நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, November 27, 2007

முகமூடிக்குப் பின்னால் நான்...................

முகமூடிக்குப் பின்னால் நான்...................

கண்டதும் சிரித்து
முதுகுக்குப் பின்னால் முறைத்து
பிடித்ததற்கும் சிரித்து
பிடிக்காதற்கும் சிரித்து
அன்புக்கும் சிரித்து
ஆணவத்துக்கும் சிரித்து
தப்புக்கும் சிரித்து
தண்டனைக்கும் சிரித்து
புகழ்ந்தாலும் சிரித்து
இகழ்ந்தாலும் சிரித்து
முகத்தின் மீது ஒட்டிக் கொண்ட
முகமூடியைக் கழற்ற முடியாமல்
கலங்கும் போதும் பொய்யாய்
ஒட்டிக் கொண்ட புன்னகை ஒன்றே
மீதமாய் எனக்கு நானே
மாட்டிக் கொண்ட முகமூடியை
தூக்கியெறிய முயன்று.....
முடியாமல் குமுறியழ......
துளித் துளியாய் வழிந்த கண்ணீரில்
கரைந்தோடியது அந்த முகமூடி....

Posted by aruna at 9:26 AM 1 comments

1 comment:

http://thirumagal1965.blogspot.com/ said...

கண்ணீரில்
கரைந்தோடினாலும்..........
பின் உடன்
முகம் தேடி
வொட்டி கொள்ளு(ல்லு)ம்
முகமுடி-இல்லை
முக(ம்)மூடி ?? !!!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா