நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, December 1, 2007

நல்லதை நாலு பேருக்குச் சொல்வோம் 3

Saturday, December 1, 2007
நல்லதை நாலு பேருக்குச் சொல்வோம் 3

www.bharatbloodbank.com இந்த வெப்சைட்டில் எந்த வகையான ரத்த குரூப்பும் தேவைப்பட்டால் உடனே ஆயிரக்கணக்கான ரத்த தானம் செய்பவர்களின் முகவரிகள் கிடைக்கும். இந்த விஷயத்தை உடனடியாக தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லவும். எங்கேயோ எப்போதாவது யாருக்காவது இந்த செய்தியால் உங்களையறியாமலே உதவிக் கொண்டு இருப்பீர்கள்.............
aruna


Posted by aruna at 4:02 AM 0 comments

4 comments:

குட்டிபிசாசு said...

நல்ல தகவல் வாழ்த்துக்கள்!!

"நான் இறக்கப் போகிறேன்" தலைப்பை மாத்துங்க மேடம்! கஷ்டமாக இருக்கிறது!!

Aruna said...

வருகைக்கு நன்றி குட்டி பிசாசு,
இப்போ என் தலைப்புதான் hot topic discussion.....
ரொம்பத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் மாற்றுவதற்கு....
அருணா

Anonymous said...

இந்த அருணா பொண்ணுக்கு, சமூகப் பொறுப்புணர்ச்சி ரொம்ப ஜாஸ்த்திப்பா.நாமளூம்தான் இருக்கோமே...

எல்லாரும் ஜோரா ஒரு தடவை கைத்தட்டுங்கப்பா.

அம்மாடி அருணா,

நிறைய அதிசயப் பட வைக்கிறே நீ.
வாழ்த்துக்கள். நீ நல்லா இருக்கோணுமின்னு, மனசார வாழ்த்தறேன்.

பிரியமுடன்
SAM
தாத்தா

Aruna said...

சாம் தத்தா said....
//நிறைய அதிசயப் பட வைக்கிறே நீ.
வாழ்த்துக்கள். நீ நல்லா இருக்கோணுமின்னு, மனசார வாழ்த்தறேன்//
நன்றி சாம் தத்தா! அதிசயப் படவா வைக்கிறேன்? வாழ்த்துக்கும்,வருகைக்கும் நன்றி!
அருணா

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா