சூறாவளிச் சுற்றுப் பயணம் செய்தார்கள்....
பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்....போராட்டங்களைத் தொடங்கி வைத்தார்கள்......
உண்ணாவிரதங்களை முடித்து வைத்தார்கள்......
மைக் பிடித்து நிறைய முழங்கினார்கள்...........
காகிதங்கள் பல கையெழுத்திட்டார்கள்....
இதில் கேசம் சரியில்லை
இதில் ஒளி சரியில்லையென
புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு
வலைப் பூக்களில் வலையேற்றப்பட்டன...............
ஈழத்தமிழர்களின் தலையெழுத்தும்
சரியில்லைதான்............