நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, November 30, 2007

இதனால் அறியப் படுவது யாதெனில்........

Friday, November 30, 2007
இதனால் அறியப் படுவது யாதெனில்........

உண்மைகளை உரக்கச் சொல்லத் தேவையில்லை
ஆனாலும் உண்மைகளைச் சொல்லத் தெரிய வேண்டும்
பொய்களையும் உரக்கச் சொல்லத் தேவையில்லை
ஆனாலும் பொய்களைச் சொல்லப் பயப்பட வேண்டும்
கிராமத்து உண்மைகளை நகரத்துப் பொய்மைகள்
அலங்கரித்து அலங்கோலப் படுத்துவது தெரியாமலே
அழிந்து விடுகின்றன.....
நகரத்துப் பொய்மைகள் கிராமத்து உண்மைகளின்
மேலேறி நடந்து கிராமத்து நிஜங்களை நிர்மூலமாக்குகின்றன
கிராமத்து உண்மைகளை
நகரங்களின் பொய்மைகள்
------------ (நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்)
ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து
தன்னிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது..

இதனால் அறியப் படுவது யாதெனில்....

கிராமங்கள் நிற்கின்றன........
நகரங்கள் நகர்கின்றன.........

Posted by aruna at 6:02 AM 0 comments

No comments:

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா