இந்த ஒரு வாரமும் சும்மா கலகலன்னு போச்சு. வந்தவங்கல்லாம் திரும்பி வந்தாங்க, வராதவங்கல்லாம் விரும்பி வந்தாங்க. ஒரே நேரத்துலே ஆன்லைன்லே 20 பேர் முதல் தடவையா பார்த்துருக்கேன். எப்போ பார்த்தாலும் ஒரே ஜே ஜேன்னு இருந்தது...
சரி நாமளும் "ஒரு வாரத்துக்கு ஷ்டாராயிட்டோம்லே"ன்னு பெருமையா பதிவே போடலாம்.
இதே மாதிரியான பதிவாலேதான் என் வலைப்பூவுக்கு கொஞ்சம் கொஞ்சமா மக்கள் வர ஆரம்பிச்சாங்க! அதனோட மலரும் நினைவுகள்.
அன்னிக்கு ஒருநாள் ஜெயிலுக்குப் போனோமில்லே !
அன்னிக்கு ஒருநாள் எங்க வீட்டுக்கு முதலை வந்துச்சே!
அன்னிக்கு ஒருநாள் பூசாரியாகிட்டோமில்லே!
இந்த வரிசையிலே கதாநாயகி, திருடன், முட்டாள், வில்லி(வில்லன் பெண்பால்) இப்படி நிறைய எழுதிருக்கேன்!
என் கவிதையில் பிடித்தது
கை விரித்துச் சிரித்தது மரம்!
உணர்வு பூர்வமான இடுகையில்
என் வீட்டுக் கதையிது
நகைச்சுவையில்
அதுவா??இதுவா??
என் கதையில்
குலோப்ஜாமுனும், சாமியும், எறும்பும்
அன்பானாலும் சரி, காதலானாலும் சரி, நட்பானாலும் சரி, அறிவுரையானாலும் சரி, நல்லவைகள் அனைத்தும் விதைகள் போன்றவை. என்றாவது ஒருநாள் எங்காவது உயிர் கொண்டெழும். அதனால்!!....
விதை உறங்கும்
நிலங்களைத் தண்ணீர்
தெளித்துத் தட்டியெழுப்புங்கள்
உயிரைக் கட்டிக் காத்துக்
கொண்டிருக்கும் விதைகள்.
கைகள் நிறைய அள்ளுங்கள்
விதைகளை.....
கைக்கெட்டா தூரம்
வரை விசிறியடியுங்கள்
விதைகளை....
ஒரு பறவையின்
நோக்கத்தோடு
பறந்து பறந்து
விதை தூவுங்கள்...
எங்கேனும் அவை
தன் வேரை
ஊன்றிக் கொள்ளட்டும்.
மழை குடிக்கட்டும்.
காற்றைச் சுவாசிக்கட்டும்....
வெயிலை உடுத்தட்டும்.
என்றேனும் ஒருநாள்
யாருக்கேனும்
இலை உதிர்க்கட்டும்...
நிழல் கொடுக்கட்டும்.....
பழம் கொடுக்கட்டும்
பூக்கள் கொட்டட்டும்.
கொஞ்சமாய் உலகம்
துளிர்த்துக் கொள்ளட்டும்!!
வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கு நன்றி!
மீண்டும் சந்திப்போம்! வர்ட்டா???!!