நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, July 17, 2009

எங்க ஊரு பசங்க!!

              ஒரு நாள் பசங்க பரீட்சை எழுதும்போது மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த போது கன்னத்தில் ஒற்றை விரலை வைத்துக் கொண்டிருந்தேன்.
                  
                 ஒரு பையன் எழுந்து நின்றான்..ஏதோ சந்தேகம்தான் கேட்கப் போகிறான் என நினைத்து விரைந்து அவனருகில் சென்றேன்..


"மேடம்...நீங்க விடை சொல்லி உதவுறீங்கன்னு தெரியுது....ஆனால் எந்தக் கேள்விக்கு விடைக் குறிப்பு தர்றீங்கன்னுதான் தெரியல""ன்னான்


நான் புரியாமல் "What do you say?"அப்படீன்னேன்.....


"இல்லே மேடம்......விடைகளைத் தேர்ந்தெடு,பொருத்துக...இதுக்கெல்லாம் கன்னத்தில் ஒரு விரல் வைத்தால் பதில் A, இரு விரல் வைத்தால் பதில் B.....அப்படீன்னு விடைக் குறிப்பு வச்சிருக்கோம் மேடம்...........நீங்க  கன்னத்தில் ஒரு விரல் வைத்திருந்ததால் கேட்டேன் என்றான் ரொம்ப சின்சியராக!!!!...............
நான் ஙே!!!!!!!!!!

46 comments:

மதன் said...

:)

சாம் தாத்தா said...

அருணா கண்ணு..!
செம சூப்பரு..! இப்பல்லாம் உன் வலைப்பூ பக்கம் வரவே முடியலை.
அவ்ளோ கூட்ட நெரிசல்.
வயசாச்சா. இந்த இளசுங்களோட போட்டி போட முடியல.
நல்லா இருக்கியா?

வால்பையன் said...

இந்த வேலையெல்லாம் நடக்குதா!?

நட்புடன் ஜமால் said...

ங!

கிறுக்கன் said...

இதை படித்தவுடன் பள்ளி நினைவுகள் வந்தன.
பசுமை.......நன்றி.
நாங்கள் படிக்கும் போது ஒரு வழக்கம் இருந்தது.உதவிட யாரும் இல்லை எனில் தன் கையே தனக்கு உதவி என்று, Choose the best answerkku நான்கு விரல்களை உதட்டருகே இடமிருந்து வலமாக நகர்த்த வேண்டும்.
நகர்த்தும் வேளையில் நாக்கு ஒரு முறை வெளி வந்து செல்லும்.எச்சில் எந்த விரலில் அதிகம் பட்டதோ அதுவே விடை என்பது ஐதீகம்...
இப்போலாம் technology எங்கயோ போய்டுச்சு.


" தடுமாறும் நிலையதில் தாங்கிட தோளில்லையெனில்
தன்கையே தனக்கு உதவி. "

நன்றி
கிறுக்கன்

KParthasarathi said...

eppadiyellam thappu vazhila poga moolai velai panradhu parunga.vedikkaiyana post Thanks

Karthik said...

:))

Thamira said...

:-))

சுசி said...

நான் வந்த விஷயமே வேற மேடம். இதயப் பூக்கள்ல என் வாழ்த்துக்கள சொல்லீட்டாலும் நேரடியா வாழ்த்தும்போது கிடைக்கிற சந்தோஷமே தனி இல்ல. பிடீங்க பூங்கொத்த, உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மேடம்.

அப்துல்மாலிக் said...

ஹா ஹா ரசிச்சேன் பள்ளிக்கால குறும்பை

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்...இந்த பழைய கால டெக்னிக்கை இன்னும் உயிரோட வச்சிருக்காங்களா..சூப்பர்! எங்க கிளாஸுலயும் இதே டெக்னிக்தான்..அதும் choose the best answer பாணி கேள்விகளுக்கு இதேதான்! இதைவிட கொடுமை...ஒரு எறும்பை பிடிச்சு அது எது மேலே போய் நிக்குதோ அதை எழுதி வைக்குறது....ஹிஹி...மாடல் டெஸ்ட்-ல்லாம் இந்த மாதிரி ஒப்பேத்துறதுதான்! :-))

வழிப்போக்கன் said...

நல்ல ஐடியா...
:)))

R.Gopi said...

//கன்னத்தில் ஒரு விரல் வைத்தால் பதில் A, இரு விரல் வைத்தால் பதில் B.....அப்படீன்னு விடைக் குறிப்பு வச்சிருக்கோம் //

ஆ...ஹா...இது வேறயா??

ஆமாம்..... நீங்க சொல்லி கொடுத்தது சரியான விடைதானே டீச்சர்??

குடந்தை அன்புமணி said...

காலங்கள் மாறினாலும் இந்த மாதிரி ஐடியாக்கள் இன்னும் வாழத்தான் செய்கின்றனபோலும்...

ஆ.ஞானசேகரன் said...

ஓ இப்படியெல்லாம் நடக்குதுதா?

Anonymous said...

First read this... This incident has happened for one of our citizen in chennai. Might be it will happen in future for us also. Let us not fear to exercise our rights.

http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html

Unknown said...

நல்லா இருக்கு அருணா.

சப்ராஸ் அபூ பக்கர் said...

நான் மட்டும் தான் அப்படீன்னு பார்த்தா அங்கேயும் நம்ம பசங்க இருக்காங்களா?...

ஜாலியோ ஜாலிங்க......

ப்ரியமுடன் வசந்த் said...

http://www.tamilmalarnews.com/page4.pdf

your story published on minmalar

யக்கா கலக்குறீங்க........

pudugaithendral said...

aruna seekiram vaanga

http://pudugaithendral.blogspot.com/2009/07/blog-post_3116.html

Rajan said...

நீங்க டீச்சரா ?!!!

ஜீவா said...

தயவுசெய்து படிக்கவும்

விளம்பரத்திற்காக அல்ல

http://gg-mathi.blogspot.com/2009/07/blog-post_23.html

gils said...

avvvvvvvvv...ada appracentigala...teecher kitaye bitta!!! weight pasangalaa irupaanga poalrukay :)

அன்பேசிவம் said...

மேடம், எனக்கு விருதுகொடுக்கும் அளவிற்கு எந்த பெருமையும் இல்லாவிட்டாலும். என்னுடைய சந்தோசங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த விருதையும் உங்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன். சிலருக்கு இது உந்துசக்தியாக இருக்கலாம், சிலருக்கு வாழ்த்தாக இருக்கலாம் அல்லது சிலருக்கு கௌரவமாக இருக்கலாம். எது எப்படியோ? தொடர்ந்து எழுதுங்கள், நிச்சயம் உங்களுடைய பதிவு "ரசனைக்குரிய பதிவு" .

இது உங்கள் நண்பன் உங்களுக்காக கொடுத்த விருது.
மறக்காம அட்டாச்மென்ட்டில் படத்தை வெட்டி உங்க பதிவுல ஒட்டிகொள்ளுங்கள்.

Sanjai Gandhi said...

நான் புரியாமல் "What do you say?"அப்படீன்னேன்.....


"இல்லே மேடம்......விடைகளைத் தேர்ந்தெடு,பொருத்துக...இதுக்கெல்லாம் கன்னத்தில் ஒரு விரல் வைத்தால் பதில் A, இரு விரல் வைத்தால் பதில் B.....அப்படீன்னு விடைக் குறிப்பு வச்சிருக்கோம் மேடம்...........நீங்க கன்னத்தில் ஒரு விரல் வைத்திருந்ததால் கேட்டேன் என்றான் ரொம்ப சின்சியராக!!!!...............

//
இங்க்லிஷ்ல கேட்டா தமிழ்ல பதில்.. அப்டியே என்னை மாதிரியே.. :)

அன்புடன் அருணா said...

நன்றி...!மதன்
நன்றி...!ராமலக்ஷ்மி

அன்புடன் அருணா said...

சாம் தாத்தா said...

//வயசாச்சா. இந்த இளசுங்களோட போட்டி போட முடியல. //
நல்லா இருக்கியா?//
எனக்கென்னா தாத்தா சூப்பரா இருக்கேன்...
வயசானா என்னா மனசை இளமையா வச்சுக்கோங்க தாத்தா!!!

July 17, 2009 10:52 AM

அன்புடன் அருணா said...

வால்பையன் said...
//இந்த வேலையெல்லாம் நடக்குதா!?//
இதெல்லாம் இல்லாமல் ஸ்கூலா? அதெப்படி வால்?

அன்புடன் அருணா said...

Kirukkan said...
//இதை படித்தவுடன் பள்ளி நினைவுகள் வந்தன.
பசுமை.......நன்றி.//
வாங்க கிறுக்கா ...முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

KParthasarathi said...
//eppadiyellam thappu vazhila poga moolai velai panradhu parunga.//
இதைவிட நிறைய இருக்கு..சார்...

அன்புடன் அருணா said...

நன்றி Karthik !!!
நன்றி ஆதிமூலகிருஷ்ணன் !!!!

அன்புடன் அருணா said...

சுசி said...
//நான் வந்த விஷயமே வேற மேடம். இதயப் பூக்கள்ல என் வாழ்த்துக்கள சொல்லீட்டாலும் நேரடியா வாழ்த்தும்போது கிடைக்கிற சந்தோஷமே தனி இல்ல. பிடீங்க பூங்கொத்த...//

வாங்க சுசி...முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!!

அன்புடன் அருணா said...

அபுஅஃப்ஸர் said...
//ஹா ஹா ரசிச்சேன் //
ரசிங்க...ரசிங்க...அதுக்குத்தானே எழுதறோம்!

அன்புடன் அருணா said...

சந்தனமுல்லை said...
/அவ்வ்வ்வ்...இந்த பழைய கால டெக்னிக்கை இன்னும் உயிரோட வச்சிருக்காங்களா..சூப்பர்!/
ம்ம்ம் இதையெல்லாம் நாமதானே ஆரம்பித்து வைக்கிறது!

அன்புடன் அருணா said...

R.Gopi said...
//ஆமாம்..... நீங்க சொல்லி கொடுத்தது சரியான விடைதானே டீச்சர்??//
அது தெரிஞ்சா இதை ஏன் எழுதிக்கிட்டு இருக்கேன்?

அன்புடன் அருணா said...

குடந்தை அன்புமணி said...
//காலங்கள் மாறினாலும் இந்த மாதிரி ஐடியாக்கள் இன்னும் வாழத்தான் செய்கின்றனபோலும்...//

வாங்க குடந்தை அன்புமணி...முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!

அன்புடன் அருணா said...

சப்ராஸ் அபூ பக்கர் said...
நான் மட்டும் தான் அப்படீன்னு பார்த்தா அங்கேயும் நம்ம பசங்க இருக்காங்களா?...

பசங்க எல்லா இடத்திலேயும் பசங்கதாங்க!

அன்புடன் அருணா said...

பிரியமுடன்.........வசந்த் said...
//http://www.tamilmalarnews.com/page4.pdf
your story published on minmalar
யக்கா கலக்குறீங்க........//
அட ! அப்பிடியா! எனக்கு இது தகவல் வசந்த்! நன்றி!

அன்புடன் அருணா said...

நன்றி.....புதுகைத் தென்றல்
நன்றி.....நாகை சிவா
நன்றி.....வினையூக்கி

அன்புடன் அருணா said...

சந்தனமுல்லை said...
// இதைவிட கொடுமை...ஒரு எறும்பை பிடிச்சு அது எது மேலே போய் நிக்குதோ அதை எழுதி வைக்குறது//
இது சூப்பர் ஐடியாவா இருக்கே!பசங்க கிட்டே சொல்லிடறேன்.

அன்புடன் அருணா said...

rajan RADHAMANALAN said...
//நீங்க டீச்சரா ?!!!//
அமாமா!

அன்புடன் அருணா said...

ஆ.ஞானசேகரன் said...
//ஓ இப்படியெல்லாம் நடக்குதுதா?//
ஆமாமா!

அன்புடன் அருணா said...

gils said...
//teecher kitaye bitta!!! //
அதானே!!

அன்புடன் அருணா said...

முரளிகுமார் பத்மநாபன் said...
//மேடம், எனக்கு விருதுகொடுக்கும் அளவிற்கு எந்த பெருமையும் இல்லாவிட்டாலும். என்னுடைய சந்தோசங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த விருதையும் உங்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன். //

அட அதுதானே முக்கியம்!

//சிலருக்கு இது உந்துசக்தியாக இருக்கலாம், சிலருக்கு வாழ்த்தாக இருக்கலாம் அல்லது சிலருக்கு கௌரவமாக இருக்கலாம்.//

எனக்கு இது பெரும் சந்தோஷம்!!!
//உங்களுடைய பதிவு "ரசனைக்குரிய பதிவு" //
நன்றி!.

//இது உங்கள் நண்பன் உங்களுக்காக கொடுத்த விருது.
மறக்காம அட்டாச்மென்ட்டில் படத்தை வெட்டி உங்க பதிவுல ஒட்டிகொள்ளுங்கள்.//
கண்டிப்பா!!

அன்புடன் அருணா said...

SanjaiGandhi said...
//இங்க்லிஷ்ல கேட்டா தமிழ்ல பதில்.. அப்டியே என்னை மாதிரியே.. :)//
அதுதானே வாலுப் பைய்ன்களோட ஸ்டைல்!!

federrer said...

hahaha.. flash back of my school days.. nandri aruna
Federrer engira makku paiyan

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா