tag:blogger.com,1999:blog-21658951468842518442024-02-07T08:10:45.442+05:30அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comBlogger255125tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-55845602215815005622015-12-08T21:52:00.001+05:302015-12-08T21:52:15.093+05:30மழையே....நலமில்லை.....நாங்கள்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">கையில் தீப்பந்தம் எடுத்து</span><br />
<span style="font-size: x-small;">நேற்று தொலைந்த ஆறு தேடித் தேடி......</span><br />
<span style="font-size: x-small;">இனி எப்படி மழை வரும் என்பதில் கவலை கொண்டு</span><br />
<span style="font-size: x-small;">திரிந்த காலம் உண்டு......</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">துண்டு துண்டாகத் தனித் தனித் தீவாகத்</span><br />
<span style="font-size: x-small;">தேங்கிக் கிடந்த ஆற்றுத் தண்ணீருக்குள்</span><br />
<span style="font-size: x-small;">முகம் பார்த்து, வானம் பார்த்து மழைக்காகத்</span><br />
<span style="font-size: x-small;">தவம் கிடந்ததுண்டு......</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">கன்னம் விழும் ஒற்றைத் துளி மழைக்கு</span><br />
<span style="font-size: x-small;">துள்ளிக் கொண்டு ஆர்ப்பரித்து</span><br />
<span style="font-size: x-small;">கைவிரித்துக் கொண்டாடிக் கொண்டாடி</span><br />
<span style="font-size: x-small;">மழைச் சாரலில் நனைந்ததுண்டு.....</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">உன்னுடன் குடிக்கும் தேனீர் நேரங்களுக்காக</span><br />
<span style="font-size: x-small;">ஜன்னல் கம்பிகளில் கன்னம் பதித்து</span><br />
<span style="font-size: x-small;">நீ பரப்பும் மண் வாசனைக்காகக் </span><br />
<span style="font-size: x-small;">காத்துக் கிடந்த காலமும் உண்டு.......</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">உனக்கான நேசம் கொஞ்சம் கொஞ்சமாக</span><br />
<span style="font-size: x-small;">ஒளிந்து கொண்டது.....</span><br />
<span style="font-size: x-small;">உனக்காக கை விரித்துக் கொண்டாடும் </span><br />
<span style="font-size: x-small;">குதூகலம் காணாமல் போனது...</span><br />
<span style="font-size: x-small;">மழையும், மழை சார்ந்த நினவுகளும்</span><br />
<span style="font-size: x-small;">மழையும், மழை சார்ந்த கவிதைகளும்</span><br />
<span style="font-size: x-small;">காணாமல் போய் .......உயிரற்றுப் போனது மனம்......</span><br />
<span style="font-size: x-small;">போதும் மழையே ......நிறுத்திக் கொள்...</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">அடித்துக் கொண்டு போன வெள்ளத்தில் </span><br />
<span style="font-size: x-small;">உன்மேலிருந்த பிரியமும் காதலும்</span><br />
<span style="font-size: x-small;">போட்டி போட்டுக் கொண்டு அடித்துச் சென்றது....</span><br />
<span style="font-size: x-small;">போதும்.....போதும்....கண்முன்னே நிறகாதே.....</span><br />
<span style="font-size: x-small;">நலமில்லை....நாங்கள்.....</span></div>
அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-88699130553782368842014-07-25T20:32:00.002+05:302014-07-25T20:33:45.059+05:30மீண்டும் மழையுடன் நான்!.....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
இரவு கொட்டும் மழையில்<br />
உதிர்ந்திருக்கக் கூடுமோ<br />
என மழை நீரில் கைகளால் அளைந்து தேடிக்<br />
கொண்டிருந்தேன் நடசத்திரங்களை....<br />
<br />
கொஞ்சம் தள்ளி சல்லடை வைத்து<br />
மழைநீரில் நட்சத்திரங்களை வடிகட்டிக் <br />
கொண்டிருந்தாள் மகள்....<br />
<br />
மழை இழுத்துக் கொண்டு வந்த<br />
தற்காலிக நதிகளின் சங்கமத்தில்<br />
திடீரென முளைத்த கால்களுடன்<br />
ஓடும் உதிர் இலை மலர்க் கூட்டத்துடன்<br />
கூட்டமாக நானும் இழுபடுவது தெரியாமலேயே<br />
இழுபட்டுக் கொண்டிருந்தேன்....<br />
<br />
எப்போதும் போல் மழை அது பாட்டுக்குப்<br />
பெய்து கொண்டிருந்தது....<br />
இழுபடும் மலர்க்கூட்டம் அது பாட்டுக்கு<br />
இழுபட்டுக் கொண்டிருந்தது....<br />
இழுபட்டுக் கொண்டிருக்கும் நான் மட்டும்<br />
ரொம்ப நாளைக்கு அப்புறமாய் இங்கே<br />
எட்டிப் பார்த்துக் கொண்டு!!.....<br />
மழையுடன் நான்.....!!!<br />
<br />
<br /></div>
அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-64021330524508684842013-06-08T20:00:00.003+05:302013-06-08T20:00:59.415+05:30கதை சொல்லவும்...கேட்கவும்....!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவதைக் கதைகளிலிருந்து<br />
பறக்கும் கம்பளத்தையும்<br />
வைரப் பொக்கிஷப் பேழைகளையும் <br />
சிறகு முளைத்த குழந்தைகளையும்<br />
பேசும் கிளிகளையும்<br />
சிரிக்கும் தவளைகளையும்<br />
காணாமல் போன செருப்பையும்<br />
பூசணிக்காய் ரதத்தையும்<br />
ஏழு மலைகளையும் <br />
ஏழு கடல்களையும் தாண்டி<br />
ஒளித்து வைத்திருக்கும்<br />
இளவரசனின் உயிரையும்<br />
சுருட்டி எடுத்துக் கொண்டாயிற்று <br />
கதை சொல்ல......<br />
<br />
வீடியோ விளையாட்டுகளிலும்<br />
தொலைக் காட்சியிலும்<br />
கணினிக் கொண்டாட்டங்களிலும் <br />
மூழ்கியிருக்கும் குழந்தைகளைத்தான்<br />
மீட்டு எடுக்க முடியவில்லை<br />
கதை கேட்க........ </div>
அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-82345426053085946822013-03-07T00:00:00.000+05:302013-03-08T18:25:36.256+05:30கொஞ்சம் என்னைப் போலவும்.....!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2WVtLZtaXfbnZLm7A3v9yrAyfLBLtTDQG9wRhAzi3cPFCdGvQvBFu0Ediv9_zlkAwzgjpoB33q5P-Yg-HoGtSg0yfu9rSKv11eBihAavSFWHHKJJmyPdyDOiCLWrlNejOx6Exwq_i76Q/s1600/SDC13216.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2WVtLZtaXfbnZLm7A3v9yrAyfLBLtTDQG9wRhAzi3cPFCdGvQvBFu0Ediv9_zlkAwzgjpoB33q5P-Yg-HoGtSg0yfu9rSKv11eBihAavSFWHHKJJmyPdyDOiCLWrlNejOx6Exwq_i76Q/s320/SDC13216.JPG" width="240" /></a></div>
கண்ணாடியில் ஒட்டும் பொட்டுக்களும் <br />
கையில் பேனாக் கிறுக்கல்களுடன்<br />
தொலை பேசி உரையாடல்களுமாய்<br />
என்னைப் போல்....<br />
<br />
வண்டியை ஓட்டும் சிரத்தையிலும்<br />
பத்திரப்படுத்தும் காகிதப் பழக்கத்திலும்<br />
அப்பாவைப் போல்...<br />
<br />
அடுத்தடுத்து சேனல் மாற்றுவதிலும<br />
நாள் முழுவதும் தலை பின்னுவதிலும் <br />
விடாது பாட்டுக் கேட்கும் குணத்திலும்<br />
அக்காவைப் போல்....<br />
<br />
நாட்கள் மரங்கள் உதிர்ந்த இலை<br />
போல உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன...<br />
குட்டிம்மாவைப் பெரியளாக்கிக் கொண்டே... <br />
பொக்கிஷமாய் வைத்து<br />
விளையாடிய செப்புச் சாமான்களும்<br />
பார்பி பொம்மைகளும் <br />
பரணில் குடியேற்றப்பட்டன....<br />
<br />
ஷின்சான் ,டோரெமோன்,<br />
டாம் அண்ட் ஜெர்ரி<br />
அனாதையாக்கப் பட்டார்கள்...<br />
<br />
பிறந்த நாளை எதிர்பார்த்து<br />
நாட்களை எண்ணும் வைஷு<br />
எங்கேயோ ஓடி ஒளிந்து கொண்டாள்...<br />
<br />
ஓயாமல் மணல் அள்ளிக் கொட்டும்<br />
கடல் அலை போல ஓடி ஓடி<br />
எதையேனும் இழுத்து வந்து<br />
போட்டுக் கொண்டேயிருக்கிறது மனம்.<br />
<br />
பொண்ணுங்க இப்படித்தான்<br />
திடீர்னு நமக்குச் சொந்தமில்லாமல்<br />
போய்விடுகிறார்கள் ......<br />
<br />
எங்கே பறித்து வைத்தாலும்<br />
மணம் வீசும் மலராகவும் <br />
எங்கேனும் தன் வேரை ஊன்றிக் கொள்ளவும்.<br />
மழை குடித்துக் கொள்ளவும்.<br />
காற்றைச் சுவாசிக்கவும்....<br />
வெயிலை உடுத்திக் கொள்ளவும்....<br />
வைஷுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!! <br />
<br /></div>
அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-75481399585846663242013-02-03T10:48:00.001+05:302013-02-03T10:49:47.916+05:30ஹையா !! விஸ்வரூபம் பார்த்துட்டேனே!!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அப்பாடா எவ்வ்ளோ சர்ச்சை......எவ்வ்ளோ பிரச்னை.....எவ்வ்ளோ விமர்சனங்கள்.....எவ்வ்ளோ ஆர்ப்பாட்டம்....எவ்வ்ளோ கோபங்கள்....எவ்வ்ளோ பேச்சுக்கள்...எவ்வ்ளோ அறிக்கைகள்...எவ்வ்ளோ பேட்டிகள்....எப்படியும் பார்த்தே விடவேண்டும் என்ற எண்ணம் வந்ததென்னவோ நிஜம்.<br />
ஒருவழியா ஜெய்ப்பூரில் ரிலீஸ்......முழுசா பார்க்க முடியுமான்னு ஒரு சந்தேகத்துடனேதான் கிளம்பினோம். எப்பவும் இருக்கும் கூட்டத்தை விட கூட்டம் கொஞ்சம் அதிகம் தான் தியேட்டரில்.<br />
ஐஸா க்யா ஹை இஸ் ஃபில்ம் மே வோ பி தோ தேக்லே..( அப்படி என்னதான் இருக்கு இந்தப் படத்துலே அதையும் தான் பார்த்துரலாமே) அப்ப்டிங்கிற கமென்ட் நிறைய கேட்க முடிந்தது....<br />
இது கண்டிப்பா பட விமர்சனம் கிடையாது.<br />
என் கருத்து..<br />
டெக்னிக்கலா விஸ்வரூபம் <b><span style="font-size: xx-small;"><span style="font-size: x-large;">"</span>வி</span><span style="font-size: x-small;">ஸ்வ</span></b><span style="font-size: large;">ரூ</span><span style="font-size: x-large;"><span style="font-size: x-large;">ப</span>ம்"</span><br />
<span style="font-size: x-large;"><span style="font-size: small;">கதை சொன்ன விதம் </span></span><span style="font-size: x-large;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: x-large;"><span style="font-size: small;">விஸ்வரூபம்</span> "விஸ்</span><span style="font-size: small;"><b>வ</b><span style="font-size: small;"><b>ரூ</b><span style="font-size: x-large;">பம்"</span></span></span></span></span></span> <br />
<span style="font-size: x-large;"><span style="font-size: small;">சர்ச்<span style="font-size: small;">சைக்<span style="font-size: small;">கு<span style="font-size: small;">ரி<span style="font-size: small;">ய<span style="font-size: small;">தா <span style="font-size: small;">பற்<span style="font-size: small;">றி </span></span></span></span></span></span></span></span></span><span style="font-size: x-large;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: small;">விஸ்வரூபம் <b><span style="font-size: small;">"வி@#$ஸ்<span style="font-size: small;">வ<span style="font-size: small;">@#$<span style="font-size: small;">*@#$<span style="font-size: small;">ரூ<span style="font-size: small;">பம்"</span></span></span></span></span></span></b></span></span></span></span></span></span></span></span></span><br />
<br />
<span style="font-size: x-large;"><span style="font-size: small;">நிறைய அரபி வசனங்கள் சப் டைட்டில் இல்லாமல் அதனால் அர்த்தம் புரியாமல் கருத்து எப்பிடி சொல்வது?<span style="font-size: small;">டோட்<span style="font-size: small;">டல் <span style="font-size: small;">கன்ஃ<span style="font-size: small;">பூ<span style="font-size: small;"><span style="font-size: small;">யூ</span>ஷன்!!</span></span></span></span></span></span></span><br />
<span style="font-size: x-large;"><span style="font-size: small;">எ<span style="font-size: small;">ன்<span style="font-size: small;">னைப்<span style="font-size: small;"> <span style="font-size: small;">பா<span style="font-size: small;">தி<span style="font-size: small;">த்<span style="font-size: small;">த <span style="font-size: small;">வி<span style="font-size: small;">த<span style="font-size: small;">த்<span style="font-size: small;">தில் <span style="font-size: small;">விஸ்<span style="font-size: small;">வ<span style="font-size: small;">ரூ<span style="font-size: small;">பம் <b><span style="font-size: xx-small;">"விஸ்வரூபம்</span></b></span></span></span></span></span></span></span></span></span></span></span></span></span></span></span></span></span><b><span style="font-size: small;">."</span> </b><br />
<span style="font-size: x-large;"><span style="font-size: small;"><span style="font-size: small;">இவ்வ்ளோ ஆர்ப்பாட்டம் இல்லையென்றால் இந்தப் படம் <span style="font-size: xx-small;">"விஸ்வரூபம்"</span></span></span></span><br />
<span style="font-size: x-large;"><span style="font-size: small;"><span style="font-size: small;"><span style="font-size: xx-small;"><br /></span></span></span></span>
<span style="font-size: small;">ஹ்ம்ம்...</span><span style="font-size: x-large;"><span style="font-size: small;"><span style="font-size: small;">ரொம்ப சாதாரணமாகக் கடந்து போயி<span style="font-size: small;">ரு</span>க்கவேண்டிய படம்!</span><b> </b></span></span></div>
அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-76647925993237254672012-11-23T20:38:00.003+05:302012-11-23T20:38:56.486+05:30மழையே நலமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
ஜன்னல் கம்பிகள் குளித்து நாளாச்சு!<br />
குருவி ஈரஇறகில் சிடுக்கெடுக்க மறந்தாயிற்று<br />
உன்னைச் சுமந்த குடைகள் மூலையில் முடங்கிக் கிடக்கிறது...<br />
கை விரித்துக் குளிக்கும் மரம் கடுப்பாகிக் கொண்டிருக்கிறது..<br />
<br />
உன்னை ஏந்த நீட்டிய கரங்கள் காலியாக.....<br />
உன்னுடன் குடிக்கும் தேனீர் நேரங்கள் ரத்து செய்யப்பட்டன...<br />
நீ விழுந்து பரப்பும் மண்வாசனை மறந்தது மண்....<br />
உன் சொட்டு பட்டுத் தெறிக்காத முற்றம் <br />
<br />
கன்னத்தில் ஒன்றும் கைவிரலில் ஒன்றுமாக<br />
ஒற்றைத்துளியாவது கொட்டிப்போ மழையே...<br />
நான் நலமே என்று ஒரு வரி சொல்லிப்போ மழையே....<br />
அது போதும் எனக்குக் கொஞ்சம் கவிதையெழுத....<br />
<br />
<br />
<br /></div>
அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-87799665866827470112012-10-14T20:54:00.000+05:302012-10-14T20:54:07.844+05:30கடவுளின் ஞாபகம் வருகிறது....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கையில் காசு இல்லாமல்<br />
கடந்து செல்லும் பெரும் செலவு<br />
மருத்துவர் அறையில் காத்திருக்கும் நொடி <br />
இயல்பாகக் கடவுளை ஞாபகப் படுத்துகிறது.....<br />
<br />
கூடிப் பிரியும் நட்பு நிரந்தரமாக் விலகிப் <br />
போகும் நிராகரிப்பின் போதும்<br />
தனிமை கழுத்தை நெறிக்கும் போதும் <br />
எப்போதும் கடவுள் ஞாபகம் வருகிறது....<br />
<br />
சுனாமி, பூகம்பம், நில அதிர்வு<br />
தீவிரவாதம்,குண்டு வெடிப்பு, விபத்து<br />
இவையெல்லாம் வெறுமே உச்சரிக்கும் போது கூட<br />
கடவுள் ஞாபகம் வருகிறது....<br />
<br />
தன்னைக் குறித்த அயர்ச்சியும்<br />
வாழ்வைக் குறித்த அச்சமும்<br />
கொஞ்சமாய் எட்டிப் பார்க்கும் போது<br />
கடவுளின் ஞாபகம் வருகிறது....<br />
<br />
இயல்பாக வாழும்<br />
இனிமையான காலங்களிலும்<br />
வெள்ளிக்கிழமைகளில் கூட <br />
எண்ணெய்க் கிண்ணத்துடன் சுற்றும் போதும் <br />
கோவிலின் சூடம் ஒத்தும் போதும் கூட<br />
என்னை நினைப்பதில்லையென<br />
வருந்திக் கொண்டிருந்தார் கடவுள்.....<br />
</div>
அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-37279067901336946452012-07-26T21:31:00.002+05:302012-07-26T21:31:48.698+05:30"மம்மிகோ போன் கர்லோ"!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அவள் சின்ன ரோஜாப் பூப்பந்து போல இருந்தாள். கூட வந்த அவங்க ரெண்டு பேரையும் பார்த்தால் அவளின் அப்பாம்மா போலத் தெரியவில்லை.கொஞ்சம் வயதானவர்கள் போலத் தெரிந்தார்கள். மகளா எனக் கேட்டாலும், பேத்தியா எனக் கேட்டாலும் தப்பாகிவிடுமோ என்று இவள்? எனக் கேள்விக் குறியுடன் நிறுத்திக் கொண்டேன்<br />
எங்க பொண்ணுதான் என்றவாறு உட்கார்ந்து கொண்டார்கள்.12 வருடம் கழித்துப் பிறந்தாள் என்று எடுத்த எடுப்பிலேயே என் சந்தேகங்களுக்கு விடை கொடுத்து விட்டார்கள்.கொஞ்சம் செல்லமா பொத்திப் பொத்தி வளர்த்துட்டோம்.அவளை விட்டுட்டுப் போக மனசேயில்லை....அதனால் இப்படி ஒரு ஓரமா அவ க்ளாஸ் ஜன்னல் பக்கமா உட்கார்ந்து அவ அழுகையை நிறுத்தியதும் போகட்டுமா? என்று கேட்டார்கள். கொஞ்சம் பாவமாகத்தானிருந்தது....ஆனாலும் அப்படி அனுமதிக்க முடியாதே என்று "இல்லையில்லை நீங்க கிளம்புங்க இங்க அவளை ரொம்ப நல்லா பார்த்துக்குவோம்னு அவர்களை அவளிடமிருந்து பிரித்தெடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.<br />
பொண்ணு கதறிக் கதறி அழுதாள் இவர்கள் கதறாமல் அழுதார்கள் என்பதுதான் வித்தியாசம்.<br />
வேலை நடுவில் மறந்துவிட்டேன்.நினைவு வந்ததும் அந்தக் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டதா என cctv காமெரா மூலமாகப் பார்த்தால் பிங்க் நிற ரோஜா இப்போது சிவப்பு நிறமாகி விட்டிருந்தாள் அழுது அழுது....அச்சச்சோ என்று உடனே ஆயாம்மாவை அனுப்பி அழைத்து வந்தால் ஒரே கத்தல். சாக்லேட்,பொம்மை எதுக்கும் அடங்க மாட்டேங்கிறது என்று தகவல்.முதல் வேலையாக போனை எடுத்து அவங்க அம்மாவிடம் பேசுவது போல <br />
"அச்சா ஆப் ஆரஹே ஹோ....பூஜா கோ ஆகே கர் லே ஜானா....ஜீ ஹான் வோ சுப் பைட்டி ஹை" ("ஓ நீங்க வரீங்களா...பூஜாவை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க.இப்போ அவ அழாமலிருக்கா")அப்படீன்னதும் சத்தம் மூச் இல்லாமல் அழுகை நின்றது.<br />
என் முன்னால் நாற்காலியில் உட்கார்ந்து விட்டாள். பத்து நிமிடத்துக்கு ஒரு முறை "மம்மிகோ போன் கர்லோ மம்மிகோ போன் கர்லோ" என்பதுவும் நான் பொய்யாய் போன் போடுவதும் தொடர்ந்தது.<br />
இது முதல் நாள்தானே என்று பார்த்தால் தினமும் "மம்மிகோ போன் கர்லோ மம்மிகோ போன் கர்லோ" என்று என்னை எங்கே பார்த்தாலும் "மம்மிகோ போன் கர்லோ மம்மிகோ போன் கர்லோ" என்று ஒரே அழுகை. இது முதல் வாரம்......முதல் மாதம் என்று தொடர்ந்தது.<br />
அன்று ஊஞ்சலில் இருந்து விழுந்து நெற்றியில் காயப்படுத்திக் கொண்டாள். ரத்தத்துடன் வந்ததும் கொஞ்சம் பதறி<br />
"இஸ்கா மம்மிகோ போன் கர்லோ" ( அவங்க அம்மாவும்மு போன் போடுங்க) என்றதும்<br />
"இஸ்பார் சச்சிமே போன் கர்லோ" ( இந்த தடவை நிஜமாலுமே போன் பண்ணுங்க) என்று பூஜா அழுகையினூடே சொன்னதும் கொஞ்சம் அதிர்ந்தும் அசந்தும் போய் நின்றேன். குட்டீஸ்கள்தான் எவ்வ்ளோ சமர்த்தா இருக்காங்கன்னு இன்னும் யோசித்துக் கொண்டே.............ம்ம்ம் நான்தான்!!!!!</div>அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-60799162663554348932012-06-26T19:39:00.000+05:302012-06-26T19:41:14.093+05:30முன்பு போலில்லை எதுவும்.......<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgitwKrpG6g12Ns2bVYX32XUgNLEbVqXjyelEEDKt8IkvQMNtswbliukDzuMTt7U4haOhnBUIHgSMNphfnXVJVlSF9LksbGVor_9aUAV6F6c1jLZmyQu_VvnZkzQErdN5k1vJL1y5JSR8k/s1600/IMG_9420.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgitwKrpG6g12Ns2bVYX32XUgNLEbVqXjyelEEDKt8IkvQMNtswbliukDzuMTt7U4haOhnBUIHgSMNphfnXVJVlSF9LksbGVor_9aUAV6F6c1jLZmyQu_VvnZkzQErdN5k1vJL1y5JSR8k/s320/IMG_9420.JPG" width="320" /></a></div>
தொலை பேசியிலும், ஈ- மெயிலிலும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!!!<br />
<br />
<b>முன்பு போலில்லை எதுவும்.......</b><br />
<br />
சோத்துத் தட்டு நாலு மூன்றாகியது....<br />
காபிக் கோப்பைகள் பழைய ஞாபகத்தில்<br />
நான்கில் நிரப்பப் பட்டு மூன்றாகிறது...<br />
தோசையும் சப்பாத்தியும் சுடும் பொழுது<br />
எண்ணிக்கையில் உன்னையும்<br />
இன்னமும் சேர்த்துக் கொண்டிருக்கிறது......<br />
<br />
உன் பொருட்களை நகர்த்தி வைக்கமுடியாமல்<br />
ஒட்டிக் கொண்டிருக்கின்றன உன் நினைவுகள்<br />
வீடு முழுக்க நிறைந்திருக்கும் உன் வாசனைச்<br />
சிறையிலுருந்து விடுவித்துக் கொள்ளத் தெரியாமல்<br />
விரும்பி அடைபட்டுக் கிடக்கிறோம்.... <br />
<br />
அழைக்கும் மணியோசைக்கும்<br />
மினுக்கும் உன் முகத்திற்குமாய்<br />
<span style="color: #003300;">சில மைல்களுக்கப்பாலிருந்தபடி</span><br />
<span style="color: #003300;"></span>தொலைபேசியைப் பார்த்துக் காத்திருப்பது<br />
வழக்கமில்லாத வழக்கமாகி விட்டது.... <br />
<br />
தாரை வார்த்துக் கொடுத்ததும் தண்ணீராய்<br />
உன்னைக் கொடுக்கத்தானா இவையத்தனையும்<br />
என கண்ணில் கட்டிக் கொண்ட <span style="color: #003300;">நீருடன் </span><br />
<b>பிரியங்கள்</b> இத்தனை நாளில்லாத அவசரத்துடன் <br />
உன்னை இறுக்கமாகப் பற்றிக் கொண்டது அன்று.....<br />
<br />
எதற்காக இது அத்தனையும் என்னும் கேள்வியும்<span style="color: #003300;"> </span><br />
<span style="color: #003300;">நாமாகவே இழுத்துப்போட்டுக்கொள்கிறவைதானே </span><br />
<span style="color: #003300;">இவை என்ற எண்ணமும்</span><br />
பெண்ணைப் பெற்ற அனைவரிடமும் எப்போதாவது <span style="color: #003300;"></span><span style="color: #003300;"> </span><br />
<span style="color: #003300;">தோன்றியிருக்கலாம்.....என்ற எண்ண விதைகளுடன் </span><br />
<span style="color: #003300;">உன் அம்மா........</span><br />
<span style="color: #003300;"><br /></span></div>அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com26tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-54894329290374468092012-03-08T06:00:00.000+05:302012-03-08T06:00:01.256+05:30நான் வளர்கிறேனே மம்மீ!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC6oD7K63WLc6R4YWAT0Ft_ei0Zwz2MRe5h4cDBlyTPjl3FFO_j3anXb2Z2Rp4wSWoFLhHvkDxBb88K0noifGrekQ4f25P7NLbrOT8V-5lssswdaaXGRU14j68Yy6e3CFcuYHed3bO5do/s1600/SDC12642.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhC6oD7K63WLc6R4YWAT0Ft_ei0Zwz2MRe5h4cDBlyTPjl3FFO_j3anXb2Z2Rp4wSWoFLhHvkDxBb88K0noifGrekQ4f25P7NLbrOT8V-5lssswdaaXGRU14j68Yy6e3CFcuYHed3bO5do/s320/SDC12642.JPG" width="320" /></a></div>
<span style="font-size: 85%;"><span style="font-size: 85%;">மகளிர்
தினம்.....என் மகளின் தினம்......ஹோலி மூன்றும் ஒன்றாக இந்த முறை......இன்று அவளின் பிறந்த நாள். எப்பவும் போல்
இந்த முறையும் பரீட்சை நேரம்...No Celebration!</span></span><br />
<span style="font-size: 85%;"><span style="font-size: 85%;">எப்போதும் பரீட்சை டைம் டேபில் வந்ததிலிருந்து அழுது கலங்கடிக்கும் வைஷ்ணவி இல்லை இந்த முறை.....................அதிலே ரொம்ப வருத்தம் இருந்தாலும் இந்த தடவை நல்ல புரிதல்.................That's fine with me mummy.....We'll have the fun after Exams என்று அவளாகவே புரிந்து கொண்டதில் எனக்குக் கொஞ்சம் ஆச்சர்யமும் ஏன் கொஞ்சம் ஏமாற்றமும் கூட.......???!!!</span></span><br />
<span style="font-size: 85%;"><span style="font-size: 85%;"> கைப் பிடித்துக் கூட்டிப் போகும் போது கையை உதறி ஓடும் போது எப்படி ஓடப் படித்து விட்டாளே என்று சந்தோஷமும் என்னை விட்டு ஓடுகிறாளே என ஒரு வருத்தமும் இருக்குமோ அதுவேதான் இப்போதும்.....</span></span><br />
<span style="font-size: 85%;"><span style="font-size: 85%;"> அதெப்படிக் குழந்தைகள் ஒவ்வொரு கட்டத்திலும் படித்துக் கொள்ளும் விஷயங்களை இயல்பாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று பெரிய மனுஷியாக நான் வளர்கிறேனே மம்மீ!!! என நகர்ந்து விடுகிறார்களோ .... தெரியவில்லை......அம்மாக்கள் மட்டும் எப்போதும் அடுத்த கட்டத்துக்கு நகரும் குழந்தைகள் கூடவே நகராமல் குழந்தையைப் பெற்றெடுத்த முதல்நாளிலேயே அம்மாக்களாகவே நின்றுவிடுகிறார்கள்...........</span></span><br />
<span style="font-size: 85%;"><span style="font-size: 85%;">நினைப்பதெல்லாம் நிறைவேற இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வைஷ்ணவி!!!<br /><br />
</span></span></div>அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com45tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-61954666210718202932012-02-23T20:24:00.000+05:302012-02-23T20:24:49.090+05:30கண்ணாடி ஜன்னல்களை எனக்குப் பிடிப்பதில்லை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மூடிக் கிடக்கும் கதவு தட்டப்படும் போதெல்லாம் யாரோ வந்து ஏதோ ஒரு உற்சாகத் தகவல் சொல்லப் போகிறார்கள் என்னும் எண்ணமும், உறங்கிக் கிடக்கும் தொலை பேசி பாடல் பாடி அழைக்கும் போது யாரோ ஒரு முகம் தெரியா உறவு ஒரு சந்தோஷத்தில் ஆழ்த்தும் தகவல் சொல்லும் என்று காத்துக் கிடக்கும் மனமும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.உறைக்குள் உறங்கிக் கிடக்கும் கடிதமொன்றைப் பிரிப்பதில் இருக்கும் அவசரம் அதனுள் இருக்கும் ஒரு முன்பே தெரிந்திராத ஒரு விஷயத்துக்காக......அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அழகாக வண்ணக் காகிதங்களால் சுற்றப் பட்ட பரிசுப் பொருள் பிரிக்கப் படும் படபடப்பு அதனுள் இருக்கும் பரிசுக்காகத்தானே.....இதுவரை சுற்றப் பட்ட வண்ணக் காகிதங்களைத் தாறுமாறாகக் கிழிக்காமல் ஒழுங்காக ஒருமுறை கூடக் கிழித்ததில்லை.<br />
மூடிக் கிடக்கும் ஜன்னல்கள் அடக்கி வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் கூட இந்த வகைதான்.மெயில் பாக்ஸ் திறக்கும் போதும் பாஸ் வேர்ட் டைப் பண்ணும் போதும் புது மெயில் கொண்டு வந்து தரும் செய்திகளுக்காக ஏங்கித்தான் கிடந்து போகிறது மனம். மொட்டவிழாத மலர்,மூடி திறக்காத சிப்பி, தளிர்க்காத செடி,முளை விடாத விதைகூட இப்படி வாழ்வின் ஒவ்வொரு படியிலும் ஆச்சர்யங்கள். <br />
கடல் முன்னால் தாகத்தோடு நிற்கும் உணர்வும் கடலுக்குள் எதையோ தேடி ஓடவேண்டும் என்ற எண்ணமும் கூடத் தவிர்க்க முடியாததாகிப் போகிறது. நீள் சாலையில் தன்னந்தனியாக ரப் ரப்பென்று சத்தமெழுப்பியபடி ஓடும் மனம் என் கண்ணில் எனக்கே தெரிகிறது....இது கொஞ்சம் அதிகம்தான்.ஆனால் எனக்கு நடக்கிறதே....<br />
தபால் கார்டுகளும்<br />
கண்ணாடி ஜன்னல்களும்<br />
எனக்குப் பிடிப்பதில்லை<br />
தகவல்களை எனக்கு<br />
முன்கூட்டியே சொல்லிவிடுவதால்...<br />
தெரியாதவைகளுக்கும்<br />
தெரிந்தவைகளுக்குமிடையே<br />
ஒரு சமன்பாட்டைப்<br />
போட்டுக் கொண்டு<br />
இயல்பாக இருக்க<br />
முடிந்தவர்கள்<br />
அசாதரணர்கள்......<br />
நான் பாவம்<br />
சாதாரணமானவளாய்<br />
இருந்துவிட்டுப் போகிறேன்....<br />
<br />
தேடல்களும் ஓட்டமும்தான் இயக்கிக் கொண்டிருக்கும் சக்தி.வண்டியோட்டும் போதும் கூட என்னை முந்திச் செல்லும் வண்டிகளும் நான் முந்திச் செல்லும் வண்டிகளும் கூட என் ஓட்டத்துக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்துக் கொன்டிருக்கின்றன.......</div>அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-32918866325413472872012-01-14T21:46:00.000+05:302012-01-14T21:47:42.020+05:30இன்று பறவைக்குப் பின்னால் போனது மனம்.....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அங்கே பொங்கல்...இங்கே சங்க்ராந்தி!<br />
ம்ம்...பட்டம்
வங்கியாச்சு...மாஞ்சாவும் ரெடி.விடிந்தவுடன் அலறும் ஸ்டீரியோ தட்டு
தட்டாய்த் தின்பன்டங்கள் ஒருவீடு இல்லாமல் அத்தனை பேரும் மொட்டை மாடியில்
ஒரு நாள் முழுவதும் பட்டம்....விடுவதும்...அறுபடுவதுமாய்....அறுபட்டவுடன்
"ஓ காட்டியோ" என்ற அலறலும்.....சில வீடுகளில் மைக்கில் "நீலப் பட்டம்
வெள்ளைப் பட்டத்தை அறுக்கப் போகிறது....இதோ நீலப் பட்டம்
சிக்கலுக்குள்ளாகிறது...இதோ...ஆஹா...அறுந்தேவிட்டது நீலப் பட்டம்.."என்று
ரன்னிங்க் கமென்ட்ரி கூட உண்டு.இது ஒரு புது வகையான பொங்கல்தான்.<br />
<br />
வீட்டினுள் பொங்கல் வைத்துப் பூஜை செய்தும் பொங்கல் கொண்டாடிவிட்டு
மொட்டை மாடியில் பட்டம் விட்டுச் சங்க்ராந்தி கொண்டாடுவதாகவுமே பொங்கல் பல
வருடங்களாக மாறிவிட்டிருக்கிறது..<br />
<br />
முற்றம் நிறைக்க கோலம்
போட்டு,வெளியில் பனியில் வெண்பொங்கலும்,சர்க்கரைப் பொங்கலுமாகப் பொங்க
வைத்து குலவையென்ற பேரில் கூப்பாடு போட்டு,கரும்பு கடித்துத்
துப்பி,பனங்கிழங்கு உடைத்து ம்ம்ம் எவ்வ்ளோ நாளாச்சு இப்படிப் பொங்கல்
கொண்டாடி....<br />
<br />
நீர் நிலம் எல்லாம் எனக்கேயென
எடுத்துக் கொண்டாலும் இன்னும் திருப்தியில்லாமல் இன்று வான்வெளி
முழுவதையும் எனக்கே என எடுத்துக் கொண்டு பறவைகளைப் பயப்படுத்துகிறான்
மனிதன்.இந்த வாரத்தில் மட்டும் நூற்றுக் கணக்கான அடிபட்ட பறவைகளையும்
இறந்து போன பறவைகளையும் கணக்குக் காட்டுகிறது செய்தித் தாள்.பள்ளிகளில்
பிரார்த்தனையின் போது காலை 9 மணிக்கு மேலும் சாயங்காலம் 4
மணிக்குள்ளும்தான் பட்டம் விடவேண்டும் என்றும் அறிவுரை சொல்லப்படுகிறது
ஆனாலும் விடியும் முன்னே பட்டம் என்னவோ பறக்க ஆரம்பித்து விடுகிறது.<br />
<br />
வீட்டுக் கூண்டுக் கிளிகளின் மேலும் நாய்க்குட்டிகளின் மீதும் வைக்கும்
பாசம் பொதுவாக பறவைகளின் மீது இல்லாமல்தான் போய்விடுகிறது.இங்கே
ஜெய்ப்பூரில் அடிபட்டு விழும் பறவைகளை உடன் எடுத்து சிகிச்சை அளிக்க என்றே
ஒரு இளைஞர் குழு ஊர் முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது
கொஞ்சம் ஆறுதல்.<br />
<br />
ஊரில் ஏதாவது கலவரம் என்றாலோ,சூரிய
கிரஹணம் என்றாலோ பிள்ளைகளிடம் இன்று வெளியே போகவேண்டாம் என்று சொல்வதைப்
போலப் பறவைகளும் தன் குஞ்சுகளுக்கும் சொல்லிப் பத்திரப்படுத்துமா?கொஞ்சம்
பறவைகளுக்காய் இன்று மனம் பதறுகிறது.கூட்டை விட்டு வெளியில்
வராமலிருந்தால் தப்பித்து விடும்..அப்புறம் அதுகளுக்கு இன்றைக்குச்
சாப்பாடு.???<br />
<br />
கம்பு கம்பாய் இணைக்கிற கயறுகள் குருவிகள் ஊஞ்சலாடாமல் தனியே
ஆடிக் கொண்டிருந்தது.வீட்டு ஜன்னல்களின் ஓரம் வைக்கப் பட்ட தண்ணீர்
குடிக்காமல் தளும்பியிருந்தது.தூவப்பட்ட அரிசி கேட்பாரற்றுக்
கிடந்தன்...மொட்டை மாடி நிறைக்க மனிதர்கள்...மனிதர்கள்...வீடு நிறைய
வருவோரும்..போவோரும்...<br />
<br />
மனது மட்டும் தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் முங்க
முடியாமல் கிடக்கும் ப்ளாஸ்டிக் மக் போல பறவைக்குப்
பின்னால்.......விரித்து வைத்த செய்தித்தாளின் மேல் சிறகிலிருந்து பிரிந்த
இறகொன்று விழுந்து கிடந்தது......ம்ம்ம்....காயம் பட்டு வீழ்ந்த
பறவையோடதா??????....உயிர் பிரிந்து வீழ்ந்த பறவையோடதா????கவலையாயிருந்தது.</div>அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-81605451339942861202011-12-14T19:33:00.000+05:302011-12-14T19:33:17.717+05:30சிக்கிக் கொண்டிருந்தாள் அம்மா ...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ரபுன்செல்லின் சிடுக்கில்லாத கூந்தலின்<br />
இடுக்குகளிலும்<br />
<br />
சின்ட்ரெல்லாவின் உடுப்புகளின்<br />
மடிப்புகளிலும்<br />
<br />
ஆலிஸ் இன் வொண்டர்லேண்டின்<br />
குட்டி உலகத்தின்<br />
குட்டிச் செப்புச் சாமான்களுக்குள்ளும்<br />
<br />
குட்டித் தேவதை தம்போலினாவின்<br />
இறகுகளுக்குள்ளும்<br />
<br />
ஏழு குள்ளர்களின் சூப்<br />
கிண்ணங்களுக்குள்ளுமாய்த்<br />
<br />
தொலைந்து கொண்டிருந்த குட்டிம்மா<br />
திடீரென வீட்டுப் பாடக் கணக்குகளில் மூழ்கிய போது<br />
<br />
செய்ய ஒன்றுமில்லாமல்<br />
தேவதைக் கதைகளுள்<br />
கொஞ்சம் கொஞ்சமாய்ச்<br />
சிக்கிக் கொண்டிருந்தாள் அம்மா ......<br />
<br />
<br />
<br /></div>அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-26540894831451368032011-11-21T19:56:00.001+05:302011-11-22T08:31:38.525+05:30பிட்ஸா ஹட்டில் ஒரு இரவு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எதையும் ரசிப்பதற்கும் அதைப் பாராட்டுவதற்கும் ஒரு
தனிப்பட்ட மனநிலை தேவையாக இருக்கிறது. அது இல்லாத பட்சத்தில் அதை எதிர்
கொள்பவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு
கண்டும் காணாமல் நகர முடிகிறது.<br />
<br />
இப்படித்தான் ஒரு முறை பிட்ஸா ஹட் போயிருந்த போது Hot 'n' Spicy Pepperoni, Fresh Tomato Margherita ,Tuscani Lasagne,Meatball Napolitana - என
என்னென்னவொ வாயில் நுழையாத பெயரையெல்லாம் ஆர்டர் செய்து கொண்டிருந்தார்கள்
பொண்ணுங்க.அவனும் விதவிதமான நிறங்களில் விதவிதமான குடுவைகளில் விதவிதமான
வடிவங்களில் கொண்டு வந்து வைத்தான்.சிலவற்றை எப்படிச் சாப்பிடுவதென்றே தெரியவில்லை.சிலவற்றை
தொட்டுச் சாப்பிடுவதா இல்லை குழைத்துச் சாப்பிடுவதா அல்லது ஸ்பூனால்
அள்ளிச் சாப்பிடுவதா என்ற குழப்பம் கடைசி வரையில் இருந்தது. எனக்கு இந்தக் குழப்பங்களெல்லாம் பிடிக்காததனால் எப்பவும் தோசை மாதிரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து விட்டு அமைதியாகி விடுவது வழக்கம்.<br />
<br />
நாசுக்கான ஆங்கிலத்துடன் நளினமான நடையுடன்
பரிமாறுபவர்களாக இருந்தாலும் அழகாக மிடுக்கோடு நடந்தார்கள். எப்பவுமே அங்கே
சாப்பிடப் போவதென்றால் 8 மணிக்குச் சாப்பாடு வேண்டுமென்றால் 6
மணிக்கெல்லாம் போய் உட்கார்ந்து விடவேண்டும்.ரெண்டு மணி நேரம் வாய்
பார்த்துக் கொண்டிருந்தால் பசி போய் ஒரு விதமான யோகநிலைக்கு வந்திருப்போம்
அப்போது பார்த்துச் சின்னச் சின்னக் கிண்ணியாகக் கொண்டு வந்து வைத்தால்
அம்ருதம் போல் கொஞ்சமாகச் சாப்பிட்டு விட்டு (அவ்வளவுதான் இருக்கும்) வயிறு
நிறைந்தது போல பாவ்லா செய்து கொண்டு கிளம்பி விடலாம். ஆனாலும் பில் என்னவோ
ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு வந்திருக்கும்.<br />
<br />
கொண்டு
வைத்த White Sauce தீர்ந்து போனதால் இன்னும் கொஞ்சம் கேட்டால் "You have to
order sir"அப்படீன்னான்.ம்ம்ம் இனி ஆர்டர் பண்ணி இன்னும் ரெண்டு மணிநேரம்
காத்துக் கிடந்து....போதுண்டாப்பான்னு விட்டாச்சு.ம்ம் நம்மூரிலே சாம்பார்
வாளியைப் பக்கத்திலேயே வச்சு தோசையை ஊறவச்ச காலம் நினைவுக்கு வந்துச்சு.!
ரொம்ப சளிப் பிடிச்சு இருந்ததாலே கொஞ்சம் வெந்நீர் கொண்டு வாப்பான்னா "Yes
Sir" அப்படீன்னு சொன்னவன் கிளம்பற வரைக்கும் கொண்டே வரல்லை. சரி இதுதான்
போகட்டும்னு பார்த்தால் நாங்க சாப்பிடாத ஏதோ ஒரு "Deluxe Carbonara"
அப்படீங்கற ஏதோ ஒரு ஜந்துவையும் நாங்க சாப்பிட்டதா பில்லிலே
சேர்த்திருந்தான். இதை எப்படிப்பா கேக்குறதுன்னு முழி முழின்னு முழிச்சு
"கம்"முனு இருந்தாச்சு.<br />
" Did you enjoy the food Mam?" எனக் கேட்டதற்கும்
முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு கண்டும் காணாமல் நகர முடிந்தது <br />
<br />
சாப்பிட்டு முடிக்கிறவரைக்கும் கோவில் மணி போல ஒரு மணி
அடிக்கிற சத்தம் கேட்டுட்டேயிருந்துச்சு. சாப்பிட்டு முடிச்சுட்டு போறவங்க
சாப்பாடும் செர்வீஸும் நல்லாருந்தா அதை அங்கே வெலை செய்றவங்களுக்குத்
தெரிவிப்பதற்காகத்தான் அந்த மணி தொங்க விட்டிருக்கும். பொண்ணுங்க ரெண்டும்
நான் ரெண்டு தடவை, நான் மூணு த்டவை அடிக்கப் போறோம்னு கத்துச்சுங்க.
வ்யித்துப் பசி அடங்காத கோபத்திலேயும் இவனுக பண்ணுன செர்வீஸுக்கு மணி
அடிக்கிறதுதான் கொறைச்சல்னு இழுத்துக்கிட்டு வந்தேன்.<br />
<br />
வர்ற வழியெல்லாம் புலம்பிகிட்டே வந்தேன்.உருப்படியா நல்ல ரெஸ்டாரென்டுக்குப் போயிருக்கலாம்னு. வீட்டுக்கு வந்து சாவியை எடுக்க......."அய்ய்யய்யோ பர்ஸ் மொபைல் எல்லாத்தையும் "பிட்ஸா ஹட்லே" விட்டுட்டு வந்துட்டேனே" என்ன செய்றதுன்னு ஒரே பதட்டம். ஏற்கெனவே மணி பதினொண்ணு.அய்யோ பூட்டியிருப்பானோ. இப்போ என்ன பண்றதுன்னு எல்லார் மேலேயும் ஒரே கத்தல்.<br />
<br />
இவங்கதான் முதல்லே பொறுமையாயிருங்க...அப்படீன்னுட்டு என் நம்பருக்கு டையல் செய்தார்.வந்த பதில் .<br />
<br />
"No worries Sir , we are waiting for you ...your things are safe"அதே வெயிட்டர்<br />
அடிச்சு பிடிச்சு ஓடிப் போனா அதே வெயிட்டர் புன்னகையுடன்<br />
<br />
"Here are the things Mam, please check"<br />
ஓடிப் போய் யாருமேயில்லாத அந்த நேரத்தில் அந்தப் பாராட்டு மணியை மீண்டும் மீண்டும் சந்தோஷத்துடன் எல்லோருமாய் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டேயிருதோம்</div>அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-60967470554150369092011-11-08T20:35:00.000+05:302011-11-08T20:35:58.772+05:30உயிர் மீது வைக்கப்பட்ட "செக்"<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
உயிர் மீது வைக்கப்பட்ட<br />
"செக்" போலச் <br />
சிரித்துக் கொண்டு உடல்<br />
நுழைந்தது நோய்......<br />
<br />
எனககே தெரியாமல்<br />
என் உயிரைப் பிடித்து<br />
இழுத்துக் கொண்டு<br />
யாருக்கும் தெரியாமல்<br />
<br />
ஏழு கடல் தாண்டி<br />
ஏழுமலை தாண்டி<br />
ஏழு வானம் தாண்டி<br />
ஏழு நிறம் கொண்ட <br />
<br />
கண்ணாடிப் பேழையில்<br />
வைத்துப் பூட்டிச் சாவியைத்<br />
தொலைக்கும் கனவை<br />
அடிக்கடிக் கண்டது மனம்......<br />
<br />
</div>அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-59612987802362044122011-09-21T10:02:00.001+05:302011-09-21T10:03:02.628+05:30இன்று சும்மாயிருக்கலாமெனத் திட்டம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இன்றைக்குச் சும்மாயிருக்கலாம் <br />என்று ஒரு சிந்தனை<br />வானொலிக்கும், தொலைபேசிக்கும்<br />தொல்லைக் காட்சிக்கும் <br />சும்மாயிருக்கக் கட்டளை.....<br /><br />யாருமில்லாத<br />வீட்டினுள் வெயில்<br />ஜன்னல் வழியாக நகர்ந்து கொண்டே<br />நேர நகர்தலை உணர்த்தியது....<br /><br />கொஞ்ச நேரம்<br />அரிசி தூக்கி நகரும் <br />எறும்பையும்<br />சுவரில் பூச்சி பிடிக்கும் <br />பல்லியையும்<br />ஜன்னல் திட்டில் அரிசி கொத்தும்<br />குருவியையும் <br />பார்த்துக் கொண்டிருந்தாயிற்று...<br /><br />பூட்டிய கதவும்<br />அறையின் சுவர்களும்<br />ஜன்னலின் இடுக்குகளும் <br />என் சுவாசத்தைக் கடத்தாமல்<br />எனக்கு மூச்சு முட்டியது<br /><br />யாராவது யாரையாவது கைபேசியில்<br />எதெதெற்கோ புதுப் புது பாடலால்<br />அழைத்துக்கொண்டே யிருந்தார்கள்...<br /><br />எப்போதும் கூடவேயிருக்கும் <br />எதுவோ ஒன்று உலகத்தைத் <br />துண்டித்து விடாமல் என்னுடன் <br />இணைத்துக் கொண்டேயிருக்கிறது....<br /><br />எப்படி ஒன்றும் செய்யாமல்<br />சும்மாயிருக்கத் தொடங்குவதென <br />ஒன்றும் செய்யாமல் இருக்கும் <br />முயற்சியில் மீண்டும் மீண்டும் <br />தோற்றுக் கொண்டேயிருந்தேன்...</div>
அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-70431610012425784942011-09-01T08:13:00.000+05:302011-09-01T15:27:07.741+05:30தனிமை போன்ற அற்புதமும்,கொடுமையும்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தனிமை போன்ற அற்புதம் உலகில் வேறு எதுவுமில்லை.அதே நேரம் அதைப் போன்ற கொடுமையும் வேறொன்றுமில்லை.கசகசவென்று கூட்டங்களிடையே வேலை நேரம் முழுவதையும் கழிப்பவர்களுக்கு எப்போதோ கிடைக்கும் தனிமை ஒரு வரம்.தனிமையிலேயே வாழ்நாள் முழுவதும் கழிக்கும் பக்கத்து வீட்டு ஸ்டீபன் தாத்தாவிற்குக் கூட்டம் ஒரு வரமாகவும் தனிமை ஒரு சாபமாகவும் தெரிவதில் வியப்பொன்றுமில்லை.<br />
<br />
ஸ்டீபன் தாத்தாவை சின்னவயதிலிருந்து பார்த்திருக்கிறேன்.ஒரு ஈசிச் சேரில் கைகளிரண்டையும் தலைக்கும் மேல் தூக்கிக் கொண்டு போற வர்றவங்களைப் பார்த்துக் கொண்டே ரொம்ப வருடங்களைக் கடத்திவிட்டார்.அந்தக் காலத்து M.A.<br />
<br />
எப்போதும் ஆங்கில நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்.காலையில் பள்ளிக்குச் செல்ல குழந்தைகள் அந்தவழியாகக் கடக்கும் போது மரத்திலிருந்து உதிர்ந்த நெல்லிக்காய்களை உப்பில் ஊறப்போட்டுக் கிண்ணத்தில் வைத்து எல்லோருக்கும் கொடுப்பார்.இது அந்தக்க்காலத்தில் நடந்தது....அப்போலாம் வாங்க மறுக்கும் குழந்தைகளிடம் "தாத்தா பிரியமாத் தர்றாரில்லே வாங்கிக்கோ"என்று சொல்லும் அம்மாக்கள்தான் அதிகம். இப்போலாம் மாதிரி "யார் எது கொடுத்தாலும் வாங்கித் தின்னக் கூடாது"என்று சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் எதுவுமில்லை அப்போது.<br />
<br />
நான் அவரைக் கடக்கும் போதெல்லாம் தாத்தாவுக்கு ஏன் யாருமேயில்லை என நினைப்பதுண்டு.அப்புறம் பள்ளியிறுதி நாட்களின் போது வாழ்வியல் புரிந்த போதும் தாத்தா யாருடனாவது போய்ச் சேர்ந்து இருக்கலாமே என நினைப்பதுண்டு.<br />
<br />
எப்பவாது சிலநேரம் ஸ்டீபன் தாத்தா பக்கத்தில் உட்கார்ந்து கதைபேசுவதைக் கேட்பதுண்டு.அப்பப்போ புதுசு புதுசாய் வந்த கார்களைப்பற்றிப் பேசுவார்.கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டார்.அந்தக்காலப் பொண்ணுங்களைப் பற்றியும் அவங்க ஆத்துக்குத் தண்ணீரெடுக்கப் போகும் அழகைப் பற்றியும் வர்ணிப்பார்.<br />
<br />
அப்புறம் மேல்படிப்பு, வேலை என்று ஊரெல்லாம் சுற்றும் போதும் அம்மாவிடம் ஸ்டீபன் தாத்தா பற்றி விசாரிப்பதுண்டு.அம்மாதான் சொல்வாள் பேச்சுத் துணைக்குக் கூட யாருமில்லாமல் தனியே அல்லாடிக் கொண்டிருப்பதாக.தாத்தாவை நம்ம வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து விடுவோமாம்மா என்று சின்ன வயதில் அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். அதையே இப்போதும் நினைத்தேன்.இருந்தாலும் இந்த உலக நடைமுறைச் சிக்கல்களையும் நினைத்துக் கொண்டேன். <br />
<br />
அப்புறமாய் சிங்கப்பூரிலிருந்து ஒரு வார விடுப்பில் வந்த போது ஒருநாள் ஸ்டீபன் தாத்தாவைப் பார்க்கப் போன போது ரொம்ப மெலிந்து போயிருந்தார்.கையைப் பிடித்துக் கொண்டு சூடான வெது வெதுப்பான கைகளுக்குள் வைத்துக் கொண்டார்.ஒன்றுமே பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.<br />
<br />
"என் கூட சிங்கப்பூர் வந்துர்றீங்களா தாத்தா ?" என்றதற்கு <br />
"இப்போலாம் ஒத்தையிலே பயமாயிருக்குடா....யாராவது கூடவேயிருக்கணும்னு தோணுதுடா...யார்கூடவாது பேசிக் கொண்டேயிருக்கணும் போலிருக்குடா..நீ கூப்பிடறப்போ உடனே வரணும்னுதான் இருக்கு....ஹூம்...அதெல்லாம் முடியாதுடா."என்றார்.<br />
<br />
அதுக்கப்புறம் ஒரே ஸ்டீபன் தாத்தா நினைப்புதான்.என்ன செய்யலாம்னு யோசிச்சுட்டு இருந்ததுலே திடீர்னு ஒரு பல்ப்!<br />
<br />
ம்ம்ம் இப்போலாம் ஸ்டீபன் தாத்தா ஒரே பிஸி.ஒரே சந்தோஷம்.... எப்பவும் யாருடனாவது அரட்டையில்தான்.<br />
<br />
என்ன செஞ்சேனா??? ஜஸ்ட் ஒரு லாப்டாப் வாங்கிக் கொடுத்து ஒரு ஃபேஸ் புக் அக்கவுண்ட் ஓபன் செஞ்சு கொடுத்தேன் அவ்வ்ளோதான்.....தாத்தா லைஃப் ஸ்டைலே மாறிடுச்சுன்னா பார்த்துக்கோங்க!!!</div>
அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-86171946298155002932011-08-27T20:19:00.001+05:302011-08-27T20:19:55.787+05:30அந்த ஒருமணி நேர சொர்க்கம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மனம் மயக்கும் சாயங்காலமும், ரம்யமான நட்சத்திர இரவுக்காகவும் மனதைச் சிலிர்க்கவைக்கும் அதிகாலைக்காகவும் ஏங்கிக் கிடக்கும் .வேலை முடிந்த அலுப்பில் சாயங்காலம் படுக்கையிலும் அல்லது கணினி முன்னாலுமாய்க் கழிந்து விடும்.அதிகாலை அநேகமாக அடுப்படிக்குள் முழுகி விடும்.ம்ம்ம் நட்சத்திர இரவு சாப்பாட்டுக் கடையின் சலசலப்பிலுமாய் அடங்கிக் கொண்டிருக்கிறது.சே! என்னடா இது வாழ்க்கை என அலுத்துக் கொண்டே நாளும் பொழுதும் ஓடிக் கொண்டிருக்கிறது.<br />
குட்டி ஒரு சின்ன புறாவின் இறகைப் புத்தக இடுக்கில் வைத்துத் திறந்து காட்டிப் பொத்திக் கொண்டாள். அடுத்த பக்கத்தில் மயிலிறகிற்கு அரிசி வைத்துக் கொண்டிருந்தாள். ரொம்ப நாளாய் ஒரு கேள்வியுண்டு....ஏன் மயிலிறகுக்கு மட்டும் அரிசி வைக்கிறாள் என்று? சின்னவள் கொஞ்சம் மினுமினுப்பாய் ஏதோ ஒன்றைக் காக்காப் பொன் என்றாள். இவையெல்லாம் என் வாழ்விலும் இடம் பெற்றிருந்தன. எப்போதிருந்து இவை என் புத்தக அடுக்கிலிருந்து விடை பெற்றன என்பது எனக்கே புரியாத புதிராக இருந்தது. தேடித் தேடிச் சேகரித்தத் தீப்பெட்டிப் படங்களைத் திடீரென ஒருநாள் எளிதாகத் தூக்கிக் கொடுத்துவிட முடிகிறது.<br />
மழையில் நனைய அடம்பிடித்த வயதில் காய்ச்சல் வருமென்று தடுத்த அம்மாவும் அம்மம்மாவும் வில்லிகளாகத் தெரிந்தார்கள். நனையக் கிடைத்த சுதந்திரத்தின் போது ஈர உடையுடனா காலேஜ் போவது என்று நனையாமல் நிற்கப் பழகிய பக்குவம் என்னிடமே அதிசயம்தான்! அப்புறமாய் எந்த விசேஷ நினைவுகளுக்காய் அன்றி மழையில் நனைவது சுகம் என்பதே மறந்து போனது வேலையின் ஓட்டத்தில்.<br />
<br />
இப்போவெல்லாம் டப்...டப்பென்று பெரிதாக மழைத் துளி விழுந்தால், கம கமவென மண் வாசனையை ....ரசிக்கக் கூட முடியாமல் துணிமணிகள் நனைந்து விடுமேவென ஓடி ஓடி எடுத்து வரத்தான் ஓட வேண்டியதிருக்கிறது.அப்படியிருக்கும் போதுதான் இந்த ஒருமணி நேர சொர்க்கம் திட்டம் அமுலுக்கு வந்தது. இரவு ஏழிலிருந்து எட்டு மணி வரைக்கும் கரன்ட் கட்!<br />
<br />
அந்த ஒரு மணிநேர சொர்க்கம் கலகலன்னு போக ஆரம்பிச்சிருக்கு.உங்க ஸ்கூலில்
என்ன் நடந்தது...உங்க காலேஜில் என்ன்ன நடந்தது? அப்படி
ஆரம்பிச்சு.....மொட்டை மாடி அரட்டை.....நிலாச் சோறு, பாட்டுக்குப் பாட்டு, அரசியல்
அரங்கம், அன்னா ஹசாரே ஜெ.அம்மா, கனிமொழி, ராஜா எல்லோரும் பேச்சில் கலந்து
கொள்கிறார்கள்.சில நேரம் ஒரு மணி நேரம் ரெண்டுமணி நேரமாக நீளும் போதும் அலுப்பில்லாமல் கலகலப்பில் வீடு அதிர்ந்து கொண்டிருந்தது. இப்போலாம் அந்த ஒரு மணி நேர சொர்க்கத்தில் என்ன பண்ணலாம்னு ப்ளான் செய்யற அளவுக்கு எந்தவித வேலை நிர்ப்பந்தமும் டி.வி நிகழ்ச்சிகளின் ஆக்கிரமிப்புமின்றி இயல்பான குடும்பத்தினுள்தான் நேரம் எவ்வளவு அருமையாய்க் கரைகிறது....முதல் முறையாய் இரவு நேர நட்சத்திரங்கள் என்னைக் கவராமல் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது.<br /> <br />
தீப்பெட்டிக்குள் இப்போதும் கூட்டுப் புழுவைப் பத்திரப்படுத்தினால் அது பட்டுப்பூச்சியாகத்தான் வெளிவருகிற்து. அந்த வித்தையைத்தான் நாம் மறந்து ரொம்ப நாட்கள் ஆகின்றது.<span style="font-size: small;"><span lang="TA" style="background: none repeat scroll 0% 0% white; font-family: Latha;">இனி வரும் நாட்களில்</span> கரன்ட் கட் இல்லைன்னாலும் கூட மெயின் ஸ்விட்சை ஒருமணி நேரம் ஆஃப் செய்து விடலாம்னு ஒரு ப்ளான் இருக்கு! </span> </div>
அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-18711318935082557442011-08-18T20:55:00.002+05:302011-08-19T11:33:18.632+05:30கூடிப்பேசும் கல்முற்றம் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
யாருமற்ற<br />
வீட்டுக் கல்முற்றத்தில் <br />
சுவரிடுக்கில் முளை விட்ட<br />
செடி நுனியும்<br />
குருவி கொத்தக் கொட்டிய<br />
அரிசியும்<br />
காய் நகர்த்திக் கலைந்த<br />
தாயக்கட்டமும் <br />
மௌனமாகப் பிரியங்களின்<br />
அதிர்வை நினைவுறுத்துகின்றன<br />
<br />
உலகம் வளர, வளர<br />
வீடு விரிய,விரிய<br />
<span class="indexAbstract" id="ctl00_ContentPlaceHolder1_lblcontents"><span style="font-size: x-small;"></span></span><span class="st">கூடிப்பேசும் <i>கல்முற்றம் </i></span><br />
<span class="st"><i>வெயில் மழையுடன் </i></span><br />
<span class="st"><i>தனிமைப் பட்டுக்கிடந்தது </i></span> ....<br />
<br />
கொஞ்சம் எறும்புகளின் வரிசையும்<br />
எலிகளின் கொண்டாட்டமும்<br />
முடிவற்ற மௌனமும்<br />
நினைவுபடுத்திப் பார்ப்பதற்குரிய<br />
பிரியங்கள் என்றேனும் மீளும்<br />
என்ற நம்பிக்கையுடன்.....<br />
கல்முற்றத்தில் <br />
அம்மம்மாக்களும் தாத்தாக்களும்....<br />
<span class="indexAbstract" id="ctl00_ContentPlaceHolder1_lblcontents"></span></div>
அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-33434119793338703192011-07-28T21:01:00.001+05:302011-07-28T21:03:50.898+05:30எழுத ஆசைப்படுறவங்கல்லாம் எழுதுங்கப்பா!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
1.நீங்கள் விரும்பும் 3 விஷயங்கள்.<br />
<b>நிறைய இருக்குப்பா!<br />இரவு நேர மொட்டைமாடியில் பாட்டு,<br />சாரலடிக்கும் மழை,<br />நீண்ட பயணம் !</b><br />
<b> </b><br />
2. விரும்பாத 3 விஷயங்கள்:<br />
<b>முடியவே முடியாத சீரியல்கள், காலை நேரத்து அலார்ம், மீட்டிங் நடுவில் வித விதமான பாடலுடன் ஒலிக்கும் மொபைல் ஃபோன்...</b><br />
<br />
3. பயப்படும் 3 விஷயங்கள்:<br />
<b>பல்லி,உயரம்,ஹாஸ்பிடல்</b><br />
<br />
4. உங்களுக்குப் புரியாத 3 விஷயங்கள்:<br />
<b>அரசியல், பின் நவீனத்துவம், சில நேரம் சில விஷயங்கள் நடக்கும் போது இது அப்படியே ஏற்கெனவே நடந்தது போல் தோன்றுவது!!</b><br />
<br />
5.உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்:<br />
<b>தொலைபேசி,பேனா,கணினி!</b><br />
<br />
6. உங்களைச் சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்:<br />
<b>கிச்சுகிச்சு!அரசியல்வாதிகளின் பேச்சு,பசங்க அடிக்கிற லூட்டி!</b><br />
<br />
7. தாங்கள் இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்:<br />
<b>செய்தப்புறம் சொல்றேனே! அதனாலே இந்தக் கேள்விக்குப் பா</b>ஸ்!!<br />
<br />
8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்:<br />
<b>ஆசிரியர்களை ஊக்குவிக்க ஏதாவது எழுதணும்.<br />இரண்டு அனாதைக் குழந்தைகளையாவது தத்து எடுத்துப் படிக்க வைக்க வேண்டும்.<br />ஒரு கப்பல் பயணம்.</b><br />
<br />
9. உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்:<br />
<b>அட! அதென்ன மூணு! நிறைய இருக்கு!</b><br />
<br />
10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்:<br />
<b>பொறுமை,தியானம்,யோகா!!</b><br />
<br />
11. பிடித்த 3 உணவு விஷயங்கள்:<br />
<b>நான் சமைக்காத எதுவும்!<br />யாராவது சமைச்ச எல்லாமும்!<br />அம்மா சமைக்கும் எல்லாமும்!</b><br />
<br />
12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்:<br />
<b>No,முடியாது,நாளைக்கு!</b><br />
<br />
13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்:<br />
<b>அய்யோ இது அப்பப்போ மாறிட்டேயிருக்குமே! மூட் ஸ்விங் </b>மாதிரி!!<br />
<br />
14. பிடித்த 3 படங்கள்:<br />
<b>மூணே மூணு படப் பேரெல்லாம் எப்பிடிச் சொல்றது? நிறைய பிடிக்குமே!</b><br />
<br />
15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்:<br />
<b>ஹிஹிஹி! காற்று,நீர்,உணவு ஹிஹிஹி!</b><br />
<br />
16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேரு:<br />
யாரைக் கூப்பிட்டாலும் எழுதப் போறதில்லை! எதுக்கு வம்பு? எழுத ஆசைப்படுறவங்கல்லாம் எழுதுங்கப்பா!!</div>
அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-40109831347572036572011-07-06T06:05:00.003+05:302011-07-06T09:08:23.363+05:30இந்தத் தலைமுறையினை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை :(<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"> அவள் பெயர் சாரிகா. பத்தாவது வகுப்பு. மைதா மாவு வெள்ளையில் எல்லாப் பெண்களும் இருக்கையில் கொஞ்சம் கறுப்பாக சுமாரான அழகாய் இருப்பாள். அவள் வகுப்பில் நான் எந்தப் பாடமும் நடத்தவில்லை.அப்பப்போ வாழ்வியல் கல்விக்காக (life skill) ஏதாவது ஒரு ஆசிரியை வராத போது செல்லும்போது வகுப்பில் அவளைப் பார்த்ததுண்டு.<br />
ரொம்ப துடிப்பாக ஆர்வமாகப் பதில் சொல்வதிலும் கலந்து பேசுவதிலும் சிறப்பானவள்.செல்ஃப் இன்ட்ரோ கொடுக்கச் சொல்லும் போது ரொம்பத் தெளிவாக அவளது பலவீனம் ஸ்போக்கன் இங்கிலிஷ் எனவும் பலம் தவறு என்று தெரிவதை யாரானாலும் சுட்டிக்காட்டுவது எனவும் சொன்ன போது வித்தியசமாகவும் தெளிவான சிந்தனையுள்ளவளாவும் தெரிந்தாள்.வகுப்பு நேரம் முழுவதும் கலகலவென எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பாள்<br />
கொஞ்ச நாட்களாக ஒரு மௌனத்துக்குள் போய் விட்டாள். இந்த வயதில் அடிக்கடி இப்படி மூட் ஸ்விங்க் வருவது சகஜம் என நினைத்து வகுப்பினூடே கவனிக்காதது போல் விட்டு விட்டேன். இடையிடையில் வகுப்பின் முடிவில் உங்களுக்கு எல்லோர் முன்னிலையில் தெரிவிக்க முடியாத பிரச்சினைகள் இருப்பின் எழுதிக் கொடுக்கலாம் என்று சொல்வதுண்டு. அநேகமாக படிக்க முடியவில்லை, கான்சென்ட்ரேஷன் குறைகிறது போன்ற பிரச்சினைகள்தான் வருவதுண்டு.<br />
அன்று அவள் கொடுத்த தாளில் இருந்த பிரச்சினை என்னைத் திகைக்க வைத்தது. " என்னை நீரஜ் கொன்று விடுவானோ என்று பயமாக இருக்கிறது. என்னைக் காப்பாற்றுங்கள்" என்றிருந்தது. ஒரு கணம் உடல் அதிர்ச்சியில் அதிர்ந்தது. அவளை ஒருமுறை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லத் தோன்றாமல் அங்கிருந்து சென்றுவிட்டேன். அப்படியென்ன பிரச்சினையாக இருக்கும் என்று ஒரே கவலை. என் அறைக்குள் போனவுடன் பியுனை அனுப்பி சாரிகாவை அழைத்து வரச் சொன்னேன்.<br />
விஷயம் இதுதான். ஒருநாள் நீரஜ் வகுப்பிற்கு மொபைல் கொண்டு வ்ந்திருக்கிறான்.அதைத் தெரிந்து கொண்ட சாரிகா எப்பவும் போல "நீ செய்தது தப்பு உடனே இதை வகுப்பாசிரியரிடம் கொடுத்து விடு" என்று எடுத்துக் கூற நீரஜ் மறுக்க இந்தப் பெண் வகுப்பாசிரியரிடம் நீரஜ் மொபைல் கொண்டு வந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறாள். அங்கே ஆரம்பித்திருக்கிறது பிரச்சினை.<br />
<br />
ஏற்கெனவே படிப்பில் நீரஜ் முன்னணியில் இருந்திருக்கிறான். சாரிகா இந்த வருடம் சேர்ந்த மாணவி. வந்த சில நாட்களிலேயே படிப்பில் எல்லா ஆசிரியர்களின் வாயிலும் சாரிகா சாரிகாதான். ஏற்கெனவே இந்தக் காரணத்தினால் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்த நீரஜ், மொபைல் கொண்டு வந்ததைக் காட்டிக் கொடுத்தவுடன் மனதில் வன்மம் அதிகமாக தினமும் ஒரு கடிதத்தைக் கம்ப்யுட்டரில் டைப்படித்து சாரிகாவின் பையினுள் வைத்திருக்கிறான்.<br />
<br />
அதில் வரும் வாசகங்கள் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மனதை ரணமாக்கும் வார்த்தைகள். சாரிகாவின் அப்பாம்மாவைத் தவறாகச் சித்தரிக்கும் வாசகங்கள். நாளைக்கு உன் பையிலிருந்து தவறான புத்தகங்கள் ஆசிரியரால் கண்டு பிடிக்கப் படும் என்றும் நீ அனுப்பியதாகத் தவறான் வாசகங்கள் கொண்ட எஸ்.எம்.எஸ் ஆசிரியரின் பார்வைக்குப் போகுமென்றும் கடிதம் வைத்தவன் அதிர்ச்சி தருவதாக "இன்று நீ உயிரோடிருக்கும் கடைசி நாள் "என்றும் ஒரு கடிதம் வைத்திருக்கிறான் .<br />
<br />
அவ்வளவையும் யாரிடம் சொல்வதெனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்திருக்கிறது இந்த அப்பாவிப் பெண் சாரிகா. அம்மா அப்பாவிடம் சொன்னால் என்ன ஆகுமோ என்று பயம். வகுப்பாசிரியரிடம் கூடக் கூற முடியாத பயம். தினம் வகுப்பிற்குப் போனாலும் தூர நின்று பாடம் மட்டுமே நடத்தும் வகுப்பாசிரியரின் தவறும் கூட இந்தப் பிரச்சினைக்குக் காரணமாயிருக்கலாம் .<br />
இவ்வ்ளோ சின்ன வயதில் மனதிற்குள் இவ்வளவு வெறுப்பு எங்கிருந்து வந்தது? இதற்குக் காரணங்கள் என்று எவையெல்லாவற்றையும் யார் முன்னால் எடுத்து வைப்பது ? இப்படியெல்லாம் ஒரு பெண்ணை மனக் கஷ்டத்துக்குள்ளாக்கலாம் என்று எங்கிருந்து கற்றுக் கொண்டான் நீரஜ்? இப்படிப் பேப்பரில் எழுதிப் பிரச்சினைகளை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத எத்தனையோ சாரிகாக்கள் இருக்கலாம். அவர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு?<br />
நட்பென்றால் ஃபேஸ் புக் நட்புக்குக் கூட உயிரை விடத் தயாராயிருக்கும் அன்பை வைத்திருக்கும் இவர்கள் வெறுப்பென்றால் எந்த நிலைக்கும் போய் உயிரை எடுக்கவும் தயாராயிருக்கும் இந்தத் தலைமுறையினை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.<br />
<br />
</div>அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com32tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-82476744029469578522011-06-29T06:01:00.020+05:302011-06-30T09:26:00.644+05:30ஜஸ்ட் ஒரே வாரம் :(<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span style="font-size: x-small;"> <b><span style="font-size: small;"> எப்படி ஒரு வாரத்துக்குள்ளே எல்லோரையும் பார்த்து ஒரு வருடக் கதையைப் பேசி முடிச்சேன்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு!!! ஆமா இந்த தடவை தமிழ்நாடு விஸிட் ஜஸ்ட் ஒரே வாரம்தான். </span></b></span><b><span style="font-size: small;">எப்பவும் போல இந்த தடவையும் சென்னை போன போது பாண்டிச்சேரி மதர் ஆஷ்ரம் போயிருந்தோம். இந்த முறையும் புக்கிங்க் செய்யும் போது செய்த குழறுபடியால் ஆரோவில் உள்ள மாத்ரி மந்திர் என்ற ஒரு வட்ட வடிவான சர்வ சமயப் பிரார்த்தனைக் கூடத்திற்குள் செல்ல முடியவில்லை. இங்கு செல்வதென்றால், ஓரிரு நாட்களுக்கு முன்பே முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். </span></b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-ZzeszL8kc64/Tgi1mVkwPkI/AAAAAAAACQY/5EdH5uYeVcQ/s1600/DSC01005.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="http://3.bp.blogspot.com/-ZzeszL8kc64/Tgi1mVkwPkI/AAAAAAAACQY/5EdH5uYeVcQ/s400/DSC01005.JPG" width="300" /></a></div> <b>மாத்ரி மந்திர்</b><br />
<b><span style="font-size: small;">124 நாடுகளில் இருந்தும் வந்திருந்த அதன் பிரதிநிதிகள், தங்கள் தாய் நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு கைபிடி மண்ணை, மனித இன ஒற்றுமையின் அடையாளத்தை வெளிபடுத்தும் வண்ணம் ஒரே இடத்தில் குவித்து இந்த மந்திர் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள்.</span></b><br />
<b>வரவேற்பது போல நீர்ச் சுழல்! </b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-mwobqxxvfbo/Tgi1w0_7bFI/AAAAAAAACQg/E2PTqpwxrlA/s1600/DSC00999.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-mwobqxxvfbo/Tgi1w0_7bFI/AAAAAAAACQg/E2PTqpwxrlA/s200/DSC00999.JPG" width="150" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-S_v26ebpvbA/Tgi1s2dsusI/AAAAAAAACQc/1E99Onhzu3M/s1600/DSC00997.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-S_v26ebpvbA/Tgi1s2dsusI/AAAAAAAACQc/1E99Onhzu3M/s200/DSC00997.JPG" width="150" /></a><a href="http://3.bp.blogspot.com/-CrHylLMKCzk/Tgi14oz53BI/AAAAAAAACQk/6N4WXTegrE0/s1600/DSC01000.JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-CrHylLMKCzk/Tgi14oz53BI/AAAAAAAACQk/6N4WXTegrE0/s200/DSC01000.JPG" width="150" /></a></div> <br />
<b>வழி நெடுக மூங்கில் காடு!<span style="font-size: small;"> அனைவரையும் ஈர்ப்பது சுற்றியுள்ள இயற்கை எழில். மூங்கில் மரங்கள் ஒரு பக்கம் விதம் விதமான மரங்கள் ஒரு பக்கமுமாக பின்னிப் பிணைந்து ஒரே மரமாக வளர்ந்து </span></b><br />
<b><span style="font-size: small;"> கிடக்கின்றது </span></b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWbHFqk-qpMrrJsKScF6AXvBJTvD0oE27gHNqtSlUNnCu-Kp2JwRorqOHKisQLY8HQaI9KiUnZqGKPw2eBJLH85bG1zq55Tjq6Rdll51LUOC24s4kWB83F2HxJjAr3dddlVTYAfBySu4E/s1600/DSC01008.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWbHFqk-qpMrrJsKScF6AXvBJTvD0oE27gHNqtSlUNnCu-Kp2JwRorqOHKisQLY8HQaI9KiUnZqGKPw2eBJLH85bG1zq55Tjq6Rdll51LUOC24s4kWB83F2HxJjAr3dddlVTYAfBySu4E/s320/DSC01008.JPG" width="320" /></a></div><b>அடித்துக் கிளப்பும் வெயிலிலும் குளிர் நிழல் தரும் மரக் கூட்டம்!</b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD8_OSfnlA-K4R7O9o9Nl1x3iXaLM6OdNVyKpsasL8vZljtMVcAgMOKV4WVH4FETYI36W_VZB6OK_NNUZYdQhWhIoIAWuaquXJLaNwM-TDSbsedHwSV9gTRh4d7LIz1RUhv2ExyyJjjT8/s1600/DSC00995.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD8_OSfnlA-K4R7O9o9Nl1x3iXaLM6OdNVyKpsasL8vZljtMVcAgMOKV4WVH4FETYI36W_VZB6OK_NNUZYdQhWhIoIAWuaquXJLaNwM-TDSbsedHwSV9gTRh4d7LIz1RUhv2ExyyJjjT8/s200/DSC00995.JPG" width="150" /></a><a href="http://2.bp.blogspot.com/-DMMd3O2WFpc/Tgi2Fy3EMdI/AAAAAAAACQ0/drwvRtqv0i4/s1600/DSC00994.JPG" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-DMMd3O2WFpc/Tgi2Fy3EMdI/AAAAAAAACQ0/drwvRtqv0i4/s200/DSC00994.JPG" width="150" /></a></div> <b> மாத்ரி மந்திரின் சிறிய மாதிரியும் அதன் உள்கட்டமைப்புகளும் முகப்பில் உள்ள இன்ஃபர்மேஷன் சென்டரில் வைக்கப் பட்டிருக்கிறது.</b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-MDFIkmBQp2g/Tgi2Ri7PFcI/AAAAAAAACQ8/84a-JNST6tQ/s1600/DSC01009.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-MDFIkmBQp2g/Tgi2Ri7PFcI/AAAAAAAACQ8/84a-JNST6tQ/s200/DSC01009.JPG" width="150" /></a></div><b><span style="font-size: small;"> </span></b><span style="font-size: small;"><b><span style="font-size: small;"> உள்ளே நுழைந்த நேரத்திலிருந்து இசைத்துக் கொண்டிருக்கும் உயர்ந்த மரத்தில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் விண்ட் சைம் ஒரு இனிமையான மன அமைதி கிடைக்கும் ஒரு வித்தியாசமான உணர்வு கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. </span></b></span></div>அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-46148665911944149692011-06-02T06:07:00.001+05:302011-06-02T06:07:00.492+05:30புகுந்து கொள்கிறது பொய்யும்.....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">எந்தப் பேனாவால் எழுதினாலும்<br />
எந்த மொழியில் எழுதினாலும் அதனுள்<br />
கொஞ்சம் புகுந்து கொள்கிறது<br />
பொய்யும்.....<br />
<br />
எந்த தேசம் சுற்றினாலும்<br />
எந்த உயரம் பறந்தாலும்<br />
எந்தக் கடலின் ஆழம் அறிந்தாலும்<br />
ஒடுங்கிக் கொள்ளத் தேவைப்படுகிறது<br />
வீடும்<br />
<br />
எத்தனை நிறைவேறிய<br />
கனவுகள் முடிந்தாலும் ஒவ்வொரு<br />
கனவின் முடிவிலும்<br />
உயிர்ப்பித்துக் கொள்கிறது<br />
ஒரு புதுக் கனவும்!</div>அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-67568670885576151392011-05-28T06:09:00.002+05:302011-05-28T06:09:00.249+05:30அது ஒரு காலம்....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">ஊருக்கு வரும்போதெல்லாம்<br />
அம்மம்மாவின் சுருக்குப் பை<br />
கொண்டு வந்த கனவுகள்<br />
கழுத்துவரை உண்டு...<br />
அது ஒரு காலம்....<br />
<br />
காது குடையும் கோழிச் சிறகும<br />
கொஞ்சம் சில்லறையும்<br />
கசங்கிய ஒத்த ரூபா நோட்டுக்களும்<br />
எப்போதும் கொண்டு வரும்<br />
பெரும் பிரியத்தையும் <br />
சுமந்திருக்கும் அந்தச்<br />
சுருக்குப் பையைத் திறந்து<br />
வாசம் பிடிச்சது ஒரு காலம்...<br />
<br />
ஒல்லிக்குச்சி பாட்டிகள் எல்லோரின் <br />
முகங்களும் ஒரே மாதிரியானதாக<br />
சுருக்கங்களுடனும், இடுப்பில்<br />
சுருக்குப் பைகளுடன்<br />
பை நிறைய பிரியங்களுடனும்<br />
இருக்கிறது எல்லா ஊரின்<br />
அம்மம்மாக்களின் அடையாளங்களாய்...<br />
என மயங்கியது ஒரு காலம்.. <br />
<br />
பட்டுத் துணியின் சுருக்குப் பையினுள்<br />
சில்லறைகளுக்காக கைவிட்ட <br />
சுருங்கிய கை விரல்களை இறுக்கி<br />
"இதை எல்லோர் முன்னாலேயும்<br />
வெளியே ஏன் எடுக்கிறே?"<br />
என்று எரிச்சல்பட்டு <br />
முகம் வாடிய அம்மம்மாவைக்<br />
"கிழவி உயிரை எடுக்குது" ன்னு<br />
சொல்ல வைத்ததுவும்<br />
ஒரு காலம்.......<br />
<br />
<br />
</div>அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-19650301864038648762011-05-02T06:00:00.009+05:302011-05-02T06:00:00.545+05:30நினைவு வந்து விடாமலிருக்க...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span style="font-size: small;">மீன் தொட்டியில் கொஞ்சம் </span><br />
<span style="font-size: small;">ப்ளாஸ்டிக் இலைகளையும்</span><br />
<span style="font-size: small;">செயற்கை அருவியும்</span><br />
<span style="font-size: small;">கூழாங்கற்களையும்</span><br />
<span style="font-size: small;">போட்டு வைத்தாள் </span><br />
<span style="font-size: small;">மீனுக்கு ஆற்று நினைவு</span><br />
<span style="font-size: small;">வந்து விடாமலிருக்க...</span><br />
<br />
<span style="font-size: small;">குருவிக்கூண்டில்</span><br />
<span style="font-size: small;"><strong><span style="font-weight: normal;">குட்டிக் குட்டியாய்</span></strong></span><br />
<span style="font-size: small;"><strong><span style="font-weight: normal;">ப்ளாஸ்டிக் மரம் நட்டு</span></strong></span><br />
<span style="font-size: small;"><strong><span style="font-weight: normal;">கிளை, பூ, பழம் </span></strong></span><br />
<span style="font-size: small;"><strong><span style="font-weight: normal;">தொங்க விட்டாள்</span></strong></span><br />
<span style="font-size: small;"><strong><span style="font-weight: normal;">குருவிக்குக் கூடு நினைவு</span></strong></span><br />
<span style="font-size: small;">வந்து விடாமலிருக்க...</span><br />
<br />
<span style="font-size: small;"><strong><span style="font-weight: normal;">அம்மா செருப்பு </span></strong></span><br />
<span style="font-size: small;"><strong><span style="font-weight: normal;">மாட்டிக் கொண்டே </span></strong></span><br />
<span style="font-size: small;"><strong><span style="font-weight: normal;">"ஆயாம்மாகிட்டே சேட்டை</span></strong></span><br />
<span style="font-size: small;"><strong><span style="font-weight: normal;">பண்ணாம, அழாம இருக்கணும்..</span></strong></span><br />
<span style="font-size: small;"><strong><span style="font-weight: normal;">சாக்லேட் வச்சிருக்கேன்" என்றாள் </span></strong></span><br />
<span style="font-size: small;"><strong><span style="font-weight: normal;">பாப்பாவுக்கு அம்மா நினைவு</span></strong></span><br />
<span style="font-size: small;">வந்து விடாமலிருக்க...</span><span style="color: #cc0000;"><strong></strong></span></div>அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com23