அரை சதம் அடிச்சாச்சுங்கோ!!!!!
இது Dreamzz- இடமிருந்து கற்றது...
மு.கு:1.இது எனது 50-வது பதிவுங்கோ...
மு.கு:2.அதனால் பிடிச்சுருந்தாலும்..பிடிக்காட்டாலும் குறைந்தது 50 பின்னூட்டமாவது வேணுங்கோ...
50-வது பதிவு சும்மா நச்சென்று இருக்க வேண்டும் என்று ரூம் போட்டு யோசிச்சதுதான் மிச்சம்....
ஒண்ணும் தேறலை...
சரி என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் இந்த ஐடியா வந்தது...
ரொம்ப நாளா எனக்குப் பிடித்த என் பதிவு பற்றி நானே ஒரு பதிவு போடணும்னு ஒரு ஆசை..
பின்னே நம்மளப் பத்தி யாரும் போடலைன்னா நாமளே போட்டுக்க வேண்டியதுதானே....
இந்த 50-வது பதிவைச் சாக்கு வைத்து இது ஒரு சுய தம்பட்டமுங்கோ.......
அது என்னன்னு தெரிலெங்க.
நான் என்னோட எழுத்துக்குப் பெரிய ரசிகைங்க....
எப்போ என் வலைப் பூவைத் திறந்தாலும் என் பழைய பதிவுகளில் ஒன்றிரண்டாவது மீண்டும் மீண்டும் படிப்பது வழக்கம்....
அதுலே எனக்குப் பிடித்தது "மூடிய புத்தக மயிலிறகாய்..."
அப்புறம் நான்தான் மழைப் பையித்தியம் ஆச்சே...அதனாலே மழை பற்றிய அத்தனையும் ரொம்பப் பிடிக்கும்.அதிலேயும் அந்த "மீண்டும் ஒரு மழை நாளில்...." ரொம்பப் பிடிக்கும்....
அப்ப்புறம் "என் வீட்டுக் கதை...."யின் கடைசிப் பகுதி என்னை ரொம்ப உணர்ச்சி வசப் படுத்துவது....
அப்புறம் நான் எழுதிய "ஒருநாள் ஆகிட்டொமில்லே..." சீரீஸ் எனக்குப் பிடிக்கும்.
நான் எழுதின பதிவுலேயே உபயோகமுள்ள இரு பதிவுகள் இவைதான்னு நினைக்கிறேன்..
1) "நிலாச் சாரலில் நான்...."
2) "நாங்க அழகிக்கு மாறிட்டோமில்லே!!!!"
இது அழகியை பத்திப் போட்ட உருப்படியா பதிவு...
ஆனால் எந்த விதமான வரவேற்பும இல்லை....
நாம எப்பவுமே இப்படித்தானே...!!!!
உபயோகமான விஷயங்களை உதறித்
தள்ளுவதுதானே நம் இயல்பு!!!
அப்புறம் அந்தப் "பறவைகளுக்கு ஒரு மின்னஞ்சல்..." கவிதை ரொம்ப உணர்ந்து எழுதுனது....
இதெல்லாம் விட "இன்றுமுதல் அன்புடன் அருணா..." ரொம்பப் பிடிக்கும் அதிகப் பின்னூட்டம் வந்ததனாலே..!!!
"எது இல்லை என்றாலும் அது வேண்டும் உனக்கும் எனக்கும்..." இந்தக் கவிதை நான் ஸ்கூல் படிக்கும் போது எழுதினது..எனக்கு ரொம்பப் பிடித்தது.
இந்த "மனமென்னும் மரம்..." படிச்சீங்களா?அது சும்மா என்ன எழுதுறதுன்னு யோசிச்சுட்டே எழுத ஆரம்பித்து முடித்தது....
இதெல்லாவற்றையும் விட நான் வலைப்பூ ஆரம்பித்த புதிதில் எழுதிய முதல் பதிவு..."நான் இறக்கப் போகிறேன்..." என் வலைப் பூவின் பெயருக்கு காரணம் சொல்லும் பதிவு அது.
நாம என்ன பெரிய சுஜாதாவோ, பாலகுமாரனோ இல்லையே?
சாதரண அருணாதானே?
ஏதோ எழுதுறதுனால என்னை நானே சந்தோஷப் படுத்துன திருப்தியும்...உங்களைக் கொஞ்சம் அறுத்த திருப்தியும்தான் மிச்சம்``````````````?
என்ன நான் சொல்றது???
பி.கு:1- மு.கு:2 -ஐ மீண்டும் படித்து அதன்படி செய்யவும்.
108 comments:
//குறைந்தது 50 பின்னூட்டமாவது வேணுங்கோ...//
என்ன ஆண்ட்டி இது? 50 மட்டும் கேக்கறீங்க. ஒரு 500 அடிச்சுடலாமா சொல்லுங்க?
டீம் ரெடியா இருக்கு.
பட் ஒன் கண்டிஷன்
//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//
இத ஒரு நாளைக்கு மட்டும் எடுத்தாத்தான்.... :P
50-க்கு வாழ்த்துக்கள்...
:))
ஹைலைட் பண்ணியவற்றை படிக்க முயற்சிக்கிறேன். அதிலேயே லிங்க் கொடுத்திருந்தால் இன்னும் வசதியாக இருந்திருக்குமே..
மற்றது.. பூங்கொத்தெல்லாம் HTML இல் எப்படி...?! :)
ஆகா...50வது பதிவா!!!!
வாழ்த்துக்கள் ;))
\\ நிலா said...
//குறைந்தது 50 பின்னூட்டமாவது வேணுங்கோ...//
என்ன ஆண்ட்டி இது? 50 மட்டும் கேக்கறீங்க. ஒரு 500 அடிச்சுடலாமா சொல்லுங்க?
டீம் ரெடியா இருக்கு.
பட் ஒன் கண்டிஷன்
//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//
இத ஒரு நாளைக்கு மட்டும் எடுத்தாத்தான்.... :P
\\
நிலா குட்டிக்கு ஒரு ரீப்பிட்டே ;))
\\அந்த மீண்டும் ஒரு மழை நாளில் ரொம்பப் பிடிக்கும்..\\
எனக்கும் ரொம்ப பிடிக்கும் ;)
\\அப்ப்புறம் "என் வீட்டுக் கதை"யின் கடைசிப் பகுதி என்னை ரொம்ப உணர்ச்சி வசப் படுத்துவது....\\
சூப்பர் கொசுவத்தி பதிவு ;)
\\ஒருநாள் ஆகிட்டொமில்லே சீரீஸ் எனக்குப் பிடிக்கும்.
\\
IPL கிரிகெட் மாதிரி ஆகிட்டொமில்ல சீரீஸ் பதிவுகளும் சூப்பராக இருக்கும் ;)
\\நாம என்ன பெரிய சுஜாதாவோ, பாலகுமாரனோவா?சாதரண அருணாதானே? ஏதோ எழுதுறதுனால என்னை நானே சந்தோஷப் படுத்துன திருப்தியும்...உங்களைக் கொஞ்சம் அறுத்த திருப்தியும்தான் மிச்சம்? என்ன நான் சொல்றது???
\\
சொல்றதுக்கு ஒனும் இல்ல....உண்மை..கலக்கிட்டிங்க ;_
நிறைய எழுதுங்கள் ;))
மீண்டும் வாழ்த்துக்கள் ;)
one
two
three
four
five
six
seven
eight
nine
ten
ELEVEN
TWELVE
THIRTEEN
FOURTEEN
FIFTEEN
SIXTEEN
EIGHTEEN
NINETEEN
TWENTY
TWENTY ONE
TWENTY TWO
TWENTY THREE
TWENTY FOUR
TWENTY FIVE
TWENTY SIX
TWENTY SEVEN
TWENTY EIGHT
TWENTY NINE
THIRTY
THIRTY ONE
THIRTY TWO
THIRTY THREE
THIRTY FOUR
THIRTY FIVE
THIRTY SIX
THIRTY SEVEN
THIRTY EIGHT
THIRTY NINE
FORTY
FORTY ONE
FORTY ONE
FORTY TWO
FORTY THREE
FORTY FOUR
FORTY FIVE
FORTY SIX
FORTY SEVEN
FORTY EIGHT
FORTY NINE
FORTY NINE
FIFTY
ஸ்... ஸ்ஸ்ஸ்... ஹப்பாடா!
இருடா கண்ணு.
தாத்தா மூச்சு வாங்கிக்கறேன்.
சின்ன குழந்தைங்க,
உப்பு மூட்டைத் தூக்கச் சொல்றதில்லையா?
தோப்புக் கரணம் போடச் சொல்றதில்லையா?
இதையெல்லாம் நாம செய்யறதில்லையா?
அது போலத்தான் இதுவும்.
எப்பிடிம்மா அருணா-க்கண்ணு.
50 பின்னூட்டம் தாண்டியாச்சா?
என் ப்ளாக்-ல போடற மொக்கைய இங்க வந்து போட்டுட்டுப் போறேன்.
50 பினூட்டம் வேணும்-னு என்கிட்ட
முன்னாலயே ஒரு வார்த்தை சொல்லியிருந்தீன்னா,
எப்பவோ செஞ்சுட்டுருப்பேனே.
ஹி ஹி!
அதுக்காக 100-வது பதிவுக்கு,
100 கமெண்ட் வேணும்னு கேக்கப் படாது!
ஆமா?
முக்கியமா உனக்கு பேர் வாங்கித் தர்ற எல்லா பதிவுக்கும்,
நான்தான் ஐடியா குடுக்கறேன்-னு
ஆருகிட்டயும் சொல்லப் படாது. ஆமா!
நான் கணக்குல கொஞ்சம் வீக்கும்மா?
50 வரைக்கும் சரியா எண்ணியிருக்கேனான்னு,
சரி பாத்துக்கோ.
இந்த 50 பதிவு 50,000-ஆவது பதிவா ஆக அண்டவனை வேண்டி வாழ்த்தி விடை பெறுகிறேன்.
ஸ்...... அப்பாஆஆஆஆ
கண்ணக் கட்டுதே. சாம் தாத்தா உங்க உழைப்புக்கு அருணா எப்படி நன்றி சொல்லப்போறாங்கனு பார்போம் .... :))
வாழ்த்துக்கள் அருணா !
வாழ்த்துகள் அருணா...முழு பதிவையும் இன்னும் வாசித்து முடிக்கவில்லை... அந்த வீடு பற்றிய பதிவு மனதில் பதிந்தது..
என்ன தாத்தா அன்புக்கு ஒரு அளவே இல்லையா?உடம்புக்கு ஏதாவது வந்துடப் போவுது..எப்பிடி இருந்தாலும் 50 கமென்டுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்!!!
அன்புடன் அருணா
நிலா said...
என்ன ஆண்ட்டி இது? 50 மட்டும் கேக்கறீங்க. ஒரு 500 அடிச்சுடலாமா சொல்லுங்க?
என்ன நிலாக் குட்டி.... இதெல்லாம் போய்க் கேட்டுக்கிட்டு? சும்மா அடிங்க..
அன்புடன் அருணா
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி...சின்னப் பையா!!!
அன்புடன் அருணா
ஆ.கோகுலன் said...
//:))
ஹைலைட் பண்ணியவற்றை படிக்க முயற்சிக்கிறேன். அதிலேயே லிங்க் கொடுத்திருந்தால் இன்னும் வசதியாக இருந்திருக்குமே..
மற்றது.. பூங்கொத்தெல்லாம் HTML இல் எப்படி...?! :)//
இந்தக் கனெக்ஷன் பண்ற சதி...லின்க் 1000 தடவை முயற்சித்தாகி விட்டது..நடக்கவில்லை..பூங்கொத்துன்னு சொன்னதே போதும்!!
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!!
அன்புடன் அருணா
கோபிநாத் said...// சொல்றதுக்கு ஒனும் இல்ல....உண்மை..கலக்கிட்டிங்க ;_
நிறைய எழுதுங்கள் ;))
மீண்டும் வாழ்த்துக்கள் ;)//
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி...கோபிநாத்!
அன்புடன் அருணா
சதங்கா (Sathanga) said...
//ஸ்...... அப்பாஆஆஆஆ
கண்ணக் கட்டுதே. சாம் தாத்தா உங்க உழைப்புக்கு அருணா எப்படி நன்றி சொல்லப்போறாங்கனு பார்போம் .... :))
வாழ்த்துக்கள் அருணா !//
ஆமா சதங்கா..... எப்பிடி நன்றி சொல்றதுன்னு திகைச்சுத்தான் போயிருக்கேன்!!!
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!!
அன்புடன் அருணா
//இனியவள் புனிதா said...
வாழ்த்துகள் அருணா...முழு பதிவையும் இன்னும் வாசித்து முடிக்கவில்லை... அந்த வீடு பற்றிய பதிவு மனதில் பதிந்தது..//
அவசரமில்லே புனிதா!
மெதுவாப் படிங்க !!!வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!!
அன்புடன் அருணா
50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் அருணா!!
சாம் தாத்தா கொடுத்த காசுக்கு நல்லாவே கும்மி அடிச்சு கமெண்ட் போட்டிருக்கார்;)))
superu! 50 adichuteenga! 500 adikka en valthukkal :)
//இது Dreamzz- இடமிருந்து கற்றது...
மு.கு:1.இது எனது 50-வது பதிவுங்கோ...
மு.கு:2.அதனால் பிடிச்சுருந்தாலும்..பிடிக்காட்டாலும் குறைந்தது 50 பின்னூட்டமாவது வேணுங்கோ...//
nalla palakam ellam takkunu kathukareenga! good good!
//Divya said...
சாம் தாத்தா கொடுத்த காசுக்கு நல்லாவே கும்மி அடிச்சு கமெண்ட் போட்டிருக்கார்;)))//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திவ்யா.
உங்களுக்கு அடிக்கிற கும்மிக்கெல்லாம் நீங்க கொடுக்கிற காசுதான் காரணமா?ரகசிய வித்தை சொல்லிக் கொடுத்ததுக்கு நன்றி.
அன்புடன் அருணா
Dreamzz said...
//இது Dreamzz- இடமிருந்து கற்றது...
மு.கு:1.இது எனது 50-வது பதிவுங்கோ...
மு.கு:2.அதனால் பிடிச்சுருந்தாலும்..பிடிக்காட்டாலும் குறைந்தது 50 பின்னூட்டமாவது வேணுங்கோ...//
nalla palakam ellam takkunu kathukareenga! good good!
வலை உலகத்திலெ நீங்க என் குருவாச்சே!!!படிக்காட்டா எப்பிடி?
வித்தைகள் சொல்லிக் கொடுத்ததுக்கு நன்றி.
அன்புடன் அருணா
அடடா... வாழ்த்துக்கள் அருணா....:))
அவ்வ்வ்வ்வ்.... சாம்தாத்தா ஒத்தைக்கு விளையாடியிருக்காரு:))))))
//சாம் தாத்தா said...
ஸ்... ஸ்ஸ்ஸ்... ஹப்பாடா!
இருடா கண்ணு.
தாத்தா மூச்சு வாங்கிக்கறேன்.//
அதானே பார்த்தேன்.இந்த வயசுல ஓவரா ஆட்டம் போட்டா:P
//சாம் தாத்தா said...
சின்ன குழந்தைங்க,
உப்பு மூட்டைத் தூக்கச் சொல்றதில்லையா?
தோப்புக் கரணம் போடச் சொல்றதில்லையா?
இதையெல்லாம் நாம செய்யறதில்லையா?
அது போலத்தான் இதுவும்//
அவ்வ்வ்வ்வ்.... ஃபீல் பண்ண வச்சுட்டிங்களே:P
ரசிக்க ரசிக்க வலைப்பதிவுகளில் கலக்கி எங்கள் தோழியாகி விட்ட அருணாவிற்க்கு இன்னும் பல நூறு பதிவுகள் கலக்க வாழ்த்துக்கள்.
(ஆமா வீட்டுல அவர்தான் பதிவுக்கு டிக்டேஷனா?:P)
//ரசிகன் said...
ரசிக்க ரசிக்க வலைப்பதிவுகளில் கலக்கி எங்கள் தோழியாகி விட்ட அருணாவிற்க்கு இன்னும் பல நூறு பதிவுகள் கலக்க வாழ்த்துக்கள்.
(ஆமா வீட்டுல அவர்தான் பதிவுக்கு டிக்டேஷனா?:P)//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
அட இதென்ன விளையாட்டா? உழைப்பெல்லாம் நாங்க..பேர் மட்டும் அவங்களுக்கா?
அன்புடன் அருணா
50kku vaazththukkal :)))
koduththa linkslaam paakuren :)))
வாழ்த்துக்கள்.... அருணா
நிறைய எழுதுங்கள்...
அன்புடன்
கருணாகார்த்திகேயன்
Hey Aruna,
This is Alpesh from Linq.in.I thought I would let you know that your blog has been ranked as the Best Languages Blog of the week on 22-06-2008
Check it out here Award
Linq tracks posts from Indian blogs and lists them in order of recent interest.We offer syndication opportunities and many tools for bloggers to use in there web sites such as the widget below:
Blogger Tools
By adding this widget you would be able to know the Weekly Statistics of your blog and the various details such as Rank,Votes and the Awards you get from Linq.
Alpesh
alpesh@linq.in
www.linq.in
அன்புடன் அருணா ..50 க்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்க..உங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி. எனக்கு பின்னூட்டம் இட்டு நீங்கள் அளித்த உற்சாகத்திற்கு நன்றி.
உங்கள் 50 வது பதிவுக்கு பின்னூட்டம் இடுவதை ரொம்ப சந்தோசமாக கருதுகிறேன்.
அருணா,
உங்கள் வலைப்பூவை இன்னும் முழுதும் நுகரவில்லை. பறவைகளுக்கு ஒரு மின்னஞ்சல் நல்ல கற்பனை. மேலும் எழுதுங்கள். ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
அனுஜன்யா
50 பதிவுகள், அதுவும் அருவி மாதிரி எழுதி இருக்கீங்க. இடுகைகளின் ஓட்டத்தைத் தான் சொல்றேன்.
ஓடையெனவே நடவாய், வாழி! (500, 5000 எல்லாம் தானா வந்துரும்)
தொண்ணுத்தி ஐந்தாயிடுச்சி, ரோம்ம்ம்ம்ப......... லேட்ட்ட்ட்டா வேற வந்துட்டொம்....சரி இருந்து பொருமையா சென்சுரிய கம்பிளிட் பண்ணிட்டு போரேன். இந்தங்க இது 96....யப்பபா........
ம்ம்ம்.....இது தொண்ணூத்தி எழேய்ய்........எம்பாஆ.......அப்பிடியே ஒரு பௌண்டரி அடிச்சி சென்சுரி எல்லாம் போட கூடாதா? என்ன நியாயம்பா இது. அட இது 20/20 யுகம்பா.டெஸ்ட் மேட்ச் இல்லபா... ...என்னா? ஒத்துக்க மாட்டிங்களா? சரி ....போய் தொலைங்க....சாம் தாத்தா நீனு பூன், மார்ஷ் ஸ்டைல்ல எப்புடிதான் அடிச்சியோ.......நமக்கு முச்சி வாங்குதுபா......ம்ம்...ம்...
எம்மா.......எவ்ளோ பா ஆச்சி.....என்னா இது 98ஆஆஅ.....ம்ம்ம்....ரெண்டு ரன்னா எடுத்துகறேனே.....என்னாதூஉ....அதுவும் கூடாதாஆஆ.........என்னா நியாயம்டா சாமி.....தெரியாம வந்து மாட்டிகிட்டேனாஆ...........அவ்வ்வ்வ்வ்வ்வ்...........
ஹலோ, கால்ல சுளுக்குபா....ரன்னரை கொஞ்சம் கூப்பிடுப்பா......என்னாது வரமாட்டானாமா....ஏஏஅன்ன்.....ரோம்ம்ம்ப்ப அநியாயம்டா சாமி.....ம்ம்ம்.....ஒடறேன்...ஓடறென்......தொண்ணூத்தீஇ ஒம்பதாஆ.....ஏ...எப்பா.......
சரி அப்போ......நான் வரட்டா.......அட விடுங்க.....இதுல என்னா இருக்கு...என்னாதூஊ.....போகபடாதாஆ.......இன்னும் நூறு அடிக்கலையா.......விடுங்கபா......ஒண்ணு....ரெண்டு ......கொறஞ்ச என்னா இப்போ.........அட....ஏய்..ஏய்...ய்...ய்.....அதுக்கு ஏன்லே மெறட்டுறீங்க.......இப்ப என்னா....இந்த நொண்டி காலோட நா....புயலு கரைய கடக்கறா மாறி.....100 அட்சீ.....கோட்ட கடக்கணூம்....அவ்ளோதானே.........எவ்ளோவோ செய்துட்டோம்.....இது செய்ய மாட்டமா.......ம்ம்ம்.....எடுப்பா அந்த பேட்ட......குடுப்பா ஏன் கையில.............இந்தா வாங்கிக லாஸ்டு அடி.......ஓட்ரா ராஜா....ஓட்ரா......ஒட்ராடேய்ய்ய்........அட்ங்க....யாருடா அவன் கேட்ச் புடிக்கிறது.....ஐய்ய்யோ......இருடா....டாய்.......(ஆமா நூறு ஆச்சாமா.......நான் ஸ்டேடியத்த விட்டு அப்பிடியே ஓடி வந்துடேனே.........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
ஜி said...
//50kku vaazththukkal :)))
koduththa linkslaam paakuren :)))//
பாருங்க..பாருங்க..வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அன்புடன் அருணா
கார்த்திகேயன். கருணாநிதி said...
//வாழ்த்துக்கள்.... அருணா
நிறைய எழுதுங்கள்...//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி kaarthikeyan.
அன்புடன் அருணா
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கிரி, அனுஜன்ய ,முகவை மைந்தன்.
அன்புடன் அருணா
Linq said...
Hey Aruna,
This is Alpesh from Linq.in.I thought I would let you know that your blog has been ranked as the Best Languages Blog of the week on 22-06-2008
thanx Linq.I don't know the exact value of this awards but anyways..thanx
anbudan aruna
Vijay said... //.......(ஆமா நூறு ஆச்சாமா.......நான் ஸ்டேடியத்த விட்டு அப்பிடியே ஓடி வந்துடேனே.........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)//
ஐயோ அப்பிடியே ஒரு one day final மேச் கடைசி ஓவர் பார்க்கிறா மாதிரி ஒரு feelings விஜய், மேடையிலே வச்சு அவார்ட் ஒண்ணு கொடுக்கலாம்னா வெளியே ஓடிட்டீங்க்களே விஜய்??? சதம் அடிக்க உதவியதற்கு நன்றி
அன்புடன் அருணா
என்னங்க இது,
என் பின்னூட்டமெல்லாம் நாலஞ்சு எளுத்து ஒவ்வோரு வரிக்கும் காணாம போயி (ISI தலையீடா இருக்குமோ?) உடுக்கை இழந்தவன் கை மாதிரி(யாராவது இடுக்கண் களைங்கப்பா) நிக்கிது. அதும் இல்லாம நீங்க, புதுசா எவன்டா இவன்னு பின்னூட்டத்தை மட்டும் அனுமதிச்சி (கவுண்ட்டுக்காக வாஆஆ) கண்டுக்காம விட்டுடீங்க.... பாரவாயில்லா விடுங்க....ஓரு வேளை அஞ்சி பின்னூட்டம் போட்டுருககான். ஆனா ஒரு வரி கூட நம்ப பதிவை பற்றி எழுதலையேன்னு கோவமா? நிஜமா நிறைய படிச்சேங்க....அதுக்கு எல்லாம் இனிமேதான் பின்னூட்டம் போடணும்... இப்போ நான் அடிச்ச இந்த சென்சுரிய உங்க ஆப்சென்சுரி பதிவுக்கு(யப்பா ஒரு வழியா மேட்டர லிங்க்கு பண்ணியாச்சு) டெடிக்கேட்டு (அதாங்க சூரியன் எப்.எம் ல பண்றாங்களே, அது) பண்றேன். வாழ்க!!!! வளர்க!!!!!
நன்றி அருணா,
சாரி நீங்க கமெண்ட்ரீங்கன்னு தெரியாம நானு கமெண்டிட்டேன். இருக்கட்டும் உங்க நூறாவது பதிவுக்கு டபுள் சென்சுரியே போட்ருவோம்.
வாழ்த்துக்கள் :)
வாழ்த்துக்கள் - 50 பதிவுகள் - அனைத்தும் வித்தியாசமனாவை.
வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா