Click here to enlarge Picture
Hearty thanks for the picture...
சின்ன வயசுல கடவுள் நம்பிக்கை ஒருவித பயத்தோடவே இருந்தது.
அப்பிடி செய்யாதே... இப்பிடி செய்யக் கூடாது, சாமி தண்டிக்கும் இந்த வார்த்தைகளில் இருந்து நானும் தப்பிக்கவில்லை.
அப்புறம் என் ஷெல்ப் சுவரில் என் இஷ்ட தெய்வங்கள் அவ்வப்போது மாறுவதுண்டு.
மாற்றங்களுக்குப் பெரிய Strategy எதுவும் இருந்ததில்லை.
துணைவன் படம் பார்த்த மறுநாள் முருகன் படமும்,
திருமால் பெருமை பார்த்த பின் பெருமாள் படமும்,
சபரிமலை ஐயப்பன் பார்த்தபின் ஐயப்பன் படமும்,
ஜீஸஸ் பார்த்த பின் கர்த்தர் படமும்,
அன்னை வேளாங்கன்னி பார்த்த பின் வேளாங்கன்னியுமாக...
மாறிய படியே இருந்திருக்கிறது என் இஷ்ட தெய்வங்களின் வரிசை.
பின் சில காலங்களுக்கு சாமியிடம் வெரும் வியாபாரம் மட்டுமே நடத்தியிருக்கிறேன்.
80% மேல மார்க் தந்து விடு உனக்கு, ஒரு மாலை,
காணாமல் போன பேனாவைக் கண்டுபிடித்துக் கொடு, உனக்கு ஒரு ரூபாய்,
லேட்டா வீட்டுக்குப் போறதுக்கு அம்மா திட்டக் கூடாது, ஒரு விளக்கு.
இந்த ரேஞ்ச்லேதான் இருக்கும்.
இப்போ கொஞ்சம் மனது விரிந்து எண்ணங்கள் தெளிந்து கடவுள் உண்டு ...
அதற்கு கெட்டது செய்யவே தெரியாதுன்னும் நல்லது மட்டும்தான் செய்யும்னு தெளிவு வந்துருக்கு....
ரொம்ப எளிமையான வரிகளில் சொல்லணும்னா...
எனக்குக் கடவுள் உண்டு ஆனால் அதற்கு மதமும் பெயரும் கிடையாது! (இது என் நட்பின் பேட்டியிலிருந்து சுட்டது)
பின்னே நமக்கு நடக்கிற கெட்டதற்கெல்லாம் காரணம்...???
அட நாம் தாங்க!!!
அதுக்குப் போய் வீணாக் கடவுள் மேல பழியைப் போட்டுக்கிட்டு!!!!
நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-
அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதும் கவலையறச் செய்து -
மதி தன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
Saturday, June 28, 2008
Sunday, June 1, 2008
50-ஐ முடித்து 100-ஐ நோக்கி....போகும்போது..அடித்துக் கொள்ளும் சுய தம்பட்டமுங்கோ!!!
அரை சதம் அடிச்சாச்சுங்கோ!!!!!
இது Dreamzz- இடமிருந்து கற்றது...
மு.கு:1.இது எனது 50-வது பதிவுங்கோ...
மு.கு:2.அதனால் பிடிச்சுருந்தாலும்..பிடிக்காட்டாலும் குறைந்தது 50 பின்னூட்டமாவது வேணுங்கோ...
50-வது பதிவு சும்மா நச்சென்று இருக்க வேண்டும் என்று ரூம் போட்டு யோசிச்சதுதான் மிச்சம்....
ஒண்ணும் தேறலை...
சரி என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் இந்த ஐடியா வந்தது...
ரொம்ப நாளா எனக்குப் பிடித்த என் பதிவு பற்றி நானே ஒரு பதிவு போடணும்னு ஒரு ஆசை..
பின்னே நம்மளப் பத்தி யாரும் போடலைன்னா நாமளே போட்டுக்க வேண்டியதுதானே....
இந்த 50-வது பதிவைச் சாக்கு வைத்து இது ஒரு சுய தம்பட்டமுங்கோ.......
அது என்னன்னு தெரிலெங்க.
நான் என்னோட எழுத்துக்குப் பெரிய ரசிகைங்க....
எப்போ என் வலைப் பூவைத் திறந்தாலும் என் பழைய பதிவுகளில் ஒன்றிரண்டாவது மீண்டும் மீண்டும் படிப்பது வழக்கம்....
அதுலே எனக்குப் பிடித்தது "மூடிய புத்தக மயிலிறகாய்..."
அப்புறம் நான்தான் மழைப் பையித்தியம் ஆச்சே...அதனாலே மழை பற்றிய அத்தனையும் ரொம்பப் பிடிக்கும்.அதிலேயும் அந்த "மீண்டும் ஒரு மழை நாளில்...." ரொம்பப் பிடிக்கும்....
அப்ப்புறம் "என் வீட்டுக் கதை...."யின் கடைசிப் பகுதி என்னை ரொம்ப உணர்ச்சி வசப் படுத்துவது....
அப்புறம் நான் எழுதிய "ஒருநாள் ஆகிட்டொமில்லே..." சீரீஸ் எனக்குப் பிடிக்கும்.
நான் எழுதின பதிவுலேயே உபயோகமுள்ள இரு பதிவுகள் இவைதான்னு நினைக்கிறேன்..
1) "நிலாச் சாரலில் நான்...."
2) "நாங்க அழகிக்கு மாறிட்டோமில்லே!!!!"
இது அழகியை பத்திப் போட்ட உருப்படியா பதிவு...
ஆனால் எந்த விதமான வரவேற்பும இல்லை....
நாம எப்பவுமே இப்படித்தானே...!!!!
உபயோகமான விஷயங்களை உதறித்
தள்ளுவதுதானே நம் இயல்பு!!!
அப்புறம் அந்தப் "பறவைகளுக்கு ஒரு மின்னஞ்சல்..." கவிதை ரொம்ப உணர்ந்து எழுதுனது....
இதெல்லாம் விட "இன்றுமுதல் அன்புடன் அருணா..." ரொம்பப் பிடிக்கும் அதிகப் பின்னூட்டம் வந்ததனாலே..!!!
"எது இல்லை என்றாலும் அது வேண்டும் உனக்கும் எனக்கும்..." இந்தக் கவிதை நான் ஸ்கூல் படிக்கும் போது எழுதினது..எனக்கு ரொம்பப் பிடித்தது.
இந்த "மனமென்னும் மரம்..." படிச்சீங்களா?அது சும்மா என்ன எழுதுறதுன்னு யோசிச்சுட்டே எழுத ஆரம்பித்து முடித்தது....
இதெல்லாவற்றையும் விட நான் வலைப்பூ ஆரம்பித்த புதிதில் எழுதிய முதல் பதிவு..."நான் இறக்கப் போகிறேன்..." என் வலைப் பூவின் பெயருக்கு காரணம் சொல்லும் பதிவு அது.
நாம என்ன பெரிய சுஜாதாவோ, பாலகுமாரனோ இல்லையே?
சாதரண அருணாதானே?
ஏதோ எழுதுறதுனால என்னை நானே சந்தோஷப் படுத்துன திருப்தியும்...உங்களைக் கொஞ்சம் அறுத்த திருப்தியும்தான் மிச்சம்``````````````?
என்ன நான் சொல்றது???
பி.கு:1- மு.கு:2 -ஐ மீண்டும் படித்து அதன்படி செய்யவும்.
இது Dreamzz- இடமிருந்து கற்றது...
மு.கு:1.இது எனது 50-வது பதிவுங்கோ...
மு.கு:2.அதனால் பிடிச்சுருந்தாலும்..பிடிக்காட்டாலும் குறைந்தது 50 பின்னூட்டமாவது வேணுங்கோ...
50-வது பதிவு சும்மா நச்சென்று இருக்க வேண்டும் என்று ரூம் போட்டு யோசிச்சதுதான் மிச்சம்....
ஒண்ணும் தேறலை...
சரி என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் இந்த ஐடியா வந்தது...
ரொம்ப நாளா எனக்குப் பிடித்த என் பதிவு பற்றி நானே ஒரு பதிவு போடணும்னு ஒரு ஆசை..
பின்னே நம்மளப் பத்தி யாரும் போடலைன்னா நாமளே போட்டுக்க வேண்டியதுதானே....
இந்த 50-வது பதிவைச் சாக்கு வைத்து இது ஒரு சுய தம்பட்டமுங்கோ.......
அது என்னன்னு தெரிலெங்க.
நான் என்னோட எழுத்துக்குப் பெரிய ரசிகைங்க....
எப்போ என் வலைப் பூவைத் திறந்தாலும் என் பழைய பதிவுகளில் ஒன்றிரண்டாவது மீண்டும் மீண்டும் படிப்பது வழக்கம்....
அதுலே எனக்குப் பிடித்தது "மூடிய புத்தக மயிலிறகாய்..."
அப்புறம் நான்தான் மழைப் பையித்தியம் ஆச்சே...அதனாலே மழை பற்றிய அத்தனையும் ரொம்பப் பிடிக்கும்.அதிலேயும் அந்த "மீண்டும் ஒரு மழை நாளில்...." ரொம்பப் பிடிக்கும்....
அப்ப்புறம் "என் வீட்டுக் கதை...."யின் கடைசிப் பகுதி என்னை ரொம்ப உணர்ச்சி வசப் படுத்துவது....
அப்புறம் நான் எழுதிய "ஒருநாள் ஆகிட்டொமில்லே..." சீரீஸ் எனக்குப் பிடிக்கும்.
நான் எழுதின பதிவுலேயே உபயோகமுள்ள இரு பதிவுகள் இவைதான்னு நினைக்கிறேன்..
1) "நிலாச் சாரலில் நான்...."
2) "நாங்க அழகிக்கு மாறிட்டோமில்லே!!!!"
இது அழகியை பத்திப் போட்ட உருப்படியா பதிவு...
ஆனால் எந்த விதமான வரவேற்பும இல்லை....
நாம எப்பவுமே இப்படித்தானே...!!!!
உபயோகமான விஷயங்களை உதறித்
தள்ளுவதுதானே நம் இயல்பு!!!
அப்புறம் அந்தப் "பறவைகளுக்கு ஒரு மின்னஞ்சல்..." கவிதை ரொம்ப உணர்ந்து எழுதுனது....
இதெல்லாம் விட "இன்றுமுதல் அன்புடன் அருணா..." ரொம்பப் பிடிக்கும் அதிகப் பின்னூட்டம் வந்ததனாலே..!!!
"எது இல்லை என்றாலும் அது வேண்டும் உனக்கும் எனக்கும்..." இந்தக் கவிதை நான் ஸ்கூல் படிக்கும் போது எழுதினது..எனக்கு ரொம்பப் பிடித்தது.
இந்த "மனமென்னும் மரம்..." படிச்சீங்களா?அது சும்மா என்ன எழுதுறதுன்னு யோசிச்சுட்டே எழுத ஆரம்பித்து முடித்தது....
இதெல்லாவற்றையும் விட நான் வலைப்பூ ஆரம்பித்த புதிதில் எழுதிய முதல் பதிவு..."நான் இறக்கப் போகிறேன்..." என் வலைப் பூவின் பெயருக்கு காரணம் சொல்லும் பதிவு அது.
நாம என்ன பெரிய சுஜாதாவோ, பாலகுமாரனோ இல்லையே?
சாதரண அருணாதானே?
ஏதோ எழுதுறதுனால என்னை நானே சந்தோஷப் படுத்துன திருப்தியும்...உங்களைக் கொஞ்சம் அறுத்த திருப்தியும்தான் மிச்சம்``````````````?
என்ன நான் சொல்றது???
பி.கு:1- மு.கு:2 -ஐ மீண்டும் படித்து அதன்படி செய்யவும்.
Subscribe to:
Posts (Atom)