நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, November 24, 2007

எனக்கு கடவுளாவதில் இஷ்டமில்லை

எனக்கு கடவுளாவதில் இஷ்டமில்லை

கடவுள் என்ன யோசிப்பார்?
எனது ரொம்ப நாளைய சிந்தனை.....கடவுள் கூட நம்மைப் போல சிந்திப்பாரா?சிந்தித்தால் யாரைப் பற்றி சிந்திப்பார்?எதைப் பற்றி சிந்திப்பார்?அவருக்கென்ன பிரச்னை?அவருக்கு கூட கவலைகள் உண்டா?அவருக்கே அவருக்கு என்று யார் இருக்கிறார்கள்? யாரைப் பற்றி அவர் கவலைப் பட வேண்டும்? இன்னும் பல சிந்தனைகள்...கடவுள் தனிமையானவரா?
நம் எல்லோருக்கும் அவர் இருக்க அவருக்கென்று யாருமே இல்லையா? அப்படியானால் கடவுள் ஆவதில் எனக்கு இஷ்டம் இல்லை.....தனிமை என்றால் எனக்கு அவ்வளவு பயம்........கொஞ்சம் ஓவரா தெரியுதோ?

No comments:

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா