நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, November 25, 2007

வலை என்னும் அலையில் அடித்துப் போகப் போகிறேனா?

Sunday, November 25, 2007
வலை என்னும் அலையில் அடித்துப் போகப் போகிறேனா?

வலை என்னும் அலையில்
ஒரு நொடியில் ஒராயிரம் மெயில் செக் செய்து
திருப்பித் திருப்பிப் பக்கம் பக்கமாக மேய்ந்து
கண் அசைவின்றி கணினியைப் பார்த்து
ஐந்தே ஐந்து நிமிடம் தான் என்ற மனக் கணக்கு
ஐந்து மணி நேரமாக நீளும் நிஜக் கணக்கு
என்று தணியும் இந்த வலை தாகம்?
என்றோ தணியும் இந்த வலை அலை?
தணியத்தான் போகிறதோ இல்லை இந்த
அலை வலை என்னை அடித்துத் தான்
கொண்டு செல்லப் போகிறதோ?
இது என்ன அறியத் துடிக்கும் வரமோ?
இல்லை எனக்கு நெடேரியாவா?

Posted by aruna at 9:14 AM 1 comments

2 comments:

http://thirumagal1965.blogspot.com/ said...

வலை தாகமா ?
வலை மோகமா?
ஆனால்
தன்னுள்
மேலும் மேலும்
அமிழ்த்தும்
சுழல்-வலை !
வெளியில் இருந்தாலும்
தன்னை நோக்கியே
எண்ணம் இழுக்கும்
அழகிய புது ஞான போதை !

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

நெடேரியாவா - புரியவில்லையே!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா