நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, December 3, 2007

மழை நாளின் ஒரு நாளில்...................

மழை நாளின் ஒரு நாளில்...................

மழை விழுந்து அழுதது
பனிப் புல் குளிர்ந்து சிரித்தது....
பூ மொட்டுக்கள் தங்கள் குடைகளை
விரித்து பூவாய் மலர்ந்தது....
பெண் சிட்டுக்கள் தங்கள் குடைகளை
விரித்ததும் பூப்போல்தான் தெரிந்தது....
மழைக் குடைகளின் நிழல்களில் நானுமாய்
மலர்க் குடைகளின் நிழல்களில் நினைவுமாய்....
மழை நாளின் ஒரு நாளில்
மழையும் நானும் சினேகிதமாய்.....
குடையை விரித்தும் பின் சரித்தும்
மழையைச் சேர்வதும் பிரிவதுமாய்
உன் நினைவைச் சேர்வதும் பிரிவதுமாயிருந்தேன்..........

Posted by aruna at 3:39 AM 0 comments

1 comment:

sri said...

kalakiteenga ..
//குடையை விரித்தும் பின் சரித்தும்
மழையைச் சேர்வதும் பிரிவதுமாய்
உன் நினைவைச் சேர்வதும் பிரிவதுமாயிருந்தேன்..........//

mazghainna partha sila smayam sandhosama erukku, sila samayam namma kashtam ellam gyabagam varudhu.. mazhai onnu dhaan , nama dhaan mathi mathi feel panrom :)

Ungalukku mazhainna romba pidikkuma?

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா