
தமிழ்மண விருதுகள் பதிவுக்கு அனுப்பி விட்டு மறந்தேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ போய்விட்டேன்.......நமக்குத் தெரியாதா நம்ம திறமையைப் பற்றின்னு....அட இன்னிக்கு ஸ்கூலில் இருந்து வந்தவுடன் பார்த்தா நம்ம அமிர்தவர்ஷிணி அம்மாகிட்டே இருந்து ஒரு பின்னூட்டம்....தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்னு....அட.....நமக்கு விருதா? அதுவும் தமிழ்மணத்திலான்னு...சந்தோஷ உற்சாகத்தோடு தேடோ தேடுன்னு தேடினால் ....ஒண்ணையும் காணோம்......அட அப்புறம் பார்த்தாம் நம்ம ஓவியப் பதிவுக்குப் பத்தாவது இடம் கிடைச்சுருக்கு......உடனே நம்ம தோழர் சமுதாயத்துக்குத் தொலைபேசித் தெரிவித்தால்.....மொத்தம் பத்து பேர்தான் அனுப்பியிருப்பாங்கன்னு நிதானமா சொல்றாங்கப்பா...என்னவோ....பத்தாவதிலாவது வந்திருக்கேன்னு நானே எப்பவும் சொல்றாப்புலே வெரி குட் அருணான்னு எனக்கு நானே முதுகில் தட்டிக் கொண்டேன்....ம்ம்ம்ம்.......வேறென்ன பண்ணச் சொல்றீங்க??
அந்த ஓவியம் இங்கே........