நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, April 4, 2011

எங்க வீட்டில் துளசி மேடம்!

தன்னை நேசிக்க ஆட்களைச் சேகரிக்கும் வித்தை சிலருக்குத்தான் வாய்க்கும். அதில் துளசி மேடம் அவர்களுக்கு முதலிடம். மார்ச் முதல் வாரத்தில் ஒரு பின்னூட்டம் ஜெய்ப்பூர் வரும் ப்ளானிருக்கிறது. உங்களைச் சந்திக்க விருப்பம் என்று. அதற்கப்புறம் மடலிலும் பேசி நாள் முடிவு செய்தவுடன் தெரிவித்து அப்புறம் ஏப்ரல் 2ம் தேதி வந்திறங்கியவுடன் நலம் விசாரித்து ப்ரோக்ராம் பற்றி அறிந்து அப்புறமாய் முக்கியமான பதிவர் சந்திப்பைப் பற்றி எப்போ எங்கே என முடிவும் செய்து கொண்டோம். ஏப்ரல் மூன்றாம் தேதி காலையிலிருந்தே ஒரு பரபரப்பில் எதிர்பார்ப்பில் இருந்தோம்.யார் வர்றாங்க யார் வர்றாங்கன்னு கேட்டு அரித்துக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு கூகிள் பண்ணி துளசி அவர்களின் ஃபோட்டோவைக் காட்டியாச்சு!
                    
                                     கொஞ்சம் வீட்டைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டார்கள்.உடனே இவங்களை அனுப்பி ம்ம்ம் ஒருவழியாக வந்து சேர்ந்தார்கள் துளசி மேடமும் கோபால் அவர்களும்.அப்புறமென்ன?முதல் முதலில் பார்க்கிறோம் என்னும் உணர்வேயில்லாத சந்திப்பு! ரொம்பப் பழகியவர்கள் போல் அவர்களும் நாங்களும் குழந்தைகளும் ஒட்டிக் கொண்டோம். ஒருமணி நேரம் போனதே தெரியவில்லை. ஒரே கலகல!கொஞ்சம் நேரத்துக்கு யாரோ உறவினர்கள் வந்துவிட்டுப் போன உணர்வு.இது என்ன உணர்வு?எப்படி இப்படி ஒரு ஒட்டுதல்?எப்பிடி இது சாத்தியம்?என்று நிறைய கேள்விகள். ஒரு வலைப்பூவில் எழுதுவது இப்படியெல்லாம் நட்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்தும் என்பது ஒரு இனிமையான உணர்வைத் தந்தது.ம்ம்ம்.... இனி நியுசீலாந்தில் எனக்கு ஒரு சொந்தம் இருக்குன்னு சொல்லிக் கொள்ளலாம்!