நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, July 28, 2011

எழுத ஆசைப்படுறவங்கல்லாம் எழுதுங்கப்பா!!

1.நீங்கள் விரும்பும் 3 விஷயங்கள்.
நிறைய இருக்குப்பா!
இரவு நேர மொட்டைமாடியில் பாட்டு,
சாரலடிக்கும் மழை,
நீண்ட பயணம் !

 
2. விரும்பாத 3 விஷயங்கள்:
முடியவே முடியாத சீரியல்கள், காலை நேரத்து அலார்ம், மீட்டிங் நடுவில் வித விதமான பாடலுடன் ஒலிக்கும் மொபைல் ஃபோன்...

3. பயப்படும் 3 விஷயங்கள்:
பல்லி,உயரம்,ஹாஸ்பிடல்

4. உங்களுக்குப் புரியாத 3 விஷயங்கள்:
அரசியல், பின் நவீனத்துவம், சில நேரம் சில விஷயங்கள் நடக்கும் போது இது அப்படியே ஏற்கெனவே நடந்தது போல் தோன்றுவது!!

5.உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்:
தொலைபேசி,பேனா,கணினி!

6. உங்களைச் சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்:
கிச்சுகிச்சு!அரசியல்வாதிகளின் பேச்சு,பசங்க அடிக்கிற லூட்டி!

7. தாங்கள் இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்:
செய்தப்புறம் சொல்றேனே! அதனாலே இந்தக் கேள்விக்குப் பாஸ்!!

8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்:
ஆசிரியர்களை ஊக்குவிக்க ஏதாவது எழுதணும்.
இரண்டு அனாதைக் குழந்தைகளையாவது தத்து எடுத்துப் படிக்க வைக்க வேண்டும்.
ஒரு கப்பல் பயணம்.


9. உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்:
அட! அதென்ன மூணு! நிறைய இருக்கு!

10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்:
பொறுமை,தியானம்,யோகா!!

11. பிடித்த 3 உணவு விஷயங்கள்:
நான் சமைக்காத எதுவும்!
யாராவது சமைச்ச எல்லாமும்!
அம்மா சமைக்கும் எல்லாமும்!


12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்:
No,முடியாது,நாளைக்கு!

13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்:
அய்யோ இது அப்பப்போ மாறிட்டேயிருக்குமே! மூட் ஸ்விங் மாதிரி!!

14. பிடித்த 3 படங்கள்:
மூணே மூணு படப் பேரெல்லாம் எப்பிடிச் சொல்றது? நிறைய பிடிக்குமே!

15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்:
ஹிஹிஹி! காற்று,நீர்,உணவு ஹிஹிஹி!

16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேரு:
யாரைக் கூப்பிட்டாலும் எழுதப் போறதில்லை! எதுக்கு வம்பு? எழுத ஆசைப்படுறவங்கல்லாம் எழுதுங்கப்பா!!

31 comments:

நிலாமகள் said...

10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்:
பொறுமை,தியானம்,யோகா!!//
:D பூங்கொத்து!

11. பிடித்த 3 உணவு விஷயங்கள்:
நான் சமைக்காத எதுவும்!
யாராவது சமைச்ச எல்லாமும்!
அம்மா சமைக்கும் எல்லாமும்!//
:-))

சாந்தி மாரியப்பன் said...

// உங்களைச் சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்:
கிச்சுகிச்சு!அரசியல்வாதிகளின் பேச்சு,பசங்க அடிக்கிற லூட்டி!//

இதுக்கு எனக்கும் சிரிப்பு வருது :-)))))

//இரவு நேர மொட்டைமாடியில் பாட்டு,
சாரலடிக்கும் மழை,
நீண்ட பயணம் !//

ரொம்ப ரசிச்சேன் :-)

குணசேகரன்... said...

அட நல்லாத்தான் இருக்குங்க

Lifewithspices said...

Good post..

இராஜராஜேஸ்வரி said...

nice post.

Priya said...

ரசித்து படித்தேன்...!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

நல்லா இருக்குங்க......

//சில நேரம் சில விஷயங்கள் நடக்கும் போது இது அப்படியே ஏற்கெனவே நடந்தது போல் தோன்றுவது!!

எனக்கும் அடிக்கடி இப்படித்தான் தோன்றுகிறது......ஒரே கொழப்பமா இருக்கே..ம்ம்ம்ம்ம்

மாய உலகம் said...

ஆஹா அந்த மொட்டை மாடி பாட்ட கேக்க முடியலையே........

மாய உலகம் said...

சிரிக்க வைக்கும் மூன்று... சிரிக்க வைத்தது

மாய உலகம் said...

அனைத்தும் எளிமையாகவும், யதார்த்தமாகவும் இருந்தது....அருமை

ஹேமா said...

டீச்சர்...அட அட அட பூங்கொத்துத்தான்.
நகைச்சுவையா வேணும்ன்னே சொன்ன மாதிரி இருக்கு !

ராமலக்ஷ்மி said...

// உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்:
அட! அதென்ன மூணு! நிறைய இருக்கு!//

அதுதானே:)! நல்ல பதில்(கள்)! என் பூங்கொத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள்!

Mahi_Granny said...

பூங்கொத்து . 11 , 12 க்கு கூடுதலாய் பூக்கள் சேர்த்து கொள்கிறேன்

குடந்தை அன்புமணி said...

அழகு... பதில்கள் அழகு...

pudugaithendral said...

பிடித்த உணவுல சேம்ப்ளட்டா பதில் சொல்லியிருக்கீங்க. :))

ஈரோடு கதிர் said...

நேர்த்தியான பதில்கள் :)

சத்ரியன் said...

//16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேரு:
யாரைக் கூப்பிட்டாலும் எழுதப் போறதில்லை! எதுக்கு வம்பு? எழுத ஆசைப்படுறவங்கல்லாம் எழுதுங்கப்பா!!//

அருணா,

ஐ லைக் இட்...ஐ லைக் இட்.

செ.சரவணக்குமார் said...

நல்ல பதில்கள் டீச்சர்.

மாய உலகம் said...

இன்று எனது வலைப்பதிவில்

நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.com

அன்புடன் அருணா said...

நிலாமகள்
அமைதிச்சாரல்
குணசேகரன்..
Kalpana Sareesh
இராஜராஜேஸ்வரி ஆய்வருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

Priya
தேவைகளற்றவனின் அடிமை
மாய உலகம் நன்றிங்கப்பா!!

ஷர்புதீன் said...

//இரண்டு அனாதைக் குழந்தைகளையாவது தத்து எடுத்துப் படிக்க வைக்க வேண்டும்//

porcess going on in my side for one child!!

அன்புடன் அருணா said...

ஹேமா
ராமலக்ஷ்மி
Mahi_Granny எல்லோர்கிட்டேயிருந்தும் பூங்கொத்து வாங்கிட்டேன்!

அன்புடன் அருணா said...

குடந்தை அன்புமணி
புதுகைத் தென்றல்
ஈரோடு கதிர்
சத்ரியன் அனைவருக்கும் ந்ன்றி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கமெண்ட்டா நோ முடியாது நாளைக்குன்னு சொல்லலாம்ன்னு பார்த்தா..உங்களுக்கு பிடிக்காதேன்னு ..பதிவை பாத்த இன்னிக்கே கமெண்ட் போட்டுட்டேன்..

Anonymous said...

கற்க விரும்பவை அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும்

அன்புடன் அருணா said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...
/ கமெண்ட்டா நோ முடியாது நாளைக்குன்னு சொல்லலாம்ன்னு பார்த்தா..உங்களுக்கு பிடிக்காதேன்னு ..பதிவை பாத்த இன்னிக்கே கமெண்ட் போட்டுட்டேன்../
Thats like a good girl Muthulakshmi!
நன்றி ஷீ-நிசி!
நன்றி செ.சரவணக்குமார் !
ஷர்புதீன் said...
//இரண்டு அனாதைக் குழந்தைகளையாவது தத்து எடுத்துப் படிக்க வைக்க வேண்டும்//
/porcess going on in my side for one child!!/
That's nice to hear Sharbudeen!

குடந்தை அன்புமணி said...

பதிவர்களுக்காக- பதிவரால்- பதிவர் தென்றல் மாத இதழ். மேலும் விவரங்களுக்கு என் வலைத்தளம் வருக...

மகேந்திரன் said...

ரசிக்கும் படியான மூன்று விஷயங்கள்.
அழகு

ரசிகன் said...

//இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்:
ஹிஹிஹி! காற்று,நீர்,உணவு ஹிஹிஹி!
//

இது சூப்பரு:)

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா