நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, June 8, 2010

கடவுளாசை யாரை விட்டது?

மழைக் காலத்தில் குருவியையும்
குருவிக் கூட்டையும் காப்பாற்ற
முடியாவிட்டாலும் முனை திரும்பும
பேருந்துகளைக் காப்பாற்றி விடுகிறேனாம்...

தலை பின்னே ஒளிவட்டமுமில்லை
காலடியில் தாமரையுமில்லை
கையிலிருந்து பொற்காசுகள்
கொட்டவுமில்லை...
இருந்தாலும் விளக்கேற்றிக்
கடவுளாக்கி விட்டார்கள்...
புலம்பியது சாலையோரப
புளியமரம்...

கடந்து செல்லும் ஒவ்வொரு
பேருந்தும் சாலை முனை விபத்திலிருந்து
தப்பித்துக் கொள்ளத் தன் கடவுளிடம்
வேண்டிக் கொண்டது புளியமரம்...

கடவுளாசை யாரை விட்டது?

நன்றி யூத்ஃபுல் விகடன்!

19 comments:

+Ve Anthony Muthu said...

அங்கேயும் படித்தேன். :(

நல்ல கவிதை.

ராமலக்ஷ்மி said...

விகடனில் வாசித்தேன் அருணா. கவிதை அருமை.

Unknown said...

கடவுளாகும் ஆசை யாரை விட்டது..

அட்லீஸ்ட் சாமியார் ஆவது உத்தமம்..

அன்புடன் நான் said...

ஆமா...கடவுளாசை யாரை விட்டது?

கவிதை நச்!

காமராஜ் said...

இவ்வளவு நாள் காத்திருந்தது. இதற்குத்தானா ?
நல்லாருக்கு அருணா.

Vidhoosh said...

///கடவுளாக்கி விட்டார்கள்...
புலம்பியது சாலையோரப
புளியமரம்...//

nalla velai.. aani adikkaama vittaangale!!

nallaarukku aruna. :)

Karthik said...

உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு. :)

Chitra said...

ரசித்து வாசித்தேன்.

ஹேமா said...

அசத்தல் சிந்தனை அருணா.
வேற வழி...பூங்கொத்துத்தான் !

Anonymous said...

பதிவுலகில் இன்றைய டாப் டென் பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

பத்மா said...

நல்ல வந்துருக்குங்க அருணா

ப்ரியமுடன் வசந்த் said...

கடைசி வரிகளில் மெல்லிய புன்னகை வந்ததென்னவோ உண்மை பிரின்ஸ்...

அன்புடன் அருணா said...

நன்றி +Ve Anthony Muthu
நன்றி ராமலக்ஷ்மி
June 8, 2010 7:25 AM
கே.ஆர்.பி.செந்தில் said...
/ அட்லீஸ்ட் சாமியார் ஆவது உத்தமம்../
அய்யய்யோ!

சி. கருணாகரசு
காமராஜ் said...
/இவ்வளவு நாள் காத்திருந்தது. இதற்குத்தானா ?/
நல்லா எழுத முயற்சிக்கிறேன் காமராஜ்!

Vidhoosh(விதூஷ்) said...
nalla velai.. aani adikkaama vittaangale!!

ஆணி அடிச்சு மாலையெல்லாம் போட்டாச்சு வித்யா!

அன்புடன் அருணா said...

நன்றி Karthik !
நன்றி Chitra !
நன்றி ஹேமா !

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...பூங்கொத்து

அன்புடன் அருணா said...

நன்றி padma !
நன்றி ப்ரியமுடன்...வசந்த் !

அன்புடன் அருணா said...

நன்றி கமலேஷ்!

பாச மலர் / Paasa Malar said...

நல்லாருக்கு அருணா...

அன்புடன் அருணா said...

நன்றி பாசமலர்!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா