நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, December 7, 2009

என்றேனும் பசுமையாய் இருந்திருப்பேன்...


என் கிளைகளில்
என்றேனும் பூக்க்கள் ஊஞ்சலாடியிருக்கும்...
என் வேர்களில் ஈரம் இணைந்திருந்திருக்கும்
என் மடியில் கவிழ்பூக்கள் நூறு முத்தமிட்டிருக்கலாம்.....
என் நிழலில் ஒரு குடும்பம் சிரித்துப் பேசியிருக்கலாம்.....

இலைகளையும் பூக்களையும் உதிரவிடாமல்
காவல் காக்கவுமில்லை
நான் பசுமையாய் இருந்த
நிமிடங்களைச் சேகரிக்கவும் இல்லை.....

இப்போதிந்த இளைப்பாறும்
பறவைகளில்லாக் கிளைகளும்
பூவாசமில்லாத் தனிமையும்
பூக்களின் போதையில்லாத
இலையசையா நிசப்தமும்....
பயமாயிருக்கிறது.............

என் செய்ய? கூடியிருக்க.........
எங்களுக்கில்லை முதியோர் இல்லங்கள்.......

40 comments:

ராமலக்ஷ்மி said...

அந்தக் கடைசி வரிகளுடன் கவிதை வெகுஅருமை அருணா.

//என் செய்ய? கூடியிருக்க.........
எங்களுக்கில்லை முதியோர் இல்லங்கள்....... //

அழகாய் உணர்த்திவிட்டிருக்கிறீர்கள்!

ஆ.ஞானசேகரன் said...

[[ராமலக்ஷ்மி said...

அந்தக் கடைசி வரிகளுடன் கவிதை வெகுஅருமை அருணா.

//என் செய்ய? கூடியிருக்க.........
எங்களுக்கில்லை முதியோர் இல்லங்கள்....... //

அழகாய் உணர்த்திவிட்டிருக்கிறீர்கள்!]]


ரிபீட்ட்ட்ட்

நல்லா அழகா சொல்லியுள்ளீர்கள் அருணா

பூங்குன்றன்.வே said...

//இலைகளையும் பூக்களையும் உதிரவிடாமல்
காவல் காக்கவுமில்லை
நான் பசுமையாய் இருந்த
நிமிடங்களைச் சேகரிக்கவும் இல்லை.....//

//என் செய்ய? கூடியிருக்க.........
எங்களுக்கில்லை முதியோர் இல்லங்கள்....... //

ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க. அசத்தல் கவிதை.ஆனால் மரத்தின் மகிமையை உணராமல் தான் இருக்கிறோம் இன்னும்..

thiyaa said...

//

இப்போதிந்த இளைப்பாறும்
பறவைகளில்லாக் கிளைகளும்
பூவாசமில்லாத் தனிமையும்
பூக்களின் போதையில்லாத
இலையசையா நிசப்தமும்....
பயமாயிருக்கிறது...........

//

அழகிய ஆழமான வரிகள்

வல்லிசிம்ஹன் said...

மரங்களை மறந்து நடக்கும் மறம் இருக்கும் வரையில்
எத்தனை மரங்கள் அழப் போகின்றனவோ.
அருமையான கவிதை வரிகள்.

மாதேவி said...

கவிதை அருமை.

மரத்தின் ஏக்கத்தின் வாயிலாக மனிதர்க்கும் மனத்தைரியம் கொடுக்கும் நல்ல கருத்தைக் கையாண்டுள்ளீர்கள்.

anujanya said...

நல்லா இருக்கு.

அனுஜன்யா

sathishsangkavi.blogspot.com said...

இப்போதிந்த இளைப்பாறும்
பறவைகளில்லாக் கிளைகளும்
பூவாசமில்லாத் தனிமையும்
பூக்களின் போதையில்லாத
இலையசையா நிசப்தமும்....
பயமாயிருக்கிறது.............

கவிதை நல்லா இருக்கு......

லெமூரியன்... said...
This comment has been removed by the author.
லெமூரியன்... said...

நல்ல சொல்லிருக்கீங்க டீச்சர்...!

S.A. நவாஸுதீன் said...

கடைசி வரிகள் உலுக்கிவிட்டன. அருமை மேடம்.

பூங்கொத்து.

கல்யாணி சுரேஷ் said...

பூங்கொத்து நூறு.

Ungalranga said...

கண்டிப்பாக அந்த மரங்கள் அப்படி வருந்தவே வருந்தாது..என்பது என் எண்ணம்!!

நல்ல கவிதை..கடைசி வரிகள் இதயத்தை காயப்படுத்திவிட்டது..!!

Thamira said...

ரொம்ப நல்லாயிருக்குது.

ஹேமா said...

வயதைத் தொலைப்பதின் பயம் மனிதரைப்போல மரத்துக்கும் இருக்கும்தானே !

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி & ஞானசேகரன்.

தமிழ் said...

/என் செய்ய? கூடியிருக்க.........
எங்களுக்கில்லை முதியோர் இல்லங்கள்....... /

அருமை

அன்புடன் அருணா said...

நன்றி தியாவின் பேனா,அனுஜன்யா!

அன்புடன் அருணா said...

நன்றி வல்லிம்மா,மாதேவி!

அன்புடன் அருணா said...

நன்றி Sangkavi ,லெமூரியன்...

சந்தனமுல்லை said...

மிகவும் அருமை!! எல்லாவற்றிலும் கலக்குகிறீர்கள்!! கவிதை, ஓவியம்....!!

கமலேஷ் said...

என் நிழலில் ஒரு குடும்பம் சிரித்துப் பேசியிருக்கலாம்.....

நல்ல அழகான வரிகள்...
அழகான கவிதையும் கூட...
வாழ்த்துக்கள்...

சேவியர் said...

பஞ்ச் சூப்பர் :D

அன்புடன் அருணா said...

பூங்குன்றன்.வே said...
/ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க. அசத்தல் கவிதை.ஆனால் மரத்தின் மகிமையை உணராமல் தான் இருக்கிறோம் இன்னும்../
என் கவலையும் அதுவேதான்...

அன்புடன் அருணா said...

ரங்கன் said...
/கண்டிப்பாக அந்த மரங்கள் அப்படி வருந்தவே வருந்தாது..என்பது என் எண்ணம்!!/
வருந்தக் கூடாது என்பதுதான் என் எண்ணமும் ரங்கன்..

ஆதிமூலகிருஷ்ணன் said...
/ரொம்ப நல்லாயிருக்குது./
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்!

ஹேமா said...
/ வயதைத் தொலைப்பதின் பயம் மனிதரைப்போல மரத்துக்கும் இருக்கும்தானே !/
அட....அதுவும் சரிதான்!

Karthik said...

கலக்கல். :))

தமிழ் உதயம் said...

மரங்களின் நேற்றைய ஞாபகங்கள் நிச்சயம் இப்படித்தான் இருக்கும். அற்புதமான கவிதை.

sri said...

interestingly it invokes a different meaning too u know why? scientists believe that no matter what happens the plants would survive and be awefully alone without the presence of us :)

sri said...

Interestingly it makes lot of sense in different way, Scientists believe that plants would survive no matter what happens on earth and they would be left awefully alone after we are long gone ;)

sri said...

I have typed comments and it keeps saying some blogger error, either none of them would appear or all of them would appear including this ;)
would try tomorrow as it is awefully late here. Good post

Unknown said...

உண்மை எப்போதுமே கசக்கும்.., நல்ல கவிதை..,

கிறுக்கன் said...

அருமை அருணா!!!

முதியோர் இல்ல பதில்

சங்கடமல்ல இது

தனியாக இருந்தாலும்
தன் காலில் தான் நிற்கிறாய்
பட்டு போனாலும்
வெட்டு படவில்லை
நிதாரவாய் நின்றாலும்
நிமிர்ந்து நிற்கிறாய்
வாழ்ந்த இடத்தில்
வீழ்ந்தும் போவாய்

நாங்கள் கூடியிருந்தாலும்
குன்றிபோய் இருக்கிறோம்
--
கிறுக்கன்

அன்புடன் அருணா said...

நன்றி திகழ், சந்தனமுல்லை!

அன்புடன் அருணா said...

Karthik said...
/கலக்கல். :))/
வாப்பா கார்த்திக்!

tamiluthayam said...
மரங்களின் நேற்றைய ஞாபகங்கள் நிச்சயம் இப்படித்தான் இருக்கும். அற்புதமான கவிதை.
நன்றி tamiluthayam

அன்புடன் அருணா said...

நன்றி கமலேஷ் முதல் வருகைக்கும் கருத்துக்கும்!

அன்புடன் அருணா said...

சேவியர் said...
/பஞ்ச் சூப்பர் :D/
ரொம்ப நாளைக்கு அப்புறம் சேவியர்!நன்றி!

அன்புடன் அருணா said...

Srivats said...

/interestingly it invokes a different meaning too /
Rightly said Sri. Thanx for those unexpected three comments!:)

Priya said...

அழகான கவிதை!!!

Princess said...

கவிதை அழகு

KABEERANBAN :கபீரன்பன் said...

அழகான கருத்து, கவிதை நயத்துடன் சொல்லியிருகிறீகள். வாழ்த்துகள்.
ஒரு சந்தேகம்

//என் கிளைகளில்
என்றேனும் பூக்க்கள் ஊஞ்சலாடியிருக்கும்...
என் வேர்களில் ஈரம் இணைந்திருந்திருக்கும்
என் மடியில் கவிழ்பூக்கள் நூறு முத்தமிட்டிருக்கலாம்.....
என் நிழலில் ஒரு குடும்பம் சிரித்துப் பேசியிருக்கலாம்.....//

தன் வாழ்க்கையைப் பற்றி தானே கூறுகையில் அந்த ‘இருக்கலாம்’ என்ற சந்தேக தொனி எதற்கு ?

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா