நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, November 19, 2007

மனமெனும் மரம்

மனமெனும் மரம்

மனமெனும் மரம்.........
தனிமையான மரம்......
தனிமையா?.......மரத்துக்கா?.......மனதுக்கா?......
அதுதான் கிளைகளைப் பரப்பிக் கொண்டே போகும் நினைவுகள் இருக்கிறதே.....சில கிளைகள் பெரிதாகி,....பெரிதாகி மரத்தையே பயப்பட வைக்கும்.சில கிளைகள் இனிமையான பூக்களை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கும்.எனக்குப் பயப்பட வைக்கும் நினைவுக் கிளைகளும் தேவை,உயிர்ப்பிக்கும் நினைவுப் பூக்களும் வேண்டும்.
அந்த மனமென்னும் மரத்தில் தான் எத்தனை எத்தனை அதிசயப் பறவைகள் இடம் பிடித்தன.சில இளைப்பாறின.சில கொத்திக் கொத்திக் களைப்படைந்தன.சில சிலிர்ப்பாக அன்பைப் பகிர்ந்து கொண்டன.சில ஊடலுடன் தலையைச் சிலுப்பிக் கொண்டன....இந்த மன மரம் சில பறவைகளுக்குக் கூடு கட்ட இடமும் கொடுத்தது.சில கூடு கட்டிக் களித்துக் கூட்டைக் கலைத்துக் கொண்ட கதைகளும் உண்டு.சில கூடு கட்டிக் குட்டிகளைப் பறக்க விட்டுத் தான் மட்டும் தங்கிய கதைகளும் உண்டு காய் கனிகளைக் கொத்திக் தின்று ருசித்துப் பறந்த குட்டிக் குருவிகளும் உண்டு.
எப்படியானால் என்ன?.....இந்த மன மரத்து நிழலில் உதிர்ந்த பூ நினைவில், கிளைகளின் நினைவுக் காட்டில் உலா வருவதனால் தான் இந்த மனமரம் வில்வ மரம் போல் நினைவுச் சாரலைத் தெளித்துக் கொண்டேயிருக்கிறது.இல்லையென்றால் என்றோ எங்கோ பட்டுப் போயிருக்கும்........

Posted by aruna at 4:21 AM 1 comments

1 comment:

http://thirumagal1965.blogspot.com/ said...

ம்
எல்லோருக்குள்ளும்
உள்ள மனமரம்
உன்னில் மட்டும்
வார்த்தைகாளாகி
வரிகளாகி
பூக்கின்றன
ம்ம்
கனிகளுக்கு
இன்று
சில
மனங்கள்
காத்து இருக்கின்றன
நாளை......?

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா