நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, May 8, 2010

எங்க ஊரு பசங்க-3

யூனிஃபார்ம் ஏண்டா சரியா போடலை ????இது கேள்வி...
பசங்க சும்மா பூந்து விளையாடுற ஏரியாவாச்சே????விடுவாங்களா????
பதில்கள்....
"மேம்....காலைலே கிளம்பும் போது பார்த்து சட்டை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு கிழிஞ்சுருச்சு மேம்.........."

"காலைலே டேபிள் மேலதான் வச்சேன் கிளம்பும் போது பார்த்துக் காணோம் மேம்............."

"மேம் ஷூ காலை நறுக்க்னு கடிச்சுடுச்சு மேம்..."

"டையை அப்பா கேஸ் சிலிண்டர் கட்டி எடுத்துட்டுப் போனாங்க மேம்...அப்புறமா திரும்பிக் கொண்டாரவேயில்லை!:

"ஸ்கூல் பேட்ஜ்தானே மேம்...இப்போ காட்டுறேன்....ஊக்கு கிடைக்கலியா பேட்ஜைத் திருப்பிப் போட்டு சட்டைக்கு ஊக்காக்கிட்டேன்!"

"ஐடி கார்ட்தானே மேம்...எங்க அப்பா அவரோட ஐ.டி கார்டைத் தொலைச்சுட்டாங்க.... அதான் ரெண்டு நாளா என்னோடதைப் போட்டுட்டுப் போறாங்க!"

Why nails are long?இது கேள்வி!
இதென்ன மேம் பெரிசு...எங்கம்மா நெயில் பார்க்கணுமே இத மாதிரி மூணு மடங்கு
நீளமாக்கும்.

Why didn't you go for a haircut ?

மேம் திங்கள் அம்மா போகக் கூடாதுன்னுட்டாங்க....செவ்வாய் அப்பா போகக் கூடாதுன்னுட்டாங்க....புதன் வியாழன் தாத்தா பாட்டிக்காக போகலை....வெள்ளி எனக்கே போகப் பிடிக்கலை!சனிக்கிழமை கடைக்காரனுக்கு நான் வர்றது பிடிக்கலை...கடையை மூடிட்டுப் போயிட்டான் ...ஞாயிற்றுக் கிழமை நான் எந்த வேலையும் செய்யறதில்லே!

ஙே!!

27 comments:

பத்மா said...

அட்டகாசம் .நம்ம பசங்க நம்ம பசங்க தான் .
இது போல் நம்ம இடுகைய ஏன் படிக்கலன்னு கொஞ்சம் நண்பர்கள்கிட்ட கேட்டு பாத்தா அப்போ வரும் பாருங்க பதில் ?
எல்லாரும் மன்னன்க தான் பா

kaamaraj said...

நம்ம ஊருப்பசங்க உன்மையிலே புகுந்து விளையாட்றாங்க அருணா.சிலிண்டரைக்கட்டித்தூக்குவதற்கு,அந்த கழுத்துப்பட்'டை'
பயன்படுங்ற த கண்டுபிடிச்சது நம்ப பசங்க தான.

ஒரு சோலோ பூ.
வாழ்த்துக்கள் மேம்.

Chitra said...

Why didn't you go for a haircut ?

மேம் திங்கள் அம்மா போகக் கூடாதுன்னுட்டாங்க....செவ்வாய் அப்பா போகக் கூடாதுன்னுட்டாங்க....புதன் வியாழன் தாத்தா பாட்டிக்காக போகலை....வெள்ளி எனக்கே போகப் பிடிக்கலை!சனிக்கிழமை கடைக்காரனுக்கு நான் வர்றது பிடிக்கலை...கடையை மூடிட்டுப் போயிட்டான் ...ஞாயிற்றுக் கிழமை நான் எந்த வேலையும் செய்யறதில்லே!


.....அசத்தல் reply - ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

*இயற்கை ராஜி* said...

ம்ம்.. இதே மாதிரி ஏண்டா லேட் ஆச்சுன்னு ஒரு கேள்வி இருக்கு... எதேதோ சொல்லி நம்மள சுத்தல்ல விட்டுடுவாங்க‌:-)

செ.சரவணக்குமார் said...

பசங்க அட்டகாசம் சூப்பர். மிக ரசித்தேன். உங்க ஆசிரியர் வாழ்க்கையை அழகாக்குறதே இந்தப் பசங்கதானே மேம்?

கார்க்கிபவா said...

ஹிஹிஹி..

முடி வெட்ட கூடாது. “தலயே” வெட்டனும் :))

சாந்தி மாரியப்பன் said...

நேத்து ஏண்டா லீவுன்னு கேட்டுப்பாருங்க, விதவிதமா பதில் வரும் :-)))))

//"ஐடி கார்ட்தானே மேம்...எங்க அப்பா அவரோட ஐ.டி கார்டைத் தொலைச்சுட்டாங்க.... அதான் ரெண்டு நாளா என்னோடதைப் போட்டுட்டுப் போறாங்க!"//

:-)))))))))

ஜெய்லானி said...

நம்மகிட்டேவா ? அசத்திட மாட்டோம் அசத்தி.

:-))))))))))))))

அன்புடன் அருணா said...

padma said...
/
இது போல் நம்ம இடுகைய ஏன் படிக்கலன்னு கொஞ்சம் நண்பர்கள்கிட்ட கேட்டு பாத்தா அப்போ வரும் பாருங்க பதில் ?
எல்லாரும் மன்னன்க தான் பா /
இப்பிடில்லாம் வேற கேப்பீங்களா?????!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) nalla comedy

பாச மலர் / Paasa Malar said...

பசங்க பசங்கதான்...

மாதேவி said...

அசத்தராங்க :)

அம்பிகா said...

பசங்க பசங்கதான்...

ஐ.டி கார்டு.., டை..,

சூப்பர் பதில்கள்.

VELU.G said...

சும்மா சும்மா கேள்வி கேட்காதீங்க

உண்மையெல்லாம் சொல்ல வேண்டி வருதில்ல

Madumitha said...

பசங்கக்கிட்டப்
பத்து நிமிஷம்
பேசினா
நிச்சயம்
நூறு கதைக்
கிடைக்கும்.

இரசிகை said...

pasanga........:))

Priya said...

பசங்க பசங்கதான்... அவங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியுமா!

அன்புடன் அருணா said...

ஒரு சோலோ பூவுக்கு நன்றி காமராஜ்.
நன்றி T.V.ராதாகிருஷ்ணன்
நன்றி Chitra

அன்புடன் அருணா said...

ஆமாமா*இயற்கை ராஜி* !

செ.சரவணக்குமார் said...
/ உங்க ஆசிரியர் வாழ்க்கையை அழகாக்குறதே இந்தப் பசங்கதானே மேம்?/
அழகா????ஸ்வாரஸ்யமாகுறதே அவங்கதான்!

கார்க்கி said...
/முடி வெட்ட கூடாது. “தலயே” வெட்டனும் :))/
ஆஹா...கார்க்கி இங்கேயும் தலயா????ஏதோ உள்குத்து போலத் தெரியுதே!!!!!!!

Thamira said...

உங்க வேலை ரொம்ப சுவாரசியமானதுதான் இல்ல.? :-))

அன்புடன் அருணா said...

நன்றி அமைதிச்சாரல்
நன்றி ஜெய்லானி

Thenammai Lakshmanan said...

நானும் ஙே ஆயிட்டேன் அருணா,,,:))

Anonymous said...

hahahahaha..

cheena (சீனா) said...

அன்பின் அருணா

அருமையன கேள்வி பதில் - வி.வி.சி - அட்டகாசம் போங்க

நல்வாழ்த்துகள் அருணா
நட்புடன் சீனா

முனைவர் இரா.குணசீலன் said...

ஙே!!

Sanjai Gandhi said...

எல்லாரும் என்னை மாதிரியே சமத்துப் பசங்க போல :))

ஆடுமாடு said...

நம்ம பயலுவோ விவரமானவனுவோ

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா