நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, July 26, 2012

"மம்மிகோ போன் கர்லோ"!!!

                             அவள் சின்ன ரோஜாப் பூப்பந்து போல இருந்தாள். கூட வந்த  அவங்க ரெண்டு பேரையும் பார்த்தால் அவளின் அப்பாம்மா போலத் தெரியவில்லை.கொஞ்சம் வயதானவர்கள் போலத் தெரிந்தார்கள். மகளா எனக் கேட்டாலும், பேத்தியா எனக் கேட்டாலும் தப்பாகிவிடுமோ என்று இவள்? எனக் கேள்விக் குறியுடன் நிறுத்திக் கொண்டேன்
                        எங்க பொண்ணுதான் என்றவாறு உட்கார்ந்து கொண்டார்கள்.12 வருடம் கழித்துப் பிறந்தாள் என்று எடுத்த எடுப்பிலேயே என் சந்தேகங்களுக்கு விடை கொடுத்து விட்டார்கள்.கொஞ்சம் செல்லமா பொத்திப் பொத்தி வளர்த்துட்டோம்.அவளை விட்டுட்டுப் போக மனசேயில்லை....அதனால் இப்படி ஒரு ஓரமா அவ க்ளாஸ் ஜன்னல் பக்கமா உட்கார்ந்து அவ அழுகையை நிறுத்தியதும் போகட்டுமா? என்று கேட்டார்கள். கொஞ்சம் பாவமாகத்தானிருந்தது....ஆனாலும் அப்படி அனுமதிக்க முடியாதே என்று "இல்லையில்லை நீங்க கிளம்புங்க இங்க அவளை ரொம்ப நல்லா பார்த்துக்குவோம்னு அவர்களை அவளிடமிருந்து பிரித்தெடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
           பொண்ணு கதறிக் கதறி அழுதாள் இவர்கள் கதறாமல் அழுதார்கள் என்பதுதான் வித்தியாசம்.
           வேலை நடுவில் மறந்துவிட்டேன்.நினைவு வந்ததும் அந்தக் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டதா என cctv காமெரா மூலமாகப் பார்த்தால் பிங்க் நிற ரோஜா இப்போது சிவப்பு நிறமாகி விட்டிருந்தாள் அழுது அழுது....அச்சச்சோ என்று உடனே ஆயாம்மாவை அனுப்பி அழைத்து வந்தால் ஒரே கத்தல். சாக்லேட்,பொம்மை எதுக்கும் அடங்க மாட்டேங்கிறது என்று தகவல்.முதல் வேலையாக போனை எடுத்து அவங்க அம்மாவிடம் பேசுவது போல
"அச்சா ஆப் ஆரஹே ஹோ....பூஜா கோ ஆகே கர் லே ஜானா....ஜீ ஹான் வோ சுப் பைட்டி ஹை" ("ஓ நீங்க வரீங்களா...பூஜாவை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க.இப்போ அவ அழாமலிருக்கா")அப்படீன்னதும் சத்தம் மூச் இல்லாமல் அழுகை நின்றது.
        என் முன்னால் நாற்காலியில் உட்கார்ந்து விட்டாள். பத்து நிமிடத்துக்கு ஒரு முறை "மம்மிகோ போன் கர்லோ  மம்மிகோ போன் கர்லோ" என்பதுவும் நான் பொய்யாய் போன் போடுவதும் தொடர்ந்தது.
இது முதல் நாள்தானே என்று பார்த்தால் தினமும் "மம்மிகோ போன் கர்லோ மம்மிகோ போன் கர்லோ" என்று என்னை எங்கே பார்த்தாலும் "மம்மிகோ போன் கர்லோ மம்மிகோ போன் கர்லோ" என்று ஒரே அழுகை. இது முதல் வாரம்......முதல் மாதம் என்று தொடர்ந்தது.
                   அன்று ஊஞ்சலில் இருந்து விழுந்து நெற்றியில் காயப்படுத்திக் கொண்டாள். ரத்தத்துடன் வந்ததும் கொஞ்சம் பதறி
"இஸ்கா மம்மிகோ போன் கர்லோ" ( அவங்க அம்மாவும்மு போன் போடுங்க) என்றதும்
          "இஸ்பார் சச்சிமே போன் கர்லோ" ( இந்த தடவை நிஜமாலுமே போன் பண்ணுங்க) என்று பூஜா அழுகையினூடே சொன்னதும் கொஞ்சம் அதிர்ந்தும் அசந்தும் போய் நின்றேன். குட்டீஸ்கள்தான் எவ்வ்ளோ சமர்த்தா இருக்காங்கன்னு இன்னும் யோசித்துக் கொண்டே.............ம்ம்ம் நான்தான்!!!!!

11 comments:

வெங்கட் நாகராஜ் said...

சச்சி மே ஃபோன் கர்லோ..

என்ன ஒரு சாமர்த்தியம்...

இனிய பகிர்வுக்கு ஒரு பூங்கொத்து!

ராமலக்ஷ்மி said...

/அப்படீன்னதும் சத்தம் மூச் இல்லாமல் அழுகை நின்றது./

அழகாகக் கையாண்டிருக்கிறீர்கள். பூஜா கடைசியில் சொன்னது அதை விட அழகு! நல்ல பகிர்வு.

இராஜராஜேஸ்வரி said...

குட்டீஸ்கள்தான் எவ்வ்ளோ சமர்த்தா இருக்காங்க

நாம் தான் .....!!??

சாந்தி மாரியப்பன் said...

இந்தக்காலக் குழந்தைங்க ரொம்பவும் வெவரம்.. ஏமாத்த முடியாது :-))

அன்புடன் அருணா said...

அனைவருக்கும் நன்றி!

இரசிகை said...

mm.unmaithaan.

yellaamum purikirathu avarkalukku..
:)

rajamelaiyur said...

குழந்தை என்னை போல புத்திசாலின்னு நினைக்கிறேன்

rajamelaiyur said...

இன்று
இந்த செய்திகள் கண்டிப்பாக உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ...

A N A N T H E N said...

இந்தாங்க பூங்கொத்து பிடிங்க....

Unknown said...

ரொம்ப அருமையான பதிவுகளை போட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள் முடிஞ்ச என்கபக்கமும் வந்து போங்க

கவியாழி said...

குழந்தைகிட்டே ஒளிவு மறைவு இருக்காது.புத்திசாலிக்குழந்தை

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா