Friday, November 30, 2007
இதனால் அறியப் படுவது யாதெனில்........
உண்மைகளை உரக்கச் சொல்லத் தேவையில்லை
ஆனாலும் உண்மைகளைச் சொல்லத் தெரிய வேண்டும்
பொய்களையும் உரக்கச் சொல்லத் தேவையில்லை
ஆனாலும் பொய்களைச் சொல்லப் பயப்பட வேண்டும்
கிராமத்து உண்மைகளை நகரத்துப் பொய்மைகள்
அலங்கரித்து அலங்கோலப் படுத்துவது தெரியாமலே
அழிந்து விடுகின்றன.....
நகரத்துப் பொய்மைகள் கிராமத்து உண்மைகளின்
மேலேறி நடந்து கிராமத்து நிஜங்களை நிர்மூலமாக்குகின்றன
கிராமத்து உண்மைகளை
நகரங்களின் பொய்மைகள்
------------ (நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்)
ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து
தன்னிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது..
இதனால் அறியப் படுவது யாதெனில்....
கிராமங்கள் நிற்கின்றன........
நகரங்கள் நகர்கின்றன.........
Posted by aruna at 6:02 AM 0 comments
நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-
அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதும் கவலையறச் செய்து -
மதி தன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
Friday, November 30, 2007
நல்லதை நாலு பேருக்குச் சொல்வோம் 2
நல்லதை நாலு பேருக்குச் சொல்வோம் 2
எந்த விதமான இதய அறுவை சிகிச்சையும் இலவசமாக செய்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
Sri Sathya Sai Institute Higher Medical Sciences, E.P.I.P. Area, WhiteField, Bangalore
Write to us
Sri Sathya Sai Institute of Higher Medical Sciences
EPIP Area, Whitefield,
Bangalore 560 066,
Karnataka , INDIA .
Call us
Telephone: +91- 080- 28411500
Fax +91 - 080- 28411502
Employment related +91- 080- 28411500 Ext. 415
Email us
General Queries: adminblr@sssihms.org.in
முகம் தெரியாத யாருக்கோ உதவலாமே இந்த செய்தி.
அருணா
Posted by aruna at 5:56 AM 0 comments
எந்த விதமான இதய அறுவை சிகிச்சையும் இலவசமாக செய்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
Sri Sathya Sai Institute Higher Medical Sciences, E.P.I.P. Area, WhiteField, Bangalore
Write to us
Sri Sathya Sai Institute of Higher Medical Sciences
EPIP Area, Whitefield,
Bangalore 560 066,
Karnataka , INDIA .
Call us
Telephone: +91- 080- 28411500
Fax +91 - 080- 28411502
Employment related +91- 080- 28411500 Ext. 415
Email us
General Queries: adminblr@sssihms.org.in
முகம் தெரியாத யாருக்கோ உதவலாமே இந்த செய்தி.
அருணா
Posted by aruna at 5:56 AM 0 comments
Wednesday, November 28, 2007
முளைத்து எழும் சிலுவைகள்
Wednesday, November 28, 2007
முளைத்து எழும் சிலுவைகள்
முளைத்து எழும் சிலுவைகள்
கடந்து போகும் சுடுகாட்டில்
புதைந்திருந்த சிலுவைகள் ........
அத்தனையும் எழுந்து நின்றன...
அத்தனையும் முளைத்து எழுந்தன....
ஒவ்வொரு உயிரின் புதையலுக்கு முன்
ஆயிரம் மனங்களின் துடிப்பு
அந்த ஒரு உயிரின் ஆயிரம்
ஆசைகளின் புதையல்......
மண்ணுக்குள் இருந்தாலும்....புதைந்தாலும்
இன்னுமொரு வாழ்வுக்கு கையேந்தும்
சிலுவைகளின் கைகள்....
ஆசைகள் அத்தனைக்கும் உயிர் கொடுக்கும்
இன்னுமொரு வாழ்வைத் தவிர வேறு என்ன
கையேந்திக் கேட்கப் போகின்றன புதிதாய்??
Posted by aruna at 9:20 AM 0 comments
முளைத்து எழும் சிலுவைகள்
முளைத்து எழும் சிலுவைகள்
கடந்து போகும் சுடுகாட்டில்
புதைந்திருந்த சிலுவைகள் ........
அத்தனையும் எழுந்து நின்றன...
அத்தனையும் முளைத்து எழுந்தன....
ஒவ்வொரு உயிரின் புதையலுக்கு முன்
ஆயிரம் மனங்களின் துடிப்பு
அந்த ஒரு உயிரின் ஆயிரம்
ஆசைகளின் புதையல்......
மண்ணுக்குள் இருந்தாலும்....புதைந்தாலும்
இன்னுமொரு வாழ்வுக்கு கையேந்தும்
சிலுவைகளின் கைகள்....
ஆசைகள் அத்தனைக்கும் உயிர் கொடுக்கும்
இன்னுமொரு வாழ்வைத் தவிர வேறு என்ன
கையேந்திக் கேட்கப் போகின்றன புதிதாய்??
Posted by aruna at 9:20 AM 0 comments
Tuesday, November 27, 2007
முகமூடிக்குப் பின்னால் நான்...................
முகமூடிக்குப் பின்னால் நான்...................
கண்டதும் சிரித்து
முதுகுக்குப் பின்னால் முறைத்து
பிடித்ததற்கும் சிரித்து
பிடிக்காதற்கும் சிரித்து
அன்புக்கும் சிரித்து
ஆணவத்துக்கும் சிரித்து
தப்புக்கும் சிரித்து
தண்டனைக்கும் சிரித்து
புகழ்ந்தாலும் சிரித்து
இகழ்ந்தாலும் சிரித்து
முகத்தின் மீது ஒட்டிக் கொண்ட
முகமூடியைக் கழற்ற முடியாமல்
கலங்கும் போதும் பொய்யாய்
ஒட்டிக் கொண்ட புன்னகை ஒன்றே
மீதமாய் எனக்கு நானே
மாட்டிக் கொண்ட முகமூடியை
தூக்கியெறிய முயன்று.....
முடியாமல் குமுறியழ......
துளித் துளியாய் வழிந்த கண்ணீரில்
கரைந்தோடியது அந்த முகமூடி....
Posted by aruna at 9:26 AM 1 comments
கண்டதும் சிரித்து
முதுகுக்குப் பின்னால் முறைத்து
பிடித்ததற்கும் சிரித்து
பிடிக்காதற்கும் சிரித்து
அன்புக்கும் சிரித்து
ஆணவத்துக்கும் சிரித்து
தப்புக்கும் சிரித்து
தண்டனைக்கும் சிரித்து
புகழ்ந்தாலும் சிரித்து
இகழ்ந்தாலும் சிரித்து
முகத்தின் மீது ஒட்டிக் கொண்ட
முகமூடியைக் கழற்ற முடியாமல்
கலங்கும் போதும் பொய்யாய்
ஒட்டிக் கொண்ட புன்னகை ஒன்றே
மீதமாய் எனக்கு நானே
மாட்டிக் கொண்ட முகமூடியை
தூக்கியெறிய முயன்று.....
முடியாமல் குமுறியழ......
துளித் துளியாய் வழிந்த கண்ணீரில்
கரைந்தோடியது அந்த முகமூடி....
Posted by aruna at 9:26 AM 1 comments
Sunday, November 25, 2007
வலை என்னும் அலையில் அடித்துப் போகப் போகிறேனா?
Sunday, November 25, 2007
வலை என்னும் அலையில் அடித்துப் போகப் போகிறேனா?
வலை என்னும் அலையில்
ஒரு நொடியில் ஒராயிரம் மெயில் செக் செய்து
திருப்பித் திருப்பிப் பக்கம் பக்கமாக மேய்ந்து
கண் அசைவின்றி கணினியைப் பார்த்து
ஐந்தே ஐந்து நிமிடம் தான் என்ற மனக் கணக்கு
ஐந்து மணி நேரமாக நீளும் நிஜக் கணக்கு
என்று தணியும் இந்த வலை தாகம்?
என்றோ தணியும் இந்த வலை அலை?
தணியத்தான் போகிறதோ இல்லை இந்த
அலை வலை என்னை அடித்துத் தான்
கொண்டு செல்லப் போகிறதோ?
இது என்ன அறியத் துடிக்கும் வரமோ?
இல்லை எனக்கு நெடேரியாவா?
Posted by aruna at 9:14 AM 1 comments
வலை என்னும் அலையில் அடித்துப் போகப் போகிறேனா?
வலை என்னும் அலையில்
ஒரு நொடியில் ஒராயிரம் மெயில் செக் செய்து
திருப்பித் திருப்பிப் பக்கம் பக்கமாக மேய்ந்து
கண் அசைவின்றி கணினியைப் பார்த்து
ஐந்தே ஐந்து நிமிடம் தான் என்ற மனக் கணக்கு
ஐந்து மணி நேரமாக நீளும் நிஜக் கணக்கு
என்று தணியும் இந்த வலை தாகம்?
என்றோ தணியும் இந்த வலை அலை?
தணியத்தான் போகிறதோ இல்லை இந்த
அலை வலை என்னை அடித்துத் தான்
கொண்டு செல்லப் போகிறதோ?
இது என்ன அறியத் துடிக்கும் வரமோ?
இல்லை எனக்கு நெடேரியாவா?
Posted by aruna at 9:14 AM 1 comments
Saturday, November 24, 2007
எனக்கு கடவுளாவதில் இஷ்டமில்லை
எனக்கு கடவுளாவதில் இஷ்டமில்லை
கடவுள் என்ன யோசிப்பார்?
எனது ரொம்ப நாளைய சிந்தனை.....கடவுள் கூட நம்மைப் போல சிந்திப்பாரா?சிந்தித்தால் யாரைப் பற்றி சிந்திப்பார்?எதைப் பற்றி சிந்திப்பார்?அவருக்கென்ன பிரச்னை?அவருக்கு கூட கவலைகள் உண்டா?அவருக்கே அவருக்கு என்று யார் இருக்கிறார்கள்? யாரைப் பற்றி அவர் கவலைப் பட வேண்டும்? இன்னும் பல சிந்தனைகள்...கடவுள் தனிமையானவரா?
நம் எல்லோருக்கும் அவர் இருக்க அவருக்கென்று யாருமே இல்லையா? அப்படியானால் கடவுள் ஆவதில் எனக்கு இஷ்டம் இல்லை.....தனிமை என்றால் எனக்கு அவ்வளவு பயம்........கொஞ்சம் ஓவரா தெரியுதோ?
கடவுள் என்ன யோசிப்பார்?
எனது ரொம்ப நாளைய சிந்தனை.....கடவுள் கூட நம்மைப் போல சிந்திப்பாரா?சிந்தித்தால் யாரைப் பற்றி சிந்திப்பார்?எதைப் பற்றி சிந்திப்பார்?அவருக்கென்ன பிரச்னை?அவருக்கு கூட கவலைகள் உண்டா?அவருக்கே அவருக்கு என்று யார் இருக்கிறார்கள்? யாரைப் பற்றி அவர் கவலைப் பட வேண்டும்? இன்னும் பல சிந்தனைகள்...கடவுள் தனிமையானவரா?
நம் எல்லோருக்கும் அவர் இருக்க அவருக்கென்று யாருமே இல்லையா? அப்படியானால் கடவுள் ஆவதில் எனக்கு இஷ்டம் இல்லை.....தனிமை என்றால் எனக்கு அவ்வளவு பயம்........கொஞ்சம் ஓவரா தெரியுதோ?
Thursday, November 22, 2007
நட்சத்திரங்கள் நம்மோடு பேசுகின்றன......
Thursday, November 22, 2007
நட்சத்திரங்கள் நம்மோடு பேசுகின்றன......
நான் என்னும் என்னோடு
நீ என்னும் உன்னோடு
நாம் என்னும் நம்மோடு
நீங்கள் என்னும் அவர்கள்
பேசவில்லை என்றால்
ஒன்றும் பரவாயில்லை.....
அதுதான் நாம் பேசிக் கொள்ளும் போது
கோடி
நட்சத்திரகள் நம்மோடு பேசிக் கொள்கின்றனவே!!!!!!!!!!
Posted by aruna at 8:58 AM 0 comments
நட்சத்திரங்கள் நம்மோடு பேசுகின்றன......
நான் என்னும் என்னோடு
நீ என்னும் உன்னோடு
நாம் என்னும் நம்மோடு
நீங்கள் என்னும் அவர்கள்
பேசவில்லை என்றால்
ஒன்றும் பரவாயில்லை.....
அதுதான் நாம் பேசிக் கொள்ளும் போது
கோடி
நட்சத்திரகள் நம்மோடு பேசிக் கொள்கின்றனவே!!!!!!!!!!
Posted by aruna at 8:58 AM 0 comments
Wednesday, November 21, 2007
எது இல்லையென்றாலும் அது வேண்டும்....உனக்கும் எனக்கும்
Wednesday, November 21, 2007
எது இல்லையென்றாலும் அது வேண்டும்....உனக்கும் எனக்கும்
வீடில்லை என்றேன்........
விரிந்து கிடக்குது உலகம் என்றாய்!
உடுத்த உடையில்லைஎன்றேன்.....
உடுத்தியிருப்பது போதாதா என்றாய்!
உண்ண உணவில்லை என்றேன்.....
உணவேதான் வாழ்வா என்றாய்!
காலுக்கு செருப்பு இல்லையென்றேன்....
காலில்லையா என்றாய்!
பொன் நகை ஏதும் இல்லையென்றேன்.....
உன் புன்னகை போதுமே என்றாய்!
வேலை இல்லையென்றேன்.....
வேலை தேடுவதே வேலை என்றாய்!
நல்ல நட்பில்லையென்றேன்....
நானில்லையா உனக்கு? என்றாய்!
கனவுக் காதல் இல்லை என்றேன்....
காதல்தான் வாழ்வா என்றாய்!
வாழ்வே இல்லை என்றேன்....
வாழ்ந்தது போதாதா?என்றாய்!
கவிதையே இல்லை என்றேன்....
கலங்கிப் போய் நின்றாயே!!!!!!!!!!
Posted by aruna at 3:40 AM 0 comment
எது இல்லையென்றாலும் அது வேண்டும்....உனக்கும் எனக்கும்
வீடில்லை என்றேன்........
விரிந்து கிடக்குது உலகம் என்றாய்!
உடுத்த உடையில்லைஎன்றேன்.....
உடுத்தியிருப்பது போதாதா என்றாய்!
உண்ண உணவில்லை என்றேன்.....
உணவேதான் வாழ்வா என்றாய்!
காலுக்கு செருப்பு இல்லையென்றேன்....
காலில்லையா என்றாய்!
பொன் நகை ஏதும் இல்லையென்றேன்.....
உன் புன்னகை போதுமே என்றாய்!
வேலை இல்லையென்றேன்.....
வேலை தேடுவதே வேலை என்றாய்!
நல்ல நட்பில்லையென்றேன்....
நானில்லையா உனக்கு? என்றாய்!
கனவுக் காதல் இல்லை என்றேன்....
காதல்தான் வாழ்வா என்றாய்!
வாழ்வே இல்லை என்றேன்....
வாழ்ந்தது போதாதா?என்றாய்!
கவிதையே இல்லை என்றேன்....
கலங்கிப் போய் நின்றாயே!!!!!!!!!!
Posted by aruna at 3:40 AM 0 comment
Tuesday, November 20, 2007
நானும் இயந்திரங்களும்
Tuesday, November 20, 2007
நானும் இயந்திரங்களும்
காலையில் காஃபி.......... காஃபி மேக்கரில்
சப்பாத்தி மாவு........... ஆட்டா நீடரில்
சப்பாத்தி.............. சப்பாத்தி மேக்கரில்
மைக்ரோ வேவ் அலறலில்....... பொறியல்.
வாட்டர் heater-ல் சுடு தண்ணீர் குளியல்.
வாஷிங்க் மெசினில் துணிகள் குளித்தன.
வேக்கும் க்ளீனரில் வீடு குளித்தது.
ஏர் கண்டிசனரில் வீடு குளிர்ந்தது.
எத்தனை பட்டன்கள்....எத்தனை வேலைகள்
அப்பாடா......
அத்தனை வேலையும் முடித்து
கொஞ்சம் கம்ப்யுட்டரில் கவிதை எழுத எண்ணி
கம்ப்யுட்டர் பட்டனைத் தட்டினால்......
ம்கூம்........ஒன்றும் தேறவில்லை....
மனக் கதவைத் திறக்க எந்த பட்டனைத் தட்டுவது?
Posted by aruna at 4:45 AM 0 comments
நானும் இயந்திரங்களும்
காலையில் காஃபி.......... காஃபி மேக்கரில்
சப்பாத்தி மாவு........... ஆட்டா நீடரில்
சப்பாத்தி.............. சப்பாத்தி மேக்கரில்
மைக்ரோ வேவ் அலறலில்....... பொறியல்.
வாட்டர் heater-ல் சுடு தண்ணீர் குளியல்.
வாஷிங்க் மெசினில் துணிகள் குளித்தன.
வேக்கும் க்ளீனரில் வீடு குளித்தது.
ஏர் கண்டிசனரில் வீடு குளிர்ந்தது.
எத்தனை பட்டன்கள்....எத்தனை வேலைகள்
அப்பாடா......
அத்தனை வேலையும் முடித்து
கொஞ்சம் கம்ப்யுட்டரில் கவிதை எழுத எண்ணி
கம்ப்யுட்டர் பட்டனைத் தட்டினால்......
ம்கூம்........ஒன்றும் தேறவில்லை....
மனக் கதவைத் திறக்க எந்த பட்டனைத் தட்டுவது?
Posted by aruna at 4:45 AM 0 comments
Monday, November 19, 2007
மனமெனும் மரம்
மனமெனும் மரம்
மனமெனும் மரம்.........
தனிமையான மரம்......
தனிமையா?.......மரத்துக்கா?.......மனதுக்கா?......
அதுதான் கிளைகளைப் பரப்பிக் கொண்டே போகும் நினைவுகள் இருக்கிறதே.....சில கிளைகள் பெரிதாகி,....பெரிதாகி மரத்தையே பயப்பட வைக்கும்.சில கிளைகள் இனிமையான பூக்களை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கும்.எனக்குப் பயப்பட வைக்கும் நினைவுக் கிளைகளும் தேவை,உயிர்ப்பிக்கும் நினைவுப் பூக்களும் வேண்டும்.
அந்த மனமென்னும் மரத்தில் தான் எத்தனை எத்தனை அதிசயப் பறவைகள் இடம் பிடித்தன.சில இளைப்பாறின.சில கொத்திக் கொத்திக் களைப்படைந்தன.சில சிலிர்ப்பாக அன்பைப் பகிர்ந்து கொண்டன.சில ஊடலுடன் தலையைச் சிலுப்பிக் கொண்டன....இந்த மன மரம் சில பறவைகளுக்குக் கூடு கட்ட இடமும் கொடுத்தது.சில கூடு கட்டிக் களித்துக் கூட்டைக் கலைத்துக் கொண்ட கதைகளும் உண்டு.சில கூடு கட்டிக் குட்டிகளைப் பறக்க விட்டுத் தான் மட்டும் தங்கிய கதைகளும் உண்டு காய் கனிகளைக் கொத்திக் தின்று ருசித்துப் பறந்த குட்டிக் குருவிகளும் உண்டு.
எப்படியானால் என்ன?.....இந்த மன மரத்து நிழலில் உதிர்ந்த பூ நினைவில், கிளைகளின் நினைவுக் காட்டில் உலா வருவதனால் தான் இந்த மனமரம் வில்வ மரம் போல் நினைவுச் சாரலைத் தெளித்துக் கொண்டேயிருக்கிறது.இல்லையென்றால் என்றோ எங்கோ பட்டுப் போயிருக்கும்........
Posted by aruna at 4:21 AM 1 comments
மனமெனும் மரம்.........
தனிமையான மரம்......
தனிமையா?.......மரத்துக்கா?.......மனதுக்கா?......
அதுதான் கிளைகளைப் பரப்பிக் கொண்டே போகும் நினைவுகள் இருக்கிறதே.....சில கிளைகள் பெரிதாகி,....பெரிதாகி மரத்தையே பயப்பட வைக்கும்.சில கிளைகள் இனிமையான பூக்களை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கும்.எனக்குப் பயப்பட வைக்கும் நினைவுக் கிளைகளும் தேவை,உயிர்ப்பிக்கும் நினைவுப் பூக்களும் வேண்டும்.
அந்த மனமென்னும் மரத்தில் தான் எத்தனை எத்தனை அதிசயப் பறவைகள் இடம் பிடித்தன.சில இளைப்பாறின.சில கொத்திக் கொத்திக் களைப்படைந்தன.சில சிலிர்ப்பாக அன்பைப் பகிர்ந்து கொண்டன.சில ஊடலுடன் தலையைச் சிலுப்பிக் கொண்டன....இந்த மன மரம் சில பறவைகளுக்குக் கூடு கட்ட இடமும் கொடுத்தது.சில கூடு கட்டிக் களித்துக் கூட்டைக் கலைத்துக் கொண்ட கதைகளும் உண்டு.சில கூடு கட்டிக் குட்டிகளைப் பறக்க விட்டுத் தான் மட்டும் தங்கிய கதைகளும் உண்டு காய் கனிகளைக் கொத்திக் தின்று ருசித்துப் பறந்த குட்டிக் குருவிகளும் உண்டு.
எப்படியானால் என்ன?.....இந்த மன மரத்து நிழலில் உதிர்ந்த பூ நினைவில், கிளைகளின் நினைவுக் காட்டில் உலா வருவதனால் தான் இந்த மனமரம் வில்வ மரம் போல் நினைவுச் சாரலைத் தெளித்துக் கொண்டேயிருக்கிறது.இல்லையென்றால் என்றோ எங்கோ பட்டுப் போயிருக்கும்........
Posted by aruna at 4:21 AM 1 comments
Sunday, November 18, 2007
நல்லதை நாலு பேருக்கு சொல்வோம்
Sunday, November 18, 2007
நல்லதை நாலு பேருக்கு சொல்வோம்
தமிழில் எழுத நிறைய பேருக்கு எப்போதும் பிரச்னை?என்ன தீர்வு?ரொம்ப எளிது.....
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
இந்த சைட் போய் வேண்டிய font select பண்ணி டைப் பண்ணலாம்
Thanx to Suratha
Posted by aruna at 7:33 AM 1 comments
நல்லதை நாலு பேருக்கு சொல்வோம்
தமிழில் எழுத நிறைய பேருக்கு எப்போதும் பிரச்னை?என்ன தீர்வு?ரொம்ப எளிது.....
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
இந்த சைட் போய் வேண்டிய font select பண்ணி டைப் பண்ணலாம்
Thanx to Suratha
Posted by aruna at 7:33 AM 1 comments
இறப்பதற்கு முன் செய்ய வேண்டிய நிறைய பெரிய சில வேலைகள்
இறப்பதற்கு முன் செய்ய வேண்டிய நிறைய பெரிய சில வேலைகள்
1.நிறைய படிக்கணும்
2.படிச்சதை பகிர வேண்டும்
3.நிறைய எழுதணும்
4.எழுதியதை எல்லோரும் படித்துப் பாராட்டணும்
5.குறைந்தது இரண்டு அனாதைக் குழந்தைகளையாவது தத்து எடுத்துப் படிக்க வைக்க வேண்டும்.
6.ஒரு கப்பல் பயணம்,
7.நிலவுக்கு ஒரு தடவை போய் வர ஆசை,
8.காணும் கனவுகளை புத்தகமாய் எழுத ஆசை,
9.என் இஷ்டப் படி ஒரு பள்ளிக் கூடம் நடத்த வேண்டும்.
9.தினசரி இந்தப் பதிவில் மேலும் மேலும் சேர்ப்பேன்...சரியா?
Posted by aruna at 3:58 AM 0 comments
1.நிறைய படிக்கணும்
2.படிச்சதை பகிர வேண்டும்
3.நிறைய எழுதணும்
4.எழுதியதை எல்லோரும் படித்துப் பாராட்டணும்
5.குறைந்தது இரண்டு அனாதைக் குழந்தைகளையாவது தத்து எடுத்துப் படிக்க வைக்க வேண்டும்.
6.ஒரு கப்பல் பயணம்,
7.நிலவுக்கு ஒரு தடவை போய் வர ஆசை,
8.காணும் கனவுகளை புத்தகமாய் எழுத ஆசை,
9.என் இஷ்டப் படி ஒரு பள்ளிக் கூடம் நடத்த வேண்டும்.
9.தினசரி இந்தப் பதிவில் மேலும் மேலும் சேர்ப்பேன்...சரியா?
Posted by aruna at 3:58 AM 0 comments
நான் இறக்கப் போகிறேன்-அருணா
Saturday, November 17, 2007
நான் இறக்கப் போகிறேன்-அருணா
நான் இறக்கப் போகிறேன்.......
இன்றோ? நாளையோ?...........
யாருக்குத் தெரியும்?................
என்றோ இறப்பேன்................
அதற்கு முன்................
கொஞ்சம் எழுதுவேன்...............
நிறையவும் எழுதலாம்............
கொஞ்சம் பதியவும் செய்வேன்....
சில நேரங்களில் கைவிரல்களாக..........
பல நேரங்களில் கால்தடங்களாக................
ஆனால் நிச்சயம் உங்கள் மனதில் பதிவேன்........
Posted by aruna at 9:12 PM 2 comments
நான் இறக்கப் போகிறேன்-அருணா
நான் இறக்கப் போகிறேன்.......
இன்றோ? நாளையோ?...........
யாருக்குத் தெரியும்?................
என்றோ இறப்பேன்................
அதற்கு முன்................
கொஞ்சம் எழுதுவேன்...............
நிறையவும் எழுதலாம்............
கொஞ்சம் பதியவும் செய்வேன்....
சில நேரங்களில் கைவிரல்களாக..........
பல நேரங்களில் கால்தடங்களாக................
ஆனால் நிச்சயம் உங்கள் மனதில் பதிவேன்........
Posted by aruna at 9:12 PM 2 comments
Subscribe to:
Posts (Atom)