நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, April 10, 2009

அஹம் சாத்தானாஸ்மி!!!



நான் எனும் அகம்பாவம் தலைக்கேற கண்மண் தெரியாமல் நடந்து கொள்ளும் போது நான்...
அஹம் சாத்தானாஸ்மி!!!

என் ப்ரொஃபெஷனைப் பற்றி யாராவது தப்பாப் பேசினால் என்ன ஏதுன்னு கேட்பதற்கு முன்னால் கோபத்தில் கொதிக்கும் போது நான்......
அஹம் சாத்தானாஸ்மி!!!

நான் வேலை பார்க்குமிடத்தில் யாரையாவது எம்.டி புகழ்ந்து பேசினால் உடனே பொறாமையில் துடிக்கும் போது நான்...
அஹம் சாத்தானாஸ்மி!!!

எனக்கு மிகவும் பிரியமானவர்களிடம் வேறு யாராவது ஒட்டி உறவாடுவது பிடிக்காமல் தவிக்கும் போது நான் .....
அஹம் சாத்தானாஸ்மி!!!

சுறு சுறுவென்று கோபம் தலைக்கேறும்போது என்ன செய்கிறேன் என்று தெரியாமல்
கத்தும் போது நான்...
அஹம் சாத்தானாஸ்மி!!!

தப்புச் செய்தவங்களை மன்னிக்க முடியாமல் திணறும்போது நான்
அஹம் சாத்தானாஸ்மி!!!

தப்பு என்று தெரிந்தும் சில விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்ய முனையும் போது நான்
அஹம் சாத்தானாஸ்மி!!!

இதுவரைக்கும் எந்த சமயத்திலும் எந்த உயிருக்கும் தீங்கு மனதாலும் நினைக்காத நான்
அஹம் பிரம்மாஸ்மி!!!


நான் சாத்தானிடம் கேட்டேன்
நான் நல்லவளா? கெட்டவளா?

நான் கடவுளிடமும் கேட்டேன்
நான் நல்லவளா? கெட்டவளா?

கடவுளும் சாத்தானும் சந்தித்து
ஒருவரையொருவர் கேட்டது....
இவள் நல்லவளா? கெட்டவளா??

டிஸ்கி :
அஹம் பிரம்மாஸ்மி-- நான் கடவுள்
அஹம் சாத்தானாஸ்மி--நான் சாத்தான்
சரிதானே???

63 comments:

Rajeswari said...

super..

Rajeswari said...

டிஸ்கி :
அஹம் பிரம்மாஸ்மி-- நான் கடவுள்
அஹம் சாத்தானாஸ்மி--நான் சாத்தான்
சரிதானே??? //

சரிதாங்க..அதெப்படி நீங்க சொல்லி சரி இல்லாம போகும்,

Rajeswari said...

அருணாவுக்கு,அன்புடன் முந்திய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

சி தயாளன் said...

ஏன் மேடம் ஏன் என்னாச்சு...?

ராமலக்ஷ்மி said...

என்னங்க கவிதை இது? சும்மா மிரட்டுறீங்களே? நல்லாயிருக்கு.

Maddy said...

அடே! பெரிய ஆளுங்க நீங்க!! சாமிக்கும் சாத்தனுக்குமே சண்டை முடியறீங்களே

sakthi said...

அஹம் பிரம்மாஸ்மி-- நான் கடவுள்
அஹம் சாத்தானாஸ்மி--நான் சாத்தான்
சரிதானே???

neenga sonna sarithan

Rajan said...

poooooooooongothu.........!!!!!!!!!!

அன்புடன் அருணா said...

Rajeswari said...
//சரிதாங்க..அதெப்படி நீங்க சொல்லி சரி இல்லாம போகும்,//

அட இவ்வ்ளோ நம்பிக்கையா என்மேல???நடத்துங்க....நடத்துங்க!!!

அன்புடன் அருணா said...

Rajeswari said...
/அருணாவுக்கு,அன்புடன் முந்திய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்!!//
உங்களுக்கும் அதே அன்புடன் வாழ்த்துக்கள்!!!!

கோபிநாத் said...

விடுங்க..விடுங்க..கடைசி வரையில் கேள்வி தான்!

பதிலே இல்ல.!

dharshini said...

அப்பப்ப நானும் அஹம் சாத்தானாஸ்மி ஆயிடறேன் என்ன செய்ய?
நல்லா இருக்கு...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். :)

Thamiz Priyan said...

எனக்கு இப்ப பயமா இருக்கு.

கார்க்கிபவா said...

ரைட்டு. சாத்தன்கள் கூட எனக்கென்ன பேச்சு? :))))

Mohan R said...

Sollunga unmaiyila nallavala kettavala.

Nayagan padam madhiri sollama mudikatheenga :)

Note: Idhu palaya nayagan padam :D

பாச மலர் / Paasa Malar said...

கடவுள் பாதி...சாத்தான் பாதி கலந்து செய்த கலவை நாம்..இப்படி வச்சுக்கலாமா..

MSK / Saravana said...

ரொம்ப சரி.. :)

ஆ.சுதா said...

டிஸ்கி :
அஹம் பிரம்மாஸ்மி-- நான் கடவுள்
அஹம் சாத்தானாஸ்மி--நான் சாத்தான்
சரிதானே???

சரியாதான் இருக்குமோ?!

அன்புடன் அருணா said...

’டொன்’ லீ said...
//ஏன் மேடம் ஏன் என்னாச்சு...?//

அச்சச்சோ எனக்கு ஒண்ணும் ஆகலைப்பா...எல்லோர் மனதிலும் அப்பப்போ இப்படி ஒரு சாத்தான் இருப்பது உண்மைதானே டொன்'லீ????

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
//என்னங்க கவிதை இது? சும்மா மிரட்டுறீங்களே? நல்லாயிருக்கு.//

மிரட்டுனாக் கூட பிடிக்குதுன்னு சொல்றீங்களே!!! நீங்க ரொம்ப நல்லவங்க ராமலக்ஷ்மி!!!!

ஆயில்யன் said...

//எனக்கு மிகவும் பிரியமானவர்களிடம் வேறு யாராவது ஒட்டி உறவாடுவது பிடிக்காமல் தவிக்கும் போது நான் .....
அஹம் சாத்தானாஸ்மி!!!//

இது ரியல் சாத்தானாஸ்மிதான் :)

அன்புடன் அருணா said...

Maddy said...
//அடே! பெரிய ஆளுங்க நீங்க!! சாமிக்கும் சாத்தனுக்குமே சண்டை முடியறீங்களே//

சாமான்யத்திலே அவர்கள் சந்திப்பதில்லையே Maddy!!!

அன்புடன் அருணா said...

sakthi said...
//neenga sonna sarithan//
அட இவ்வ்ளோ நம்பிக்கையா என்மேல???

அன்புடன் அருணா said...

rajan RADHAMANALAN said...
//poooooooooongothu.........!!!!!!!!!!//

vaaaaaaaaaaaaaaaaaaaangittEn!!!!!!!!!!!

அன்புடன் அருணா said...

கோபிநாத் said...
//விடுங்க..விடுங்க..கடைசி வரையில் கேள்வி தான்!
பதிலே இல்ல.!//

உண்மைதான் கோபிநாத்!!! பதில் தெரிந்தால் வாழ்வின் ஸ்வாரஸ்யம் போய்விடுமே!!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு..
சாத்தானிடம் கேட்டப்ப கெட்டது நிறைய செய்தா நல்லவள்ன்னு சொல்லி இருக்கும் சரியா ..கேட்டு சொல்லுங்க ..:)

அன்புடன் அருணா said...

dharshini said...
//அப்பப்ப நானும் அஹம் சாத்தானாஸ்மி ஆயிடறேன் என்ன செய்ய?
//

அட? இதிலென்ன இருக்கு???எல்லோரும் அப்பப்போ சாத்தானாஸ்மி ஆகுவாங்க தர்ஷிணி!!!

அன்புடன் அருணா said...

தமிழ் பிரியன் said...
//எனக்கு இப்ப பயமா இருக்கு.//

யாரைப் பார்த்து தமிழ்பிரியன்????என்னைப் பார்த்தா?? சாத்தானைப் பார்த்தா???

நாகை சிவா said...

அக்னி ஆரம்பிச்சுட்டான் போல் ;)))

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
//ரைட்டு. சாத்தன்கள் கூட எனக்கென்ன பேச்சு? :))))//

அடப்பாவி!!!என்னைச் சாத்தான்னு முடிவே பண்ணிட்டியா கார்க்கி????

அன்புடன் அருணா said...

இவன் said...
//Sollunga unmaiyila nallavala kettavala.
Nayagan padam madhiri sollama mudikatheenga :)//

சொல்லிட்டா படம் முடிஞ்சுருமே இவன்????

அன்புடன் அருணா said...

பாச மலர் said...
//கடவுள் பாதி...சாத்தான் பாதி கலந்து செய்த கலவை நாம்..இப்படி வச்சுக்கலாமா..//

எல்லோர் மனசுலேயும் கடவுள் பாதி...சாத்தான் பாதி...இதுதானே உண்மை பாசமலர்????

Tech Shankar said...

புதுசு புதுசா - உக்காந்து யோசிப்பீங்களோ..

Divya said...

பதிவு அருமை:)

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்புடன் அருணா said...

Saravana Kumar MSK said...
//ரொம்ப சரி.. :)//

அப்பாடா நேரம் கிடைச்சதா?ரொம்ப நாளைக்கப்புறம் வருகை...நன்றி சரவணா!

அன்புடன் அருணா said...

ஆ.முத்துராமலிங்கம் said...
//சரியாதான் இருக்குமோ?!//
ம்ம்ம்...சரிதான்!!!

அன்புடன் அருணா said...

ஆயில்யன் said...
//இது ரியல் சாத்தானாஸ்மிதான் :)//

அட இதுலெ வேற ரியல் சாத்தானாஸ்மி
ஆர்ட்டிஃபிஷியல் சாத்தானாஸ்மின்னு இருக்கா என்ன???

pudugaithendral said...

கடவுள் பாதி...சாத்தான் பாதி கலந்து செய்த கலவை நாம்..இப்படி வச்சுக்கலாமா..//

எல்லோர் மனசுலேயும் கடவுள் பாதி...சாத்தான் பாதி...இதுதானே உண்மை பாசமலர்???//

ரிப்பீட்டிக்கறேன். (அடிக்கடி சேம் பளட் போட முடியலை) :))

மேவி... said...

super....

kadasi matter thaan top

Karthik said...

எல்லாருமே இப்படித்தான் அப்பப்ப இருக்கோம். உண்மைதான்.

//நான் நல்லவளா? கெட்டவளா?

ரிசல்ட் வந்தப்புறம் உங்க ஸ்டுடென்ஸ கேளுங்க மேம். :))

அன்புடன் அருணா said...

தமிழ்நெஞ்சம் said...
//புதுசு புதுசா - உக்காந்து யோசிப்பீங்களோ..//

வேற வேலை???????ஹாஹாஹாஹா!!

அன்புடன் அருணா said...

முத்துலெட்சுமி-கயல்விழி said...
//நல்லா இருக்கு..
சாத்தானிடம் கேட்டப்ப கெட்டது நிறைய செய்தா நல்லவள்ன்னு சொல்லி இருக்கும் சரியா ..கேட்டு சொல்லுங்க ..:)//
அட நான் இதை யோசிக்கலியே???

அன்புடன் அருணா said...

நாகை சிவா said...
//அக்னி ஆரம்பிச்சுட்டான் போல் ;)))//

ஆமாமா....அக்னி தன் வித்தையைக் காட்டாதா பின்னே???

அன்புடன் அருணா said...

Divya said...
//பதிவு அருமை:)//

வாங்க திவ்யா!! அடிக்கடி வாங்க!!

அன்புடன் அருணா said...

கடையம் ஆனந்த் said...
//:)//

அவ்வ்ளோதானா???:((

அன்புடன் அருணா said...

MayVee said...
//super....
kadasi matter thaan top//

அதுசரி...அதுதான் எல்லோருக்கும் புடிச்சுருக்குப்பா!!!

அன்புடன் அருணா said...

Karthik said...

//ரிசல்ட் வந்தப்புறம் உங்க ஸ்டுடென்ஸ கேளுங்க மேம். :))//

அவ்வ்ளொதானா???அட அப்படீன்னா நான் நல்லவள்தான்!!!

Anonymous said...

சூப்பர்..
எல்லாரும் அப்படியே! ;)

காமராஜ் said...

நம்மை நாமே சுத்திகரிப்பதற்கு
அருணா மேடம் கொடுக்கும் டிப்ஸ்.
துருப்பிடிக்கிற சிந்தனைகளை
கொஞ்ச நேரம் ஊரப்போடுகிற
கெரசின் இது.நம்மை நாமே சுத்திகரிப்பதற்கு
அருணா மேடம் கொடுக்கும் டிப்ஸ்.
துருப்பிடிக்கிற சிந்தனைகளை
கொஞ்ச நேரம் ஊரப்போடுகிற
கெரசின் இது.

அன்புடன் அருணா said...

பதுமை said...
//சூப்பர்..
எல்லாரும் அப்படியே! ;)//

நீங்க ரொம்ப சரியாப் புரிஞ்சுருக்கீங்க பதுமை!!!

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
//நம்மை நாமே சுத்திகரிப்பதற்கு
அருணா மேடம் கொடுக்கும் டிப்ஸ்.
துருப்பிடிக்கிற சிந்தனைகளை
கொஞ்ச நேரம் ஊரப்போடுகிற
கெரசின் இது//

அப்பிடில்லாம் யோசிச்சுக் கொடுக்கலீங்க!!!ஆனாலும் என்னை நானே கண்டிப்பாக அனலைஸ் செய்து கொண்டென்....

Tech Shankar said...

ஒரு பதிவைப் போட்டு 50 பின்னூட்டங்களைக் கடந்தால்தான் அடுத்த பதிவினை எழுதுவீங்களோ?

இந்த ரகசியம் இம்புட்டு நாட்களாக எனக்குத் தெரியாமல் போச்சே!

geevanathy said...

அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்
கடவுளுக்கும்,சாத்தானுக்கும் நடுவிலான மனிதமனவோட்டத்தை...

அன்புடன் அருணா said...

தமிழ்நெஞ்சம் said...
//இந்த ரகசியம் இம்புட்டு நாட்களாக எனக்குத் தெரியாமல் போச்சே!//

அட கண்டுபுடிச்சுட்டீங்களே??இன்னொரு ரகசியமும் உங்களுக்குத் தெரியாது இதிலே சரி பாதி கமென்ட் என்னுடையதுதான்!!!!

geevanathy said...

சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள் கடவுளுக்கும் ,சாத்தானுக்கும் நடுவிலான வாழ்வினை

தேவன் மாயம் said...

நான் வேலை பார்க்குமிடத்தில் யாரையாவது எம்.டி புகழ்ந்து பேசினால் உடனே பொறாமையில் துடிக்கும் போது நான்...
அஹம் சாத்தானாஸ்மி!!!///
அருமை அருணா!!! இவை எல்லோரிடமும் உள்ள சாத்தான்கள்தான்!!

தேவன் மாயம் said...

பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க///

இந்தாங்க!! நல்ல உண்மை வெளிப்பாடு!!

அன்புடன் அருணா said...

த.ஜீவராஜ் said...
//அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்
கடவுளுக்கும்,சாத்தானுக்கும் நடுவிலான மனிதமனவோட்டத்தை...//
ரொம்ப நன்றி ஜீவராஜ்!!! ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க...அடிக்கடி வாங்க!!!

ny said...

உங்களுக்கு கொஞ்ச காலமா
பின்னூட்டம் இடாததால்
நான் அஹம் சாத்தானாஸ்மி !!
அவ்வாறே நீங்களும்!!

ha ha!! வணக்கங்க...

அன்புடன் அருணா said...

thevanmayam said...
//அருமை அருணா!!! இவை எல்லோரிடமும் உள்ள சாத்தான்கள்தான்!!//

அப்பாடா இப்போ கொஞ்சம் நிம்மதியாயிருக்கு!!!

பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க///
//இந்தாங்க!! நல்ல உண்மை வெளிப்பாடு!!//
கொடுங்க!! கொடுங்க!!!

அன்புடன் அருணா said...

kartin said...
//உங்களுக்கு கொஞ்ச காலமா
பின்னூட்டம் இடாததால்
நான் அஹம் சாத்தானாஸ்மி !!
அவ்வாறே நீங்களும்!!//

ha ha!! வணக்கங்க...
அடடா வணக்கம்...வணக்கம்...
ok...equation balanced now!!!!!! ok??

sri said...

neenga nallavangala ketavangala.. ton ta ton to ta twyn.. toda twy - enna parkeenga BGM

அன்புடன் அருணா said...

Srivats said...
//neenga nallavangala ketavangala.. ton ta ton to ta twyn.. toda twy - enna parkeenga BGM//

ஆஹா..BGM சூப்பர்!!!!
அன்புடன் அருணா

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா