நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, November 3, 2010

இதுலெ இருநூறு அதுலெ முன்னூறு!!!

இதுலெ இருநூறு அதுலெ முன்னூறு....
150 வரைக்கும் இதுலெ நூறுன்னா அதுலேயும் நூறுன்னும் ,இதுலே நூற்றியம்பதுன்னா அதுலேயும் நூற்றியம்பதுன்னும் இருந்தது.திடீர்னு இந்த ரேஷியோ மாறிப் போச்சு!.
                       பதிவு எண்ணிக்கையையும்,பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையையும் சொல்றேன்.இப்போ 200 பதிவுக்கு முன்நூறு பின் தொடர்பவர்கள்!சரி நம்ம எழுதறதைக் கொறைச்சுட்டோம்!!! நம்மளைப் படிக்கிறவங்க கூடிட்டாங்க போல!!!!
முன்னூறு பேருக்கும் நன்றி!!!!
இன்னும் கொஞ்சம் எழுதறதைக் குறைச்சா இன்னும் நிறையப் பேர் பின் தொடர்வாங்களா???

20 comments:

நட்புடன் ஜமால் said...

இன்னும் கொஞ்சம் எழுதறதைக் குறைச்சா இன்னும் நிறையப் பேர் பின் தொடர்வாங்களா???]]

அட! இது தான் இரகசியமா ...

KParthasarathi said...

பதிவுகளின் எண்ணிக்கைகளுக்கும் பின் தொடர்பவர்களின் கூட்டத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக தோனவில்லை.உங்களின் எழுத்தாற்றல் தான் எங்களை எல்லாம் உங்கள் ப்ளாகிற்கு
வரத்தூண்டுகிறது நீங்கள் நிறைய எழுதவேண்டும் என்பதுதான் என் அவா. .

ராமலக்ஷ்மி said...

இருநூறுக்கும் முன்னூறுக்கும் இனிய வாழ்த்துக்கள் அருணா:)!

Philosophy Prabhakaran said...

முன்னூறுக்கு வாழ்த்துக்கள்... அந்த மேட்டர வச்சி ஒரு பதிவு போட்டுட்டீங்களே... u r great...

Anonymous said...

வாழ்த்துக்கள் அருணா! :)

துளசி கோபால் said...

அட! இப்படியெல்லாம் இருக்கா!!!!!!!

200 & 300க்கு வாழ்த்து(க்)கள்.

சாந்தி மாரியப்பன் said...

200-க்கும் 300-க்கும் வாழ்த்துக்கள்..

cheena (சீனா) said...

அன்பின் அருணா - இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் - 200க்கும் 300க்கும் பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் . நட்புடன் சீனா

சகாதேவன் said...

இதிலே இருநூறு, அதிலே முன்னூறு என்றதும் நீங்கள் தீபாவளிக்கு ஸ்வீட் வாங்க கடைக்குப் போய் கிலோ விலை கேட்டதும் ஜிலேபி இருநூறு கிராம், அல்வா முன்னூறு கிராம் போடுங்கன்னு சொல்லி வாங்கி வந்ததை சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன். நான் ஒரு ஐநூறு கிராம் அல்வா அனுப்பி வைக்கவா? தீபாவளி வாழ்த்துக்கள்.
சகாதேவன்

Karthik said...

வாழ்த்துக்கள் மேம்! :)

Chitra said...

200 - 300 - Congratulations!!!


HAPPY DEEPAVALI!

sathishsangkavi.blogspot.com said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இரட்டை வாழ்த்துக்கள்.. இரண்டு பூங்கொத்துக்கள்..
:)

ஹுஸைனம்மா said...

நானும் ஏதோ கடையில பேரம் பேசுனதச் சொல்லப்போறீங்கன்னு பாத்தா... பின்தொடர்பவர்களும், பதிவுகளும் அந்த ரேஞ்சில் ஆகிப்போச்சா!! வாழ்த்துகள்!!

பெரிய பெரிய மகான்களெல்லாம் சுருக்கமாத்தான் பேசுவாங்க; ஆனா அவங்களுக்குத்தான் ஃபாலோயர்ஸ் நிறைய இருப்பாங்க. அந்த ஃபார்முலாவா இதுவும்?? ;-))

priya.r said...

priya.r said...
அருணா ! இந்த பதிவு தங்களுடைய 200 பதிவு என்று நினைக்கிறேன் ;நல்ல பகிர்வு

வாழ்த்துக்கள் ! மேலும் வளர எல்லாம் வல்ல இறைநிலை அருள் புரியட்டும் !

25 பதிவுக்கே பில்ட் அப் செய்யும் எங்களை போன்றோர்க்கு உங்களின் ஆரவாரமில்லாத சாதனை
வியக்க வைக்கிறது !

இதோ உங்களுக்கு 200 பூங்கொத்துக்கள் !!

November 2, 2010 5:22 PM
அன்புடன் அருணா said...
அடடா! இருநூறா????பதிவு போட்டுற வேண்டியதுதான்!!!!
/உங்களின் ஆரவாரமில்லாத சாதனை
வியக்க வைக்கிறது ! /
அட! நீங்க வேற! கணக்கு மறந்து போச்சு!
ஆனா உங்களுக்கெப்பிடி இது இருநூறாவது பதிவுன்னு தெரிஞ்சுது?தெரியப் படுத்தியதுக்கு நன்றியோ நன்றி!
பூங்கொத்துக்கு நன்றி பிரியா!

November 2, 2010 8:34 PM அந்த பதிவில் பின்னூட்டம் போடுவதை விட இந்த பதிவில்
பதில் போடுவது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்

ஹி ஹீ இது தான் 200 ஆவது பதிவை கண்டு பிடித்த கணக்கு அருணா
▼ 2010 (50) கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!-
► 2009 (79)
► 2008 (52)
► 2007 (19)
என்ன ! கண்டுபிடித்து சொன்ன எனக்கு சின்னதா வைர நெக்லேஸ் கொடுத்து கௌரவிக்க போறீங்களா!!

ப்ளீஸ் வேண்டாம் அருணா ! உங்க பாசமே போதுமே !!ஹ ஹா

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால் said...
/ அட! இது தான் இரகசியமா .../
அட!நான் நினைச்சுட்டிருக்கேன் அப்படி!!
KParthasarathi said...
/.உங்களின் எழுத்தாற்றல் தான் எங்களை எல்லாம் உங்கள் ப்ளாகிற்கு வரத்தூண்டுகிறது நீங்கள் நிறைய எழுதவேண்டும் என்பதுதான் என் அவா. ./
அட! எழுதிரலாம்!
நன்றி ராமலக்ஷ்மி !

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி
philosophy prabhakaran
Balaji saravana
துளசி கோபால் அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

நன்றி அமைதிச்சாரல்
நன்றி cheena (சீனா)
சகாதேவன் said...
/நான் ஒரு ஐநூறு கிராம் அல்வா அனுப்பி வைக்கவா? தீபாவளி வாழ்த்துக்கள்./
அல்வாவோடு தீபாவளியா??தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

Karthik
Chitra
சங்கவி
முத்துலெட்சுமி/muthuletchumi அனைவருக்கும் நன்றி!

காமராஜ் said...

மேடம் 200 க்கும், முன்னூறுக்கும் வாழ்த்துக்கள்.சரி கவிதையாக இருக்கும் சாவகாசமாகப்படித்துக்கொள்ளலாம் என்றிருந்தேன்.இது மைல் கல்.வாழ்த்துக்கள் மேடம்.

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா