தங்கமணிகிட்டேயும் இருக்குன்னு....
அப்பப்போ இரண்டு பேரும் அதை இழுத்துப் பார்த்து நல்லா இறுக்கமாதான் பிடிச்சுருக்காங்களான்னு பார்த்துக்கத்தான் அந்த இழுவை?
ரெண்டு பேருக்குமே தெரியும்......அந்தக் கயிறு ஒரு நேசத்தின் இழை என்பது.......அதில் ஒரு நுனி பிடியில் இருந்து நழுவினாலும் மறு நுனியில் பல்ப் எரியும்.........கொஞ்ச நாள் இழுக்காமே இருந்து பாருங்க வாழ்க்கை செம போர் அடிக்கும்...இதெல்லாம் ஒரு டெக்னிக்குங்க!.