நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, November 23, 2012

மழையே நலமா?


ஜன்னல் கம்பிகள் குளித்து நாளாச்சு!
குருவி ஈரஇறகில் சிடுக்கெடுக்க மறந்தாயிற்று
உன்னைச் சுமந்த குடைகள் மூலையில் முடங்கிக் கிடக்கிறது...
கை விரித்துக் குளிக்கும் மரம் கடுப்பாகிக் கொண்டிருக்கிறது..

உன்னை ஏந்த நீட்டிய கரங்கள் காலியாக.....
உன்னுடன் குடிக்கும் தேனீர் நேரங்கள் ரத்து செய்யப்பட்டன...
நீ விழுந்து பரப்பும் மண்வாசனை மறந்தது மண்....
உன் சொட்டு பட்டுத் தெறிக்காத முற்றம்  

கன்னத்தில் ஒன்றும் கைவிரலில் ஒன்றுமாக
ஒற்றைத்துளியாவது கொட்டிப்போ மழையே...
நான் நலமே என்று ஒரு வரி சொல்லிப்போ மழையே....
அது போதும் எனக்குக் கொஞ்சம் கவிதையெழுத....