நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, January 23, 2008

மழையுடன் ஒரு ஊடல்........

மழையுடன் ஒரு ஊடல்........
அன்று நான்
மழையுடன் பேசவில்லை
மழைக்குத் தெரியும்
ஏன் என்று?
மழைக்கு இதுவும் தெரியும்
நஷ்டம் எனக்குத்தான் என்று!
தான் வருவதைத்தான் என்னிடம் சொல்லவில்லை...
அவள் வருவதையும் கூடவா என்னிடம் சொல்லக் கூடாது?
மழையும் நானும் செல்லமாகச் சண்டை போட்டுக்
கொண்டிருக்கும் போதே........
அவள் புன்சிரிப்புடன் கடந்து விட்டாள்!!!
மீண்டும் மழையுடன் ஒரு சண்டைக்குத் தயாராகினேன் நான்!!!!

12 comments:

manjoorraja said...

மழையுடனான ஊடலும் சீண்டலும் அழகான கவிதையாக வெளிப்பட்டிருக்கிறது.


மழை, மேகம் நிலா, மலர்கள் என இயற்கையின் அற்புதங்கள் எத்தனை எத்தனை கவிஞர்களை உருவாக்கியிருக்கிறது.

வாழ்த்துகள் அருணா

http://groups.google.com/group/muththamiz

Aruna said...

//மழை, மேகம் நிலா, மலர்கள் என இயற்கையின் அற்புதங்கள் எத்தனை எத்தனை கவிஞர்களை உருவாக்கியிருக்கிறது.

வாழ்த்துகள் அருணா//

நன்றி ! சரியாகச் சொன்னீர்கள்! இவைகள் இல்லையென்றால் நம் வாழ்வு போரடித்து விடுமே!!
அன்புடன் அருணா!!

manjoorraja said...

அருணா

கவிதை நன்றாக இருக்கிறது.

வாழ்த்துகள்

தொடர்ந்து எழுதுங்கள்

http://groups.google.com/group/muththamiz

Dreamzz said...

வாவ்:) நல்லா இருக்குங்க கவிதை... ஷார்ட் அண்ட் நைஸ் :)

Dreamzz said...

மழை.. எப்பவுமே தனி சுகம் தான் :)

சாம் தாத்தா said...

ம்ம்ம்...
நல்லாத்தான் இருக்கு.

இதுக்கு நீ ரொம்ப யோசிக்கலைன்னு தோணுது...

(முந்தைய பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்....)

கவி மனம் வாழ்க...

Aruna said...

நன்றி மஞ்சூர் ராசா,dreamz, பின்னூட்டங்களுக்கு ரொம்ப நன்றி!!!
அன்புடன் அருணா

Aruna said...

//சாம் தாத்தா said...
ம்ம்ம்...
நல்லாத்தான் இருக்கு.

இதுக்கு நீ ரொம்ப யோசிக்கலைன்னு தோணுது...//

ரொம்ப சரியாகச் சொன்னீங்க சாம் தாத்தா! இப்போ யோசிக்கவே இல்லை இது என் பழைய கவிதைகளில் ஒன்று!!!உங்ககிட்ட இருந்து தப்பிக்க முடியுமா???
அன்புடன் அருணா

cheena (சீனா) said...

கவிதை அருமை - பழசோ புதிதோ - காப்பி இல்லை - உங்கள் கவிதையின் மீள் பதிவு தானே

கருத்து அருமை- எளிமையான சொற்கள்.

வாழ்த்துகள்

Aruna said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..சீனா
அன்புடன் அருணா.

முஹம்மது ,ஹாரிஸ் said...

குழந்தை தனமான வார்த்தை வேளையாட்டு அருமை

N Suresh said...

இந்த பதிவிற்கு
எனது பாராட்டுக்களில்லை!
மன்னிக்கவும்:-)

என் சுரேஷ்

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா