நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, February 23, 2012

கண்ணாடி ஜன்னல்களை எனக்குப் பிடிப்பதில்லை

                      மூடிக் கிடக்கும் கதவு தட்டப்படும் போதெல்லாம் யாரோ  வந்து ஏதோ ஒரு உற்சாகத் தகவல் சொல்லப் போகிறார்கள் என்னும் எண்ணமும், உறங்கிக் கிடக்கும் தொலை பேசி பாடல் பாடி அழைக்கும் போது யாரோ ஒரு முகம் தெரியா உறவு ஒரு சந்தோஷத்தில் ஆழ்த்தும் தகவல் சொல்லும் என்று காத்துக் கிடக்கும் மனமும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.உறைக்குள் உறங்கிக் கிடக்கும் கடிதமொன்றைப் பிரிப்பதில் இருக்கும் அவசரம் அதனுள் இருக்கும் ஒரு முன்பே தெரிந்திராத ஒரு விஷயத்துக்காக......அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும்  அழகாக வண்ணக் காகிதங்களால் சுற்றப் பட்ட பரிசுப் பொருள் பிரிக்கப் படும் படபடப்பு அதனுள் இருக்கும் பரிசுக்காகத்தானே.....இதுவரை சுற்றப் பட்ட வண்ணக் காகிதங்களைத் தாறுமாறாகக் கிழிக்காமல் ஒழுங்காக ஒருமுறை கூடக் கிழித்ததில்லை.
                              மூடிக் கிடக்கும் ஜன்னல்கள் அடக்கி வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் கூட இந்த வகைதான்.மெயில் பாக்ஸ் திறக்கும் போதும் பாஸ் வேர்ட் டைப் பண்ணும் போதும் புது மெயில் கொண்டு வந்து தரும் செய்திகளுக்காக ஏங்கித்தான் கிடந்து போகிறது மனம். மொட்டவிழாத மலர்,மூடி திறக்காத சிப்பி, தளிர்க்காத செடி,முளை விடாத விதைகூட இப்படி வாழ்வின் ஒவ்வொரு படியிலும் ஆச்சர்யங்கள்.
                              கடல் முன்னால் தாகத்தோடு நிற்கும் உணர்வும் கடலுக்குள் எதையோ தேடி ஓடவேண்டும் என்ற எண்ணமும் கூடத் தவிர்க்க முடியாததாகிப் போகிறது. நீள் சாலையில் தன்னந்தனியாக ரப் ரப்பென்று சத்தமெழுப்பியபடி ஓடும் மனம் என் கண்ணில் எனக்கே தெரிகிறது....இது கொஞ்சம் அதிகம்தான்.ஆனால் எனக்கு நடக்கிறதே....
தபால் கார்டுகளும்
கண்ணாடி ஜன்னல்களும்
எனக்குப் பிடிப்பதில்லை
தகவல்களை எனக்கு
முன்கூட்டியே சொல்லிவிடுவதால்...
தெரியாதவைகளுக்கும்
தெரிந்தவைகளுக்குமிடையே
ஒரு சமன்பாட்டைப்
போட்டுக் கொண்டு
இயல்பாக இருக்க
முடிந்தவர்கள்
அசாதரணர்கள்......
நான் பாவம்
சாதாரணமானவளாய்
இருந்துவிட்டுப் போகிறேன்....

தேடல்களும் ஓட்டமும்தான் இயக்கிக் கொண்டிருக்கும் சக்தி.வண்டியோட்டும் போதும் கூட என்னை முந்திச் செல்லும் வண்டிகளும் நான் முந்திச் செல்லும் வண்டிகளும் கூட என் ஓட்டத்துக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்துக் கொன்டிருக்கின்றன.......

24 comments:

ராமலக்ஷ்மி said...

/தபால் கார்டுகளும்
கண்ணாடி ஜன்னல்களும்
எனக்குப் பிடிப்பதில்லை
தகவல்களை எனக்கு
முன்கூட்டியே சொல்லிவிடுவதால்.../

காரணம் அருமை அருணா:)!

காற்றில் எந்தன் கீதம் said...

என்னுடைய சில உருவமற்ற உணர்வுகளுக்கு இந்த படைப்பு ஓர் உருவம் தந்ததாய் உணர்கிறேன்...
இதற்கு பூங்கொத்து என்ன பூந்தோட்டமே தரலாம் :)

குணசேகரன்... said...

தபால் கார்டுகளும்
கண்ணாடி ஜன்னல்களும்
எனக்குப் பிடிப்பதில்லை
தகவல்களை எனக்கு
முன்கூட்டியே சொல்லிவிடுவதால்..///
புரியலங்க!!

விச்சு said...

உண்மைதான். ஒழிந்து கொண்டிருப்பதைத் தேடுவதில்தான் சுகம். அதனால்தான் சிறுவயதில்கூட திருடன் போலீஸ் விளையாட்டை அதிகம் நேசித்திருப்போம்.

பவள சங்கரி said...

அருமைங்க... தபால் கார்டும், கண்னாடி ஜன்னல்களும் பிடிக்காத காரணம் எனக்கும் உண்டு... வாழ்த்துகள்..

சாந்தி மாரியப்பன் said...

//மொட்டவிழாத மலர்,மூடி திறக்காத சிப்பி, தளிர்க்காத செடி,முளை விடாத விதைகூட இப்படி வாழ்வின் ஒவ்வொரு படியிலும் ஆச்சர்யங்கள். //


அருமை அருணா... எத்தனை முதிர்ச்சியடைஞ்சாலும் நம்ம மனசு இன்னும் ஆச்சரியங்களுக்கு ஏங்கும் சிறு குழந்தையாவே இருக்குது. உங்க கவிதைக்கு பூங்கொத்தென்ன?.. டெல்லியின் மொகல் கார்டனையே எழுதி வைக்கிறேன் :-)

காமராஜ் said...

அருணா நலமா இருக்கீங்களா....மிகவுமற்புதமான எழுத்து.முன்பத்தியில் சொன்னதுபோல ஒரு பிடித்தபாடலின் சுவைமிகுந்த வரிகள்.வாழ்த்துக்கள்

காந்தி பனங்கூர் said...

எதிலும் ஒரு சுவாரஸ்யம் வேணும் ஆச்சரியம் கலந்திருக்கனும் என்று எல்லோருடைய மனமும் ஏங்கும். அதில் நீங்களும் நானும் விதிவிலக்கல்ல. அலசல் அருமை.

ஷர்புதீன் said...

பூங்கொத்து

Kanchana Radhakrishnan said...

அருமை.

வெங்கட் நாகராஜ் said...

அருமை.... உங்களுக்கு எனது பூங்கொத்து....

ஹேமா said...

தேடுதல் இருந்தால்தான் வாழ்க்கையில் சுவாரஸ்யம் அதிகம்.இல்லன்னா சப்ன்னுதான் இருக்கும்.பூங்கொத்து பிடிச்சுக்கோங்க டீச்சர் !

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

உங்கள் ஜன்னலைத் திறந்துபாருங்கள். இதோ ஒரு பூங்கொத்து.

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அற்புதத்துக்காக ஏங்கும் கவி மனம் உங்களுக்கு. தொடரட்டும் இந்தத் தேடல்.

அன்புடன் அருணா said...

நன்ரறி ராமலக்ஷ்மி !
காற்றில் எந்தன் கீதம் said...
/என்னுடைய சில உருவமற்ற உணர்வுகளுக்கு இந்த படைப்பு ஓர் உருவம் தந்ததாய் உணர்கிறேன்.../
ரொம்ப சந்தோஷமாயிருக்கு கேட்க!
/இதற்கு பூங்கொத்து என்ன பூந்தோட்டமே தரலாம்/
பூந்தோட்டத்துக்கு நன்றி காற்றில் எந்தன் கீதம்!

அன்புடன் அருணா said...

குணசேகரன்... said..
/ புரியலங்க!!/
போச்சா???!!
விச்சு said...
//உண்மைதான். ஒழிந்து கொண்டிருப்பதைத் தேடுவதில்தான் சுகம். அதனால்தான் சிறுவயதில்கூட திருடன் போலீஸ் விளையாட்டை அதிகம் நேசித்திருப்போம்./
உண்மைதான் விச்சு!
நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
/ அருமைங்க... தபால் கார்டும், கண்னாடி ஜன்னல்களும் பிடிக்காத காரணம் எனக்கும் உண்டு../
அட!

பாச மலர் / Paasa Malar said...

ஆச்சரியங்க்ளுக்காய்க் காத்திருக்கும் என்றென்றும் மனம்...இந்தச் சின்னச் சின்ன விஷயங்கள்தான் பெரிய பெரிய சந்தோஷமாய்..வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதாய்...பூங்கொத்து!

நம்பிக்கைபாண்டியன் said...

தெரியாதவைகளுக்கும்
தெரிந்தவைகளுக்குமிடையே
ஒரு சமன்பாட்டைப்
போட்டுக் கொண்டு
இயல்பாக இருக்க
முடிந்தவர்கள்
அசாதரணர்கள்......
நான் பாவம்
சாதாரணமானவளாய்
இருந்துவிட்டுப் போகிறேன்....////

அசாதாரணமான கவிதை இது!

அன்புடன் அருணா said...

அமைதிச்சாரல் said...
அருமை அருணா... எத்தனை முதிர்ச்சியடைஞ்சாலும் நம்ம மனசு இன்னும் ஆச்சரியங்களுக்கு ஏங்கும் சிறு குழந்தையாவே இருக்குது. உங்க கவிதைக்கு பூங்கொத்தென்ன?.. டெல்லியின் மொகல் கார்டனையே எழுதி வைக்கிறேன் :-)
ஆஹா அத்தனையும் எனக்கேவா???
காமராஜ் said...
/அருணா நலமா இருக்கீங்களா....மிகவுமற்புதமான எழுத்து.முன்பத்தியில் சொன்னதுபோல ஒரு பிடித்தபாடலின் சுவைமிகுந்த வரிகள்.வாழ்த்துக்கள்/
நலமே! நன்றிங்க!
நன்றி காந்தி பனங்கூர் !

ராமலக்ஷ்மி said...

பூங்கொத்துடன்,

அதீதம் - வலையோசை!

எல் கே said...

http://atheetham.com/story/valaiyosai-12

இரசிகை said...

இதுவரை சுற்றப் பட்ட வண்ணக் காகிதங்களைத் தாறுமாறாகக் கிழிக்காமல் ஒழுங்காக ஒருமுறை கூடக் கிழித்ததில்லை.

:)

பிரம்மன்கவி என்கிற கிரிநாத் said...

"சாதாரணமானவளாய்
இருந்துவிட்டுப் போகிறேன்...."

மிக அருமை...

பால கணேஷ் said...

போஸ்ட் கார்டுகளும், கண்ணாடி ஜன்னல்களும் எனக்கும் பிடிக்காததற்கான காரணங்கள் இருந்தாலும் இவ்வளவு அழகாய் சொல்லத் தெரிந்ததில்லை. பிரமாதம்ங்க!

அன்புடன் அருணா said...

நன்றி Kanchana Radhakrishnan
நன்றி பூங்கொத்துக்கு ஹேமா!வெங்கட் நாகராஜ்!ஷர்புதீன்!
சுந்தர்ஜி said...
/உங்கள் ஜன்னலைத் திறந்துபாருங்கள். இதோ ஒரு பூங்கொத்து./
நன்றி பூங்கொத்துக்கு!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா