நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, December 12, 2010

தமிழில் சிறுகதை எழுத ஆர்வமுள்ளவர்களா????

ன்றைக்கு நம்மில் மாற்றுத்திறனாளிகள் பலர் பல்வேறு சாதனைகளை செய்து புகழ்படைத்துள்ளார்கள். அவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக மதுரையை சேர்ந்த 'அதிதி'( அன்னை திறனேற்ற பயிற்சி திண்ணை) என்ற அமைப்பு தமிழ்சிறுகதை ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்துள்ளது.
மாற்று திறனாளிகள் மறுவாழ்வு பற்றிய விழிப்புணர்வு வளரும் நோக்கத்துடன் இந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு   -'இறைவன் கொடுப்பது ஒரு வாழ்வு, மனிதன் கொடுப்பது மறுவாழ்வு'தேர்வு செய்யப்படும் சிறந்த 3 சிறுகதைகளுக்கு பரிசும், பாராட்டும் வழங்கவுள்ளது இந்த அமைப்பு.
மேலும் இது பற்றிய விபரங்களுக்கு
வி.ஆர்.கணேஷ்.
நிர்வாக இயக்குநர்,
அன்னை திறனேற்ற பயிற்சி திண்ணை.
93441 25161 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இயற்கையாகவே மனிதருக்கு இரங்கும் சிந்தனை கொண்டவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு உஙகள் திறனை வெளிக்கொண்டு வரலாம். எடுங்கள் பேனாவை, எழுதுங்கள் உங்கள் மனவோட்டத்தை.......நன்றி!
நன்றி....விபரங்களுக்கு....

8 comments:

நேசமித்ரன் said...

பகிர்வுக்கு நன்றிங்க .

pichaikaaran said...

நல்ல எண்ணம்
நல்ல செயல்

ராமலக்ஷ்மி said...

பகிர்வுக்கு நன்றி அருணா.

Philosophy Prabhakaran said...

நல்லது.... ஆனால் எனக்கு சிறுகதை எழுத தெரியாது...

காமராஜ் said...

பகிர்வுக்கு நன்றி அருணா.

மாணவன் said...

தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

Unknown said...

நல்ல விசயம்..

அன்புடன் அருணா said...

அனைவருக்கும் நன்றி!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா