நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, June 8, 2013

கதை சொல்லவும்...கேட்கவும்....!!

தேவதைக் கதைகளிலிருந்து
பறக்கும் கம்பளத்தையும்
வைரப் பொக்கிஷப் பேழைகளையும் 
சிறகு முளைத்த குழந்தைகளையும்
பேசும் கிளிகளையும்
சிரிக்கும் தவளைகளையும்
காணாமல் போன செருப்பையும்
பூசணிக்காய் ரதத்தையும்
ஏழு மலைகளையும்
ஏழு கடல்களையும் தாண்டி
ஒளித்து வைத்திருக்கும்
இளவரசனின் உயிரையும்
சுருட்டி எடுத்துக் கொண்டாயிற்று
கதை சொல்ல......

வீடியோ விளையாட்டுகளிலும்
தொலைக் காட்சியிலும்
கணினிக் கொண்டாட்டங்களிலும்
மூழ்கியிருக்கும் குழந்தைகளைத்தான்
மீட்டு எடுக்க முடியவில்லை
கதை கேட்க........