நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, October 5, 2009

வானம் காணாமல் போயிருந்தது......................




முளைத்திருந்த சிறகுகளை விரித்துப்
பறக்கப் பார்த்தேன்..........
வானம் காணாமல் போயிருந்தது......................

தண்ணீரைக் கொண்டிருந்தது
ஆறு.................
பாதை முடிந்து போயிருந்தது......................

சூரியன் தகதகத்தது..........
என் நிழல் களவு போயிருந்தது...........

கனவு கண்ட இடம்
கை கூடியது...........
ஓட்டத்தின் முடிவில்
பரிசுக்கான நூலையும் அறுத்தாயிற்று........

இனி எனன?
தினமும் நகரும் வாழ்வு..........

மழை பெய்து கொண்டிருந்தது........
அது மட்டுமே மனதை நிறைப்பதாய்
வெற்றி தோல்விகள் பற்றிய நினைவினறி
விசிலடிக்கச் செய்வதாய்
இருந்தது.........

54 comments:

பித்தனின் வாக்கு said...

மழை பெய்து கொண்டிருந்தது........
அது மட்டுமே மனதை நிறைப்பதாய்
வெற்றி தோல்விகள் பற்றிய நினைவினறி
விசிலடிக்கச் செய்வதாய்
இருந்தது.........

இந்த வரிகள் மிகவும் அருமை, ஆனால் அந்த நிலையை அடைவது மிக்க கடினம். நம் வாழ்க்கையின் வெற்றி தோல்விகளை, இன்ப துன்பங்களை சமணேக்காய்ப் பார்த்து சிரிப்பது என்பது மிகவும் உயர்ந்த நிலை. கவிதை சாரம் எனக்கு புரியவில்லை என்றாலும்(கவிதையில நான் வீக்) இருந்தாலும் வரிகள் அருமை.

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்லாயிருக்குங்க

Anonymous said...

Pidinga Poongothu!! :)

kamaraj said...

//மழை பெய்து கொண்டிருந்தது........
அது மட்டுமே மனதை நிறைப்பதாய்
வெற்றி தோல்விகள் பற்றிய நினைவினறி
விசிலடிக்கச் செய்வதாய்
இருந்தது.........//
மழை எல்லாக்கசடுகளையும் அடித்துக்கொண்டுப்போய்விடும்.
மழை முடிந்தபின் பாருங்கள், இழைகளெல்லாம் ஷாம்பு போட்டுக்குளித்த மாதிரி
பளிச்செனச் சிரிக்கும் சந்தோசத்தோடு. மழை போதும், மழை நல்லது.
வெற்றிகள் தனிமைப்படுத்தும், அல்லாதவை ஸ்நேகமாக்கும்.
நண்பர்கள் இருக்கிறார்கள்.
கணத்த கவிதையை பங்குபோட.

கார்க்கிபவா said...

படம் அருமை. கவிதையும்தான்

R.Gopi said...

இப்போதான் நெனச்சேன்... அருணா மேடம் எழுதி கொஞ்ச நாள் ஆச்சு போல இருக்கேன்னு... வந்து பார்த்தால்... இதோ ஒரு அச‌த்த‌ல் போஸ்டிங்....

//முளைத்திருந்த சிறகுகளை விரித்துப்
பறக்கப் பார்த்தேன்..........
வானம் கணாமல் போயிருந்தது......................//

"காணாம‌ல்" ச‌ரி ப‌ண்ணுங்கோ...

//கனவு கண்ட இடம்
கை கூடியது...........
ஓட்டத்தின் முடிவில்
பரிசுக்கான நூலையும் அறுத்தாயிற்று........//

அப்ப‌டின்னா????

//மழை பெய்து கொண்டிருந்தது........
அது மட்டுமே மனதை நிறைப்பதாய்
வெற்றி தோல்விகள் பற்றிய நினைவினறி
விசிலடிக்கச் செய்வதாய்//

அட‌... ந‌ல்லா இருக்கே மேட‌ம்...

ப‌திவும், அந்த‌ நெஞ்சுக்குள் பெய்யும் மாம‌ழையும்...வாவ்.. சொல்ல‌ வைக்கிற‌து..

பிடியுங்க‌ள் ஒரு பூந்தொட்டியும் வாழ்த்துக்களும்...

Thamira said...

:))

+Ve Anthony Muthu said...

அருமை!

ஏதோ ஒன்றை உணர்த்துவதாய்த் தெரிகிறது.

ஆனா புரியலை.

கொத்துப் பூக்கள்.

Sanjai Gandhi said...

குட்.. குட்..

Rajan said...

பூங்கொத்து!!!!

ரவி said...

அடிப்பா இங்க ஒரு விசில் இந்த கவிதைக்கு !!!!!

அன்புடன் அருணா said...

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி பித்தன் வாக்கு!

அன்புடன் அருணா said...

வாங்க ஞானசேகரன்....நனறி!

அன்புடன் அருணா said...

உங்க பூங்கொத்து எல்லாம் வைதது ஒரு பூ உலகமே உண்டாக்கியாச்சு........நன்றி athivas!

அன்புடன் அருணா said...

உங்க பின்னூட்டமே ஒரு கவிதை மாதிரி காமராஜ்...

sri said...

Romba nalla kavithai aruna, olympics champions would face heavy depression after the winning and once the game is over, because there is no other mountain to climb, andha maari erukku edhu. Keep them coming aruna

அன்புடன் அருணா said...

அடடே கார்க்கி!!!

Anonymous said...

you have a surprise on my blogpage:)

நேசமித்ரன். said...

நல்லாயிருக்குங்க

Rajalakshmi Pakkirisamy said...

//மழை பெய்து கொண்டிருந்தது........
அது மட்டுமே மனதை நிறைப்பதாய்
வெற்றி தோல்விகள் பற்றிய நினைவினறி
விசிலடிக்கச் செய்வதாய்
இருந்தது.........//

Good one..

அன்புடன் அருணா said...

வாங்க கோபி.....காணாம‌ல்" ச‌ரி ப‌ண்ணியாச்சு!
அப்புறம் ஓட்டப் பந்தய முடிவில் நூல் கடடியிருக்குமே!! அதைச் சொன்னேன்....அப்புறம் பூந்தொட்டி வாங்கீட்டேன்.....

அன்புடன் அருணா said...

ம்ம்ம் வெறும் :) தானா ஆதிமூலகிருஷ்ணன் ?????

அன்புடன் அருணா said...

அச்சோ...புரிலியா Antony????

அன்புடன் அருணா said...

வாப்பா சஞ்சய்....கமென்ட் போட நேரம் கிடைச்சுதா???

KParthasarathi said...

padikka nanna irukku.Enna solla vareengannu puriyalai enakku.Pl give a gist

எம்.எம்.அப்துல்லா said...

valakkampola kalakkal :)

எம்.எம்.அப்துல்லா said...

//வாப்பா சஞ்சய்....கமென்ட் போட நேரம் கிடைச்சுதா??? //

நல்லவேளை. என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கல :)

ப்ரியமுடன் வசந்த் said...

படம் அழகா நம்மவீட்டு ஜன்னலில் மழை விழுவதை பார்க்குற மாதிரியிருக்கு பிரின்ஸ்

கவிதை அந்த மழைய ரசிச்சுட்டே படிச்சா இன்னும் அழகா இருக்கும்,,,,,,,

T.V.ராதாகிருஷ்ணன் said...

தலைப்பிலே காலைக் காணுமே

R.Gopi said...

//அன்புடன் அருணா said...
வாங்க கோபி.....காணாம‌ல்" ச‌ரி ப‌ண்ணியாச்சு!
அப்புறம் ஓட்டப் பந்தய முடிவில் நூல் கடடியிருக்குமே!! அதைச் சொன்னேன்....அப்புறம் பூந்தொட்டி வாங்கீட்டேன்.....//

ஓஹோ... அதுவா... இப்போ புரிஞ்சுடுத்து....

நான் அவ்ளோதான்... அதான் புரிய‌ற‌துக்கு கொஞ்ச‌ம் லேட்...

பாச மலர் / Paasa Malar said...

மழை அனைத்தையும் மறக்கச் செய்யும்....

Karthik said...

செம கவிதை..:))

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்கு நன்றி!rajan RADHAMANALAN அடிக்கடி வாங்க!

அன்புடன் அருணா said...

முதல் வருகைன்னு நினைக்கிறேன் செந்தழல் ரவி...நன்றி!

அன்புடன் அருணா said...

U've got the exact idea of mine Sri! thanx for getting the right meaning!.Keep coming Sri!!

சந்தனமுல்லை said...

//மழை பெய்து கொண்டிருந்தது........
அது மட்டுமே மனதை நிறைப்பதாய்
வெற்றி தோல்விகள் பற்றிய நினைவினறி
விசிலடிக்கச் செய்வதாய்
இருந்தது.........//

சூப்பர்!! மிகவும் ரசித்தேன்!

Anonymous said...

அழகான வரிகள்...
அதனுள் ஆழமான கருத்துக்கள்...
மொத்தத்தில் அருமையான கவிதை...

வாழ்த்துக்கள் அருணா!!!

அன்புடன் அருணா said...

Got the surprise Athivas!!!Nice surprise! thanx!

அன்புடன் அருணா said...

எம்.எம்.அப்துல்லா said...
//வாப்பா சஞ்சய்....கமென்ட் போட நேரம் கிடைச்சுதா??? //
/நல்லவேளை. என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கல :)/
உங்களுக்கும் அதே கேளவிதான் அப்துல்லா!

அன்புடன் அருணா said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவிஞன்!

அன்புடன் அருணா said...

அதுக்குத்தானே படம் வசந்த்!

அன்புடன் அருணா said...

T.V.Radhakrishnan said...
பூங்கொத்து.........வாங்கீட்டேன்!
/தலைப்பிலே காலைக் காணுமே/
சேர்த்தாச்சு...நன்றி!

துளசி said...

//முளைத்திருந்த சிறகுகளை விரித்துப்
பறக்கப் பார்த்தேன்..........
வானம் காணாமல் போயிருந்தது...........//

அழகான கற்பனை.

என்னமா யோசிக்கிறீங்க போங்க...

JACK and JILLU said...

ஹாய்! நல்லா இருக்கு.... தொடர்ந்து எழுதுங்க....

அன்புடன் அருணா said...

நன்றி ...இராஜலெட்சுமி பக்கிரிசாமி !

அன்புடன் அருணா said...

பாச மலர் said...
/மழை அனைத்தையும் மறக்கச் செய்யும்..../
அதே பாசமலர்!

அன்புடன் அருணா said...

நன்றி கார்ததிக்!

அன்புடன் அருணா said...

துளசி said...

/என்னமா யோசிக்கிறீங்க போங்க.../
அப்பிடியா துளசி????

அன்புடன் அருணா said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!balasrini !

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கவிதை வரிகள் ...

அன்புடன் அருணா said...

Thanx JACK and JILLU!

அன்புடன் அருணா said...

KParthasarathi said...
/ padikka nanna irukku.Enna solla vareengannu puriyalai enakku/
அச்சோ.....புரிலியா???

யாழினி said...

வானம் காணாமல் போயிருந்தது; உங்கள் கவிதையிலும் பறி போனது என் மனசு!

Sa.Kaarthikeyan said...

super kavithai!
kaipidi alavu kavithaiyil vanam piditha varihal. arumai aruna...!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா