பெரிய பெரிய பத்திரிக்கையிலெல்லாம் நம்ம எழுத்தை எங்கே போடுவாங்க? நாமே நம்ம வலைப்பூவிலெ எழுதிக்கவேண்டியதுதான்...இப்பிடியாக எழுத ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே சீனா அய்யா அவர்கள் வலைச்சரத்தின் ஆசிரியராக்கினார்...வலைச்சர ஆசிரியரா இருந்தப்போ எழுதியதைப் படிககணுமா??????......இங்கே போங்க....
அது போக ஒரு நாள் கதாநாயகி, முட்டாள்,வில்லி,எழுத்தாளர் ஆகிட்டோமில்லே அப்பிடீன்னு எழுதிய இந்த சீரீஸ் எனக்கு ரொம்பப் பிடித்தது...இதை மறுபடியும் படிக்கணுமா???? இங்கே போங்க.....இங்கே போங்க.. இங்கேயும் போங்க...
எனக்குத்தெரியாது நான் நட்சத்திரமா இல்லை வெறும் கண்ணாடிக்கல்லான்னு தெரியாது ........... இருந்தாலும் இந்த ஒருவாரம் கண்சிமிட்டுவதற்கும் மினுமினுக்கவும் மறுபடி ஒரு மலரும் நினைவுகளுக்கும் வாய்ப்பளித்த
திரட்டி.காம் நிர்வாகத்திற்கு நன்றி!!!
நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-
அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதும் கவலையறச் செய்து -
மதி தன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
Sunday, August 23, 2009
Thursday, August 13, 2009
புரியவில்லயே எங்கிருந்து ஆரம்பிப்பதென்று...????
வறுமைக்கும் பசிக்கும்,
என்ன சம்பந்தம் என
யோசிக்கக் கூட நேரமின்றி
ஈட்டலுக்கு ஓடிக் கொண்டிருக்கும்
மனித இயந்திரங்களாய்
நாங்கள்.....
சுதந்திரக் காடுகளில்
உலவ மட்டும் அனுமதிக்கப் பட்ட
சிங்கங்கள் நாங்கள்......
இந்தியா எதையெல்லாம் என்னிடம்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதென்று?
எனக்கே தெரியவில்லை....
உதிரம் சிந்தி வாங்கிய
சுதந்திரமெனப் புரிகிறது
என்ன வேண்டும் இந்தியா?
என் உதிரமா?
எடுத்துக் கொள்.......
உயிர் கொடுத்து வாங்கிய
சுதந்திரமெனப் புரிகிறது
என்ன வேண்டும் இந்தியா?
என் உயிரா?
எடுத்துக் கொள் ...........
யார் யாரின் உயர்வுக்கோ உதிரம் சிந்தி
உழைத்து மடியப் போகும்
உயிர்தானே?
உனக்காவது உதவட்டும்
எடுத்துக் கொள்
உயிரையும்.....
காதலர்தினம்,
நண்பர்கள் தினம்
அப்பாக்கள் தினம்,
அம்மாக்கள் தினம் போல
"சுதந்திரதினம்"
கொண்டாடுவதற்கு ஒருசாக்கு....
இனிப்பு வாங்க,வழங்க ஒரு சாக்கு
சிலருக்கு...........
எனக்கல்ல........
பொறுப்புகளும்
கடமையும்
கண்ணருகில் காவலிருக்கிறது....
இருந்தும் புரியவில்லையே இந்தியா...
உன் உதயத்திற்கு
எங்கிருந்து ஆரம்பிப்பதென்று...????
என்ன சம்பந்தம் என
யோசிக்கக் கூட நேரமின்றி
ஈட்டலுக்கு ஓடிக் கொண்டிருக்கும்
மனித இயந்திரங்களாய்
நாங்கள்.....
சுதந்திரக் காடுகளில்
உலவ மட்டும் அனுமதிக்கப் பட்ட
சிங்கங்கள் நாங்கள்......
இந்தியா எதையெல்லாம் என்னிடம்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதென்று?
எனக்கே தெரியவில்லை....
உதிரம் சிந்தி வாங்கிய
சுதந்திரமெனப் புரிகிறது
என்ன வேண்டும் இந்தியா?
என் உதிரமா?
எடுத்துக் கொள்.......
உயிர் கொடுத்து வாங்கிய
சுதந்திரமெனப் புரிகிறது
என்ன வேண்டும் இந்தியா?
என் உயிரா?
எடுத்துக் கொள் ...........
யார் யாரின் உயர்வுக்கோ உதிரம் சிந்தி
உழைத்து மடியப் போகும்
உயிர்தானே?
உனக்காவது உதவட்டும்
எடுத்துக் கொள்
உயிரையும்.....
காதலர்தினம்,
நண்பர்கள் தினம்
அப்பாக்கள் தினம்,
அம்மாக்கள் தினம் போல
"சுதந்திரதினம்"
கொண்டாடுவதற்கு ஒருசாக்கு....
இனிப்பு வாங்க,வழங்க ஒரு சாக்கு
சிலருக்கு...........
எனக்கல்ல........
பொறுப்புகளும்
கடமையும்
கண்ணருகில் காவலிருக்கிறது....
இருந்தும் புரியவில்லையே இந்தியா...
உன் உதயத்திற்கு
எங்கிருந்து ஆரம்பிப்பதென்று...????
Labels:
இந்தியா
Wednesday, August 5, 2009
விருதுகள் வாஆஆஆஆஆஆஆஆஆரம்!!!!
இந்த விருதை எனக்குக் கொடுத்தது இயற்கை, ஞானசேகரன்
ஆறு பேருக்கு கொடுக்கணுமாமே!!!... வெறும் ஆறு பேருக்கு மட்டுமா? அதுக்கப்புறம் நடக்குற சண்டையை எப்படி சமாளிக்க???
இந்த விருதை எனக்குக் கொடுத்தது முரளி குமார் பத்மநாபன்.... ஆறு பேருக்குக் கொடுக்கணுமாமே!..............நிறைய சுவாரஸ்யமான பதிவர்கள் இருக்காங்களேப்பா!!! இப்போ என்னா பண்றது?
இந்த விருதை எனக்குக் கொடுத்தது ஸ்ரீவட்ஸ் இதையும் குறைந்தது ஏழு பேருக்குக் கொடுக்கணுமாமே!!!
விருது கொடுத்தவங்களுக்கு நன்றி!!! நன்றி!! நன்றி!!
நான் கொஞ்சம் லேட் போல! நான் கொடுக்கணும்னு நினைச்சவங்க எல்லோரும் ஏற்கெனவே போர்ட் மாட்டி வச்சிருக்காங்க!........இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்..................என்னைக் கவர்ந்த பதிவர்களை கீழே கொடுத்திடறேன்.....நீங்களே தொகுதியைச் சண்டையில்லாமல் பிரிச்சு எடுத்துக்கோங்க!!! சரிதானே!!!
அந்தோணி முத்து -----சஹாராதென்றல்
காமராஜ் ------------ அமித்து அம்மா
சந்தனமுல்லை ----------- தமிழ்நெஞ்சம்
கார்த்தின் ------------ ராகவேந்திரன்.டி
நிலாரசிகன் ------------ஜெஸ்வந்தி
புதுகைத் தென்றல் -------பிரியமுடன் வசந்த்
கௌரிப் பிரியா -------------சஞ்செய் காந்தி
ராமலக்ஷ்மி --------------பாசமலர்
ராஜேஸ்வரி --------------பாசகி
Labels:
விருது
Monday, August 3, 2009
ஒற்றைச் செருப்புடன் ஒரு பயணம்.......
அதிகாலையில்
நெடுஞ்சாலையில்
ஒரு குட்டி ஒற்றைச் செருப்பும்
சில துளி ரத்தமும்..................
தனியே ஓடிச் சிக்கியிருக்குமோ?
அம்மாவுடன் வரும் போதா???
சைக்கிளில் சிக்கியதா?
பைக்கில் சிக்கியதா??
நடந்தது இதுதான்
என மூளை சொன்னாலும்
நடந்தது அதுவாக
இருக்கக்கூடாதென
மனம் கெஞ்சியது
பயணம் முழுவதும்
தினம் கூடவரும்
ஜன்னலோரச் சிலிர்க்
காற்றையும்
மழைச் சாரலையும்
தவிர்த்து........
அன்று
அந்தக் குட்டி
ஒற்றைச் செருப்பு
கூடவே பயணித்தது.....
Subscribe to:
Posts (Atom)


