நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, November 28, 2007

முளைத்து எழும் சிலுவைகள்

Wednesday, November 28, 2007
முளைத்து எழும் சிலுவைகள்

முளைத்து எழும் சிலுவைகள்

கடந்து போகும் சுடுகாட்டில்
புதைந்திருந்த சிலுவைகள் ........
அத்தனையும் எழுந்து நின்றன...
அத்தனையும் முளைத்து எழுந்தன....
ஒவ்வொரு உயிரின் புதையலுக்கு முன்
ஆயிரம் மனங்களின் துடிப்பு
அந்த ஒரு உயிரின் ஆயிரம்
ஆசைகளின் புதையல்......
மண்ணுக்குள் இருந்தாலும்....புதைந்தாலும்
இன்னுமொரு வாழ்வுக்கு கையேந்தும்
சிலுவைகளின் கைகள்....
ஆசைகள் அத்தனைக்கும் உயிர் கொடுக்கும்
இன்னுமொரு வாழ்வைத் தவிர வேறு என்ன
கையேந்திக் கேட்கப் போகின்றன புதிதாய்??

Posted by aruna at 9:20 AM 0 comments

No comments:

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா