
அந்தப் போலீஸ் ஜீப்பில் ஒரே இட நெருக்கடி...பின்னே என்ன?ஆறு பேர் உட்கார்ந்து போற இடத்திலே பன்னிரண்டு பேரை அடைச்சு வச்சா எப்பிடி?? ஆனாலும் ஒரே அமர்க்களம்தான் போங்க....வேற யாரு நாங்கதான்...??ஜெயிலுக்குப் போறமேன்னு கொஞ்சம் கூடக் கவலைப் படாமல்..அத்தனை பேரும் பல்லைக் காட்டிக் கொண்டு இருந்தோம்!...அட நீங்க வேற!! ஒரு இன்டர் காலேஜ் போட்டிக்காக எங்க கல்லூரி நிர்வாகம் பாதுகாப்புக் கருதி ஏற்பாடு பண்ணின வண்டிதான் இந்த போலீஸ் ஜீப்!!நல்ல வேளை நாய் வண்டி வரல்லையேன்னு கொஞ்சம் ரொம்பவே சந்தோஷப் பட்டோம்....
போற வழிலெ கொஞ்சம் பின் அது இதுன்னு வாங்க வேண்டி இருந்ததால் இடையில் வண்டியை நிறுத்தி ரெண்டு பேர் மட்டும் இறங்கிப் போக நாங்க எல்லொரும் வண்டியிலேயே இருந்தோம்...கல்லூரிப் பெண்கள் போலீஸ் ஜீப்பில் காம்பினேஷன் கொஞ்சம் வினோதமாக இருந்ததனால் ஒரே கூட்டம் கூடிருச்சு...
அதிலே ஒரு பெரிசு என்னைப் பார்த்து "என்னம்மா என்ன ஆச்சு?" அப்பிடின்னு ரொம்ப சீரியஸாக் கேக்க நானும் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு
"பரீட்சையில் காப்பி அடித்தோம் தாத்தா இதுக்குப் போய் ஜெயில்ல போடப் போறாங்க "என்றேன்.பெரிசு விடாமல்"எந்தப் போலீஸ் ஸ்டேஷன்?"என்றது...
வாய்க்கு வந்தபடி "சிதம்பர நகர் போலீஸ் ஸ்டேஷன்"என்று அழுற மாதிரி சொன்னேன்...அதிசயம் என்னன்னா....கூட இருந்ததுக அத்தனையும் சிரிக்காமல் இருந்ததுதான்....
அப்புறம் ? எனக்கெப்பிடிங்க தெரியும்?அந்தப் பெரிசுக்கு எங்க அப்பாவைத்
தெரியும்னு? அது போய் எங்க அப்பாகிட்ட ஊதின சங்குலெ என் சொந்தக்காரங்க எல்லாம்
" சித்தி வந்திருக்காக.......
சித்தப்பு வந்திருக்காக...மாமா வந்துருக்காக.......
அத்தை வந்துருக்காக....பெரியப்பா வந்திருக்காக......
பெரியம்மா வந்திருக்காக.......
அம்மா மின்னல் அருணா நீ எப்பம்மா வருவேன்னு கவலையான முகத்தோட உட்கார்ந்திருந்தாங்க....வேறென்ன நான் ஜெயிலுக்குப் போனதைக்
கொண்டாடத்தான்.....இது ஒண்ணும் தெரியாமல் போட்டியிலே ஜெயிச்ச சந்தோஷத்துலே அதே சனி பிடித்த போலீஸ் ஜீப்பிலே வந்திறங்கியதைப் பார்த்த அம்மா முந்தானையில் முகத்தை மூடிக் கொண்டு ஓ வென்று அலறியழ...ம்ம்ம்ம் அதுக்கப்புறம்........
நடந்த முதுகிலே டின் கட்டற விழா பற்றியெல்லாம் எழுதணும்னா இன்னொரு பதிவாதாங்க போட முடியும்...என்னங்க ஜெயிலுக்குப் போறேன்னு சொல்றதிலே இவ்வளோ வில்லங்கமா?...
ஆனால் அன்றொரு நாள் நான் ஜெயிலுக்குப் போகலையே!!!