இரவு கொட்டும் மழையில்
உதிர்ந்திருக்கக் கூடுமோ
என மழை நீரில் கைகளால் அளைந்து தேடிக்
கொண்டிருந்தேன் நடசத்திரங்களை....
கொஞ்சம் தள்ளி சல்லடை வைத்து
மழைநீரில் நட்சத்திரங்களை வடிகட்டிக்
கொண்டிருந்தாள் மகள்....
மழை இழுத்துக் கொண்டு வந்த
தற்காலிக நதிகளின் சங்கமத்தில்
திடீரென முளைத்த கால்களுடன்
ஓடும் உதிர் இலை மலர்க் கூட்டத்துடன்
கூட்டமாக நானும் இழுபடுவது தெரியாமலேயே
இழுபட்டுக் கொண்டிருந்தேன்....
எப்போதும் போல் மழை அது பாட்டுக்குப்
பெய்து கொண்டிருந்தது....
இழுபடும் மலர்க்கூட்டம் அது பாட்டுக்கு
இழுபட்டுக் கொண்டிருந்தது....
இழுபட்டுக் கொண்டிருக்கும் நான் மட்டும்
ரொம்ப நாளைக்கு அப்புறமாய் இங்கே
எட்டிப் பார்த்துக் கொண்டு!!.....
மழையுடன் நான்.....!!!
6 comments:
அருமை.
அடிக்கடி வாருங்கள்.
வணக்கம்..!
Migavum arumai.....
வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_18.html?showComment=1411012022369#c8444431922796668986
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரி!
இன்றைய வலைச்சர அறிமுகத்தில் உங்களைக் கண்டு வந்தேன்!
கொட்டும் மழையில் உதிர்ந்த நட்சத்திரத்தைத்
துளாவித் தேடுகிறேன்... அட..அட...மிக மிக அற்புதமான கற்பனை!
ரொம்பவே ரசித்தேன்! வாழ்த்துக்கள்!
எங்க போய்ட்டீங்க எல்லாரூம் ...
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா