நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, March 8, 2012

நான் வளர்கிறேனே மம்மீ!!!

மகளிர் தினம்.....என் மகளின் தினம்......ஹோலி மூன்றும் ஒன்றாக இந்த முறை......இன்று அவளின் பிறந்த நாள். எப்பவும் போல் இந்த முறையும் பரீட்சை நேரம்...No Celebration!
எப்போதும் பரீட்சை டைம் டேபில் வந்ததிலிருந்து அழுது கலங்கடிக்கும் வைஷ்ணவி இல்லை இந்த முறை.....................அதிலே ரொம்ப வருத்தம் இருந்தாலும் இந்த தடவை நல்ல புரிதல்.................That's fine with me mummy.....We'll have the fun after Exams என்று அவளாகவே புரிந்து கொண்டதில் எனக்குக் கொஞ்சம் ஆச்சர்யமும் ஏன் கொஞ்சம் ஏமாற்றமும் கூட.......???!!!
                       கைப் பிடித்துக் கூட்டிப் போகும் போது கையை உதறி ஓடும் போது எப்படி  ஓடப் படித்து விட்டாளே என்று சந்தோஷமும் என்னை விட்டு ஓடுகிறாளே என ஒரு வருத்தமும் இருக்குமோ  அதுவேதான் இப்போதும்.....
           அதெப்படிக் குழந்தைகள் ஒவ்வொரு கட்டத்திலும் படித்துக் கொள்ளும் விஷயங்களை இயல்பாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று பெரிய மனுஷியாக நான் வளர்கிறேனே மம்மீ!!!  என நகர்ந்து விடுகிறார்களோ .... தெரியவில்லை......அம்மாக்கள் மட்டும் எப்போதும் அடுத்த கட்டத்துக்கு நகரும் குழந்தைகள் கூடவே நகராமல் குழந்தையைப் பெற்றெடுத்த முதல்நாளிலேயே அம்மாக்களாகவே நின்றுவிடுகிறார்கள்...........
நினைப்பதெல்லாம் நிறைவேற இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வைஷ்ணவி!!!